மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 1000ரூ. மேலை நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்து சேர்ந்த ஒரு புதிய இலக்கிய வகை, ‘நடைச்சித்திரம்’ ஆகும். இது வாழ்க்கை வரலாறு அன்று. படைப்பாளியின் மனத்தில் பதிந்த ஒருவரின் ஆளுமைப் பண்புகளை தனக்குரிய வகையில் எடுத்துச் கூறுவது ஆகும். அந்த வகையில் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ்ச்சான்றோர்கள், சினிமா நடிகர்கள் என 100 பேரைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலை எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் […]

Read more

தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள்

தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள், கே.சாய்குமார், விலை 140ரூ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 300 சைவ, வைணவ தலங்களுக்கான வழிகாட்டியாக அமைகிறது இந்நூல். தலத்தின் பெயர், தலத்துக்கு செல்லும் வழி, தலக்குறிப்பு, சாமி அம்பாள் பெயர், நடை திறக்கும், அடைக்கும் நேரம் மற்றும் ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை எளிய நடையில் அட்டவணைப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அது மட்டும் இன்றி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள தலங்களில் நீராடி வழிபடுவதால் என்னென்ன பயன்கள் என்றும், தமிழ் மாதங்கள் வாரியாக எந்தெந்த தலங்களில் […]

Read more

எங்கு செல்கிறோம்?

எங்கு செல்கிறோம்?, பி.ஏ.கிருஷ்ணன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 140ரூ. அரசியலும் கலாச்சாரமும் முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல்பில் ஒரு புனைவெழுத்தாளர் என்பதால் எழுத்து நடை உயிர்ப்போடு மிளிர்கிறது. நன்றி: தி இந்து,1/12/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

நபிமார்கள் வரலாறு

நபிமார்கள் வரலாறு, ஹாஜி எம்.ஏ.சாகுல் ஹமீது அன் சன்ஸ், விலை 550ரூ. நபி என்பதற்கு செய்தி அறிவிப்பாளர் என்பது பொருளாகும். நபிமார்கள் என்ற இறைத்தூதர்கள், இறைச் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைத்து வந்ததால், அவர்களுக்கு இந்தப் பெயர் வந்தது. இவர்களில் ஆதம் இத்ரீஸ், நூஹு, இப்ராகீம், யூசுப், அய்யூப், மூசா, தாவூது, கலைமான், யூனுஸ், ஈசா உள்ளிட்ட 26 நபிமார்களின் வரலாறு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. கஸஸுல் அன்பியா என்ற தலைப்பில் இந்நூல் அரவி, பார்சி, உருது ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த நூலை […]

Read more

மூளை என்னும் மூலவர்

மூளை என்னும் மூலவர்,  பக்கவாதத்தையும் வெல்லலாம், அ.வேணி, சிவாவேணி பதிப்பகம், பக்.224, விலை ரூ.220. பக்கவாதம் என்றால் என்ன? அந்நோய் வருவதற்கான காரணங்கள் எவை? பக்கவாத நோய்க்கான அறிகுறிகள் எவை? பக்கவாத நோய் வராமல் தடுக்க, எதை உண்ண வேண்டும்? என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? குழந்தைகளுக்குப் பக்கவாதம் வருமா? பெண்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பது ஏன்? சுவாசிக்கும் காற்று, சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகள் ஆகியவற்றால் பக்கவாதம் வருமா? பாரம்பரியத்தால் பக்கவாதம் வருமா? குடிப்பழக்கத்திற்கும், புகைப்பழக்கத்திற்கும் பக்கவாதத்திற்கும் தொடர்புகள் உள்ளதா? பக்கவாதம் வந்துவிட்டால் […]

