பசும்பொன் சரித்திரம்

பசும்பொன் சரித்திரம், பேரா. காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, பக். 373, விலை 350ரூ. பாரத ராஜசிங்கம் பக்தர் கொண்டாடும் தங்கம், வீராதி வீரசிங்கம், முத்துராமலிங்கம், வெற்றியே முழங்குவது எங்கும் என்று கவிராயரால் பாராட்டி வாழ்த்தி தெய்வமாