நூலிலிருந்து… – நாகா

நூலிலிருந்து… – நாகா, ஸ்ருதி பதிப்பகம், பக்.288, விலை 200ரூ. நூல்களுடன் நட்புக் கொண்டு அவற்றுடன் நீண்டகாலமாக பழகிவரும் நாகா என்ற நாகசந்திரன், தனது அனுபவங்களையும், தான் படித்த நூல்களையும் பற்றியும், தன்னைக் கவர்ந்த ஆளுமைகள் குறித்தும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டவற்றின் தொகுப்புதான் இந்நூல். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டவுடன் களமிறங்கி போக்குவரத்தைச் சீர்படுத்திய தொழிலதிபரைச் சந்தித்த அனுபவம், விபத்தில் சிக்கியவர்களை உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது, சிக்னல் நெரிசலில் தானம் செய்வதைப் பற்றிய நூலாசிரியரின் கருத்து, அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று சாலை விதிகளை […]

Read more

வானமே எல்லை

வானமே எல்லை, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 170ரூ. விறுவிறுப்பான நடையில் வாழ்க்கைச் சம்பவங்களை சுவை குன்றாமல் தரும் இந்நுாலாசிரியர், தம் வாழ்க்கை அனுபவங்களைச் சிறு சிறு துணுக்குகளாக, சிறு குறிப்புகளாகப் படைத்து அளித்துள்ளார். எதையும், மெல்லிய நகைச்சுவையோடு சொல்லக்கூடிய இந்த எழுத்தாளரின் சிந்தனை, பல கோணங்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கோள்களாகப் பயன்படும் விதத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கருத்தை உணர்த்திச் செல்வது, நம் சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது. ‘காதலைச் சொல்லத் தான் வார்த்தை தேவை: அதைத் துய்க்க மவுனம் போதும்; […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக்.136, விலை 110ரூ. மகாகவி பாரதிக்குப் பின், கடலில் மூழ்கி முத்தெடுத்த கவியரசரின் பாடல்களில், என்றென்றும் மக்களின் நெஞ்சத்தை விட்டு அகலாத கவித்துவத்தின் சிறப்பைச் சொல்கிறார், நுாலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, ஒருநாள் இரவு பகல்போல் நிலவு, தெய்வம் தந்த வீடு, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, மயக்கமா? கலக்கமா? பரமசிவன் கழுத்திலிருந்து, வசந்தகால நதிகளிலே, நீரோடும் வைகையிலே’ உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், காலத்தால் அழியாத கருத்தாழம் மிக்க பொக்கிஷம் என […]

Read more

கண்ணன் கதை

கண்ணன் கதை, ருக்மணிசேஷசாயி, சாயி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. நவீன மொபைல் போன் மற்றும் கணினியில் மூழ்கி கிடக்கும் நம் குழந்தைகள், நம் நாட்டு இதிகாசங்களின் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அதிலும், மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், மனிதன் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை, ‘பகவத் கீதை’ என்ற பாடமாக நமக்கு தந்தவர் கிருஷ்ணர். இந்த நுாலில் இடம்பெறும் கிருஷ்ணரின் அவதாரத்தின் இளம் பருவ வரலாற்றை, சிறுவர்கள் […]

Read more

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்

இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு வேணுகோபால், வானதி பதிப்பகம்,வானதி பதிப்பகம், பக. 80, விலை 50ரூ. நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும், வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது. நன்றி: தினமலர்,2/12/18.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை ராசபாண்டியன், முக்கடல், பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை வளர்த்தால் […]

Read more

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள், மா.அமரேசன், அறம் பதிப்பகம், விலை 200ரூ. பிரபல இசையமைப்பாளர் இளைய ராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களில் புத்த சமயக்கோட்பாடுகள் பிரதி பலிக்கின்றன என்பதை தனது ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் மா.அமரேசன். இதற்கு இளைய ராஜாவின் பூர்வ பவுத்த இசைக் கூறுகளே காரணம் என்றும் விவரிக்கிறார். ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுக்களே, என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் உள்ளிட்ட 8 பாடல்களை ஆசிரியர் விரிவான முறையில் ஒப்பீடும் செய்துள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

யூஏஏ எனும் ஆலமரம்

யூஏஏ எனும் ஆலமரம், டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. நாடக திலகம் ஒய்.ஜி.மகேந்திரனின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் நாடக குழுவினர் பற்றியும், அவர்கள் அரங்கேற்றி உள்ள நாடகங்கள் பற்றியும் பல்வேறு அரிய தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாடக ஆர்வலர்கள் ஒவ்வொருவரையும் படிக்க தூண்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, தமிழில் மொழி பெயர்த்தவர் பி.உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. ஒரே நூலில் மனிதனின் மாபெரும் தூண்டுகோல் கருவூலத்தின் உன்னதமானவற்றை இது தருகிறது. இன்றையத் தேவைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள, கடந்த கால, நிகழ்கால, எல்லா காலத்திலும் பயன்தரும் சிந்தனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இந்நூலில் காணலாம். ஆசிரியர் இந்நூலை தமிழில் சுவைபட மொழி பெயர்த்துள்ளார். அரிஸ்டாடில் முதல் எமர்சன் வரை, பிளாட்டோ முதல் வில்லியம் ஜேம்ஸ் வரை பலரது மிகச் சிறந்த எண்ணங்கள், தத்துவங்களின் சாரம், நம்மைத் தூண்டி விடவே […]

Read more
1 249 250 251 252 253 505