பரீட்சைக்குப் பயமேன்

பரீட்சைக்குப் பயமேன், நரேந்திர மோடி, தமிழாக்கம் வெ.இன்சுவை, அல்லயன்ஸ், விலை 150ரூ. தேர்வு என்னும் பண்டிகையில் பங்கேற்கும் வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன், ‘மன்கீபாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் அளித்த சிறந்த விஷயங்களின் தொகுப்பாகும். மாணவ – மாணவியருடன் நேரிடையாக உரையாடும் வகையில் அமைந்த இக்கருத்துக்கள், 25 தலைப்புகளில், அதுவும், ‘மந்திரம்’ என்ற வகையில் தரப் பட்டிருக்கிறது. எப்போது பார்த்தாலும் படிப்பதை சற்று நிறுத்தி, ஓய்வுக்கு பின் படிக்கலாம் என்பது அதில் ஒன்று. உலகம் முழுவதும், ‘யோகா’ பரப்பிய பிரதமர் என்பதால், […]

Read more

ராமாநுஜர்

ராமாநுஜர், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 160ரூ. ராமானுஜரின் எண்ணங்கள் சம காலச் சிந்தனைக்கு மிகவும் பொருந்தி வரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது இந்நாடகம். வைணவ நெறியைப் பாமரரும் அறியும் வண்ணம் அச்சமயத்தின்பால் மக்களைத் திருப்பியதில் ராமானுஜரின் பங்கு குறிப்பிடத்தக்து. அவர் வாழ்ந்த காலத்தில் அவரது அணுகுமுறை ஏழை எளியவரையும் சென்றடைந்தது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்நாடகம், இரண்டாவது பதிப்பாக வந்தாலும், இந்திரா பார்த்தசாரதியின் நாடக ஆக்கம், படிக்கத் துாண்டும் விதத்திலும், ராமானுஜரின் பணியைப் போற்றும் […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு, சங்க காலத்தில் தமிழக மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. தமிழ் மொழியும் தமிழ் நூல்களும் எந்த முறையில் சிறப்புப் பெற்று வளர்ந்தன என்பவை போன்றவற்றின் அரிய தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. தமிழகத்தின் முற்கால, இடைக்கால, மற்றும் பிற்கால நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் ஆகியவற்றுடன் தற்கால புலவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்று இருக்கின்றன. தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழி ஆய்வு […]

Read more

தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள்

தமிழ்த்திரை தந்த நகைச்சுவை நட்சத்திரங்கள், முத்து ரத்தினம், சரண் பதிப்பகம், விலை 90ரூ. தங்கள் நகைச்சுவை திறன் மூலம் அடுத்தவரை மகிழ்விப்போருக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் உண்டு. திரைத்துறையில் சாதித்த பல நகைச்சுவை கலைஞர்கள் கதாநாயகன் நாயகிக்கு இணையான புகழ் பெற்று விளங்கி உள்ளனர். அந்த வகையில் அந்றைய என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய சந்தானம் வரை தமிழ் திரையுலகில் சாதித்த காமெடி நடிகர் நடிகைகளை பற்றிய நூல் இது. இன்றைய தலைமுறை அதிகம் அறியாத பழங்கால நகைச்சுவை நாயகர்கள் பற்றிய தகவல்கள் நூலுக்கு […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ்.நாராயணன், யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், விலை 120ரூ. நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் என்றால், அதன் பெருமைக்குரிய அம்சமாக விளங்குவது நஞ்சில்லா வேளாண்மை, உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்காத அந்த இயற்கை விவசாயம் குறித்து பாடம் எடுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது இந்த நூல். விவசாயத்தில் விஷம் நுழையும் விதத்தை விளக்கி இருக்கிறார் ஆசிரியர். அதற்கான மாற்று வழிகளையும் எடுத்துரைத்து இருக்கிறார். மாடித்தோட்டம் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் தனது அனுபவங்களை அவர் விளக்கி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி: […]

