நம் காலத்துக் கவிதை

நம் காலத்துக் கவிதை, (நவீன கவிதை குறித்த கட்டுரைகள்), விக்ரமாதித்யன், படைப்புப் பதிப்பகம், விலை: ரூ.150 . கவிதை எழுதுபவர்கள் அதிகரித்திருக்கும் தற்காலத்தில் கவிதை விமர்சகர்கள் அருகிவருகிறார்கள். எனினும், பல்லாண்டுகளாகக் கவிதை எழுதுவதுடன் கவிதை விமர்சனங்களும் எழுதிவருபவர் கவிஞர் விக்ரமாதித்யன். முன்னோடிகள், தன் சம வயது கவிகள் பற்றி எழுதுவதுடன் இளம் கவிகளைப் பற்றியும் தொடர்ந்து ஆதுரத்துடன் எழுதிவருகிறார். அவரது கவிதை விமர்சன நூல்களின் வரிசையில் தற்போது இந்நூல் வெளியாகியிருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன் தொடங்கி தற்காலக் கவிஞர்கள் பிரான்ஸிஸ் கிருபா, அ.வெண்ணிலா இன்னும் இளைய கவிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார். […]

Read more

ஆலயம் கடந்த ஆன்மிகம்

ஆலயம் கடந்த ஆன்மிகம், ஜாநி சிவம், ஜனனி நூல் நிலையம், விலை 200ரூ. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கே அவசியம் இல்லாமல், இல்லை என்பதுதான் கடவுளே என்ற ஆன்மிக உச்சத்தை எளிய விளக்கங்களுடன் சொல்லும் நூல். பார்க்கும் இடமெல்லாம் பகவானையே பார்க்கும் வகையில் பக்குவப்படுத்தும் முயற்சி. அதை முழுமையாகச் செய்திருக்கிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிரமபுரம் மேவிய பெம்மான்

பிரமபுரம் மேவிய பெம்மான், ஆசிரியர் : அன்பு ஜெயா, வெளியீடு: காந்தளகம். ஈழத் தாயகத்தில் பிறந்த அன்பு ஜெயா, மருந்தியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று, மருந்து தயாரிப்பு நிறுவன உயர் பொறுப்புகளில், 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர், முதல்வர், மக்கள் தொடர்பு அலுவலர் போன்ற பொறுப்புகளில் நற்பணியாற்றியவர். தமிழ்ப் புலமை மிக்க பன்னுால் ஆசிரியர். ஆஸ்திரேலியா கம்பன் கழகம் வழங்கிய தமிழ்ச்சான்றோர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். பிரமபுரம் சீகாழித் தலத்தையும், பெம்மான் சிவனையும் குறித்த சொற்கள் […]

Read more

கம்பர் சில கண்ணோட்டம்

கம்பர் சில கண்ணோட்டம், சு.அட்சயா, காவ்யா, பக்.167, விலை ரூ.170. கம்பனை வித்தியாசமான கோணங்களில் இந்நூல் அணுகுகிறது. கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள இசைக் கருவிகளைப் பற்றிய விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரை, தற்கால உளவியலில் நினைவின் வகைகளாகக் கூறப்படும் நினைவின் பகுதியை மனத்திருத்தல், மீட்டுக் கொணர்தல் அல்லது மீட்டறிதல் ஆகிய கோட்பாடுகள் கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருப்பதைக் கூறும் கம்பரின் உளவியல் சிந்தனைகள் கட்டுரை நம்மை வியக்க வைக்கின்றன. கம்பராமாயணத்தில் கூறப்படும் நீர்வளம், நெல் வளம், மன்னரின் நல்லாட்சி, மக்களின் இன்ப வாழ்வு, மாதர்களின் மாண்பு ஆகியவற்றைப் பற்றிய […]