Read more

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள், தமிழில்: என்.ஸ்ரீநிவாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.180. கி.பி.121 இல் ரோமாபுரியில் பிறந்தவர் மார்கஸ் அரேலியஸ். கி.பி.161 – இல் மன்னரானார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் ராஜாஜியால் ஆத்ம சிந்தனைகள் என்ற பெயரிலும், பொ.திரிகூடசுந்தரத்தால் இதய உணர்ச்சி என்கிற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஏற்கெனவே வெளி வந்திருக்கிறது. உலக வாழ்க்கை, மனித சிந்தனை, பிரபஞ்ச இயக்கம் ஆகியவை குறித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர் வெளியிட்ட கருத்துகள் பல, […]

Read more

பெளத்தத்தின் மூவர் நெறி

பெளத்தத்தின் மூவர் நெறி,  வெ.வேதவல்லி, பூம்புகார் பதிப்பகம்,  பக்.508, விலை ரூ.390. ஆசிய ஜோதியாக விளங்கிய புத்த பெருமானையும், அசோக சக்கரவர்த்தியையும் , மணிமேகலையையும் அணிசேர்க்கும்விதமாக எளிய நடையில் ஆசிரியரால் இயற்றப்பட்டுள்ள நூல் இது. பெளத்த மதத்தின் கொள்கைகளையும், போதனைகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தபெருமானின் அருள் சிறப்பும், அசோகரின் வரலாற்றுப் பெருமைகளும், மணிமேகலையின் தூய வாழ்க்கைச் சிறப்பும் நயமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கதைநாயகனும், அருள் நெறியருமான புத்தபெருமானின் வாழ்க்கையில் தொடங்கி, அவர்தம் அறநெறி கருத்துகளையும், கொள்கைகளையும் எளிய நடையில் விரிவாக ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். […]

Read more

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலைரூ.125. சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மணிவாசகரின் திருக்கோவையாரில் இடம் பெற்ற மீண்டாரென உவந்தேன் என்ற பாடலையும், அதன் பொருளையும் விளக்கும் தூண்டா விளக்கனையாய் என்ற கட்டுரையில் தொடங்கி, இறைவனின் இன்பமான இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் பெருமையைக் கூறும் இன்ப ஊர்தி என்ற கட்டுரை ஈறாக இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியர் மேடையில் பேசியவை, தினமணியிலும் வேறு சிறப்பு மலர்களிலும் எழுதியவைகட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சைவத்தின் […]

Read more

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6, ஈரோடு தமிழன்பன், தொகுப்பாசிரியர்: வ.ஜெயதேவன், பூம்புகார் பதிப்பகம், பக்.872, விலை ரூ.750. புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரான ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்து இருக்கின்றன. இது ஆறாவது தொகுதி. இத்தொகுதியில் கவிஞரின் 14 கவிதைத் தொகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கவிதையின் பேசு பொருள்களும், அவற்றின் வெளிப்பாடுகளும் ஒவ்வொரு கவிதையிலும் மாறுபட்டும், புதியனவாகவும் இருக்கின்றன. இப்போதுதான் புதிதாக எழுதத் தொடங்கும் இளைஞனைப் போல கவிஞர், ஒவ்வொரு கவிதையையும் புதுவிதமாக எழுதிப் பார்க்கிறாரோ என்று இதிலுள்ள கவிதைகள் நம்மை எண்ண […]

Read more

இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று,  கவிக்கோ ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், பக்.216. விலை ரூ.150. இஃது ஒரு தன் வரலாற்று நூல். நூலாசிரியரின் அறுபதாண்டு தமிழ்ப்பணியில் அவருக்கு நேரிட்ட சில நிகழ்வுகளைப் பற்றிய, அவர் சந்தித்த சில மனிதர்களைப் பற்றிய தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று எம்.ஜி.ஆர். கையால் இந்நூலாசிரியர் பொற்பதக்கம் பெற்ற நிகழ்வோடு தொடங்குகிறது இந்நூல். மதுக்கூர் என்ற சிற்றூரில் நடந்த நூலாசிரியரின் திருமணத்திற்கு ம.பொ.சி. நேரில் வந்து வாழ்த்திப் பேசியது, நூலாசிரியர் ஒரத்தநாடு […]

Read more
1 251 252 253 254 255 505