Read more

சிவபூமியாம் இலங்கை

சிவபூமியாம் இலங்கை, மேருபுத்திரி, டாக்டர் மயூரநாதன் வெளியீடு, பக். 136. திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருகோணமலை, திருக்கேதீசுரம் ஈழ நாட்டு சிவத்தலங்கள். சைவ பக்தி மிக்க யாழ்ப்பாணத் தீவுக்கு அருகில் உள்ள, காரைத் தீபத்தில் வாழ்ந்து சமாதி அடைந்தவர் சுவாமி முருகேசப் பெருமாள். இவர் தன் அருள் ஆற்றலால் பல அற்புதங்கள் செய்து காட்டியவர். பலருக்கும் ஞான வழிகாட்டிய மகான். இவரது ஆசிரமத்தில் வாழும் பெண் அடியார்களுள் தலைசிறந்த தவச் செல்வி மேருபுத்திரி. இவர் இயற்றிய தெய்வப் பாடல்களைக் கொண்டது இந்நுால். இவரது பாடல்களில் […]

Read more

ஊடகவியல்

ஊடகவியல், துரை. மணிகண்டன், கமலினி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை அறிவதற்கும், அதற்கேற்ப செயல்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவும், பிறருடன் கலந்துரையாடவும், இவ்வாறு பலவகையிலும் நமக்கு உதவுவது ஊடகங்களாகும், இதைப் பற்றிய விரிவான தகவல்களை நமக்கு இந்நுால் எடுத்துரைக்கிறது. இந்நுாலில், ஊடகம் குறித்த விளக்கங்களும் சிறப்பாக உள்ளன. வானொலி குறித்தும், தொலைக்காட்சி குறித்தும் அடுத்த பகுதி விரிவாக விவரிக்கிறது. கணினி, இணையம் குறித்த தகவல்களை நான்காம் பகுதி விளக்குகிறது. இதில் இணைய இதழ்கள், அலைபேசி, குறுஞ்செயலி எனப் பல […]

Read more

ஈரோடு மாவட்ட வரலாறு

ஈரோடு மாவட்ட வரலாறு, புலவர் செ. இராசு, வேலா வெளியீட்டகம், பக். 254, விலை 200ரூ. பத்தொன்பதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில் கோவை மாவட்டத்துக்கு உட்பட கிராமமாக இருந்த ஈரோடு, 1979ல் மாவட்ட நிலைக்கு உயர்ந்தது. தமிழகத்தின் சிறு பிரிவுகளில் ஒன்றாக விளங்கியது கொங்கு நாடு. இந்த கொங்கு நாட்டை நான்கு திசைகளின் அடிப்படையில் நான்கு பிரிவாகப் பிரித்திருந்தனர். அவற்றில் தெற்குக் கொங்குப் பகுதியையும் வடக்குக் கொங்குப் பகுதியையும் உள்ளடக்கியது இந்த ஈரோடு மாவட்டம். பெருங்கற்காலம் துவங்கி ஈரோட்டுப் பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குக் கொடுமணல் […]

Read more

மணல் வெளியில் சில மயிலிறகுகள்

மணல் வெளியில் சில மயிலிறகுகள், தியாரூ, ஜே,பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 200ரூ. எல்லா காலக்கட்டத்திலும் மனித சமூகத்தில் தன்னம்பிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக கருதப்பட்டு நுால்கள் படைக்கப்பட்டு வருகின்றன. புறவெளியில் இருந்து நுால்கள் மற்றும் படிப்பை மூலமாகத் தன்னம்பிக்கைச் சாதனங்களைத் தேடும்படியான சூழல் நிலவுகிறது. தன்னெழுச்சிக்காக பல்வேறு படைப்பாளர்கள் பொன்மொழித் தொகுப்புகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஏராளமாக எழுதி விட்டனர். இன்றளவிலும் எல்லாருக்குமே பிறருக்குச் சொல்வதற்கென்று பல்வகை அனுபவங்களோ, செய்திகளோ நாளும் ஊற்றெடுக்கின்றன. எழுத்தாளர்கள் அவற்றை பிறருக்காக நுால்களாக்கி வெளியிடுகின்றனர். பத்திரிகையில் தொடராக […]

Read more

தாய்

தாய், மாக்சிம் கார்க்கி, தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 350ரூ. இருநுாறு முறைக்கு மேல் மறு பதிப்பும், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான மாக்சீம் கார்க்கியின், ‘தாய்’ உலகின் மிகச் சிறந்த செல்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஷ்யக் கலைஞன் கார்க்கி. ரஷ்ய இலக்கியத்தின் ‘பொற்கால’த்தின் கடைசிப் பிரதிநிதி கார்க்கி. ‘அலக்வி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்’ என்னும் பெயர் பூண்ட கார்க்கி பிறந்தது, 1869ல்; இறந்தது, 1936ல். கார்க்கியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1892 முதல், […]

Read more
1 250 251 252 253 254 505