Read more

தேன்துளிகள்

தேன்துளிகள், ச.நடராஜன், தில்லை பதிப்பகம், விலை 120ரூ. ஔவை, கம்பன், உ.வே.சா., திரு.வி.க. என்று அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த எண்ணற்றோரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு. பருகத் திகட்டாத தமிழ்த் தேன் துளிகளாக ஒவ்வொரு பக்கமும் புரட்டப் புரட்ட இனிக்கிறது. முழுமையாகத் தமிழ் மனதை நிறைக்கிறது. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம், தேவகாந்தன், வடலி வெளியீடு, பக்.232, விலை ரூ.230. இன்று நடப்பவை நேற்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்கின்றன. ஈழத்தில் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதும் அதற்கு விதிவிலக்கல்ல.கி.பி.1800-க்கு முன்பு யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் டச்சுப் படையினர் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், அந்தப் படைவீரர்களை தமிழ் மக்கள் கொன்றழித்ததும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு இடையில் இருந்த சாதி மோதல்கள் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. அது தாழ்ந்த சாதிப் பிரிவினர் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது. […]

Read more

திருவள்ளுவர் 2050 ஆண்டுகள்… அடைவுகள்

திருவள்ளுவர் 2050 ஆண்டுகள்… அடைவுகள், நூல் உருவாக்கக் குழு பொறுப்பாளர், பொழிலன், பாவலரேறு தமிழ்க்களம், பக்.984, விலை ரூ.900. திருக்குறள் தொடர்பான 2050 காலச் செயல்பாடுகளை இந்நூல் தொகுத்து வழங்கியிருக்கிறது. திருக்குறள் தோன்றிய காலத்தை ஆராயும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. திருவள்ளுரின் அறம், அரசியல், அவர் காட்டும் தமிழர் வாழ்வியல், வள்ளுவரின் கடவுள் சிந்தனை ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் கட்டுரைகள், திருக்குறள் சமணம் சார்ந்ததா? புத்த மதம் சார்ந்ததா என ஆராயும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் வைதீகக் கருத்துகள், சைவ சித்தாந்த கருத்துகள், […]

Read more

கற்கோயிலும் சொற்கோயிலும்

கற்கோயிலும் சொற்கோயிலும், மா.கி.இரமணன், பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ. ஆசிரியர் மா.கி.இரமணன், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் என்று மிளிர்பவர். ஆம். அதற்கு அவர் எழுதிய கவிதையே சான்று. வாழ்வதற்குப் பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற வரிகள், ஆழ்ந்த சிந்தனையைத் துாண்டும். உண்மையான பூங்கொடி மணக்கத்தானே செய்யும் நுாலின் பெயரே, முதல் கட்டுரையின் தலைப்பாக உள்ளது. ஐந்தெழுத்தை நெஞ்சழுத்தி எழுதிய அனைத்துக் கட்டுரைகளும், கன்னித் தமிழின் களி நடனம், சிந்தனை ஊற்றின் சிகரம் எனலாம். இந்தக் கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் […]

Read more

மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன், ஜெய்சூர்ய குமாரி, சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 250ரூ. சுதந்திர சுவாசம் நிறைந்த இன்றைய நாளில் இருபது வயது இளைஞர்கள் சமூக வலைத்தள வீரர்களாக ஒளிந்தபடி ஒளிப்பதிவுகள் செய்துகொண்டிருக்க, பதினெட்டாம் நுாற்றாண்டில் அதே இளம் வயதில் ஒரு ஒப்பற்ற மாவீரனாக விளங்கிய நெப்போலியனின் நிகரற்ற வரலாறே இந்நுால்! இத்தாலியைப் பூர்விகமாகக் கொண்ட நெப்போலியன் குடும்பம் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்ட கார்சிகா தீவுக்கு குடிபெயர்ந்த காலகட்டத்தில், பிரெஞ்சுக்காரர்க்கும் ஒற்றுமையற்ற கார்சிகா தீவினர்க்கும் இடையே கடும் போராட்டம் நிலவிய சூழல்களும், தொடர்ந்த பிரெஞ்சுப் புரட்சிக் […]

Read more

உயிர் வளர்க்கும் திருமந்திரம்

உயிர் வளர்க்கும் திருமந்திரம், கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 180ரூ. திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப் பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதிவரும் கட்டுரைகளின் முதல் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து,  21/9/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 182 183 184 185 186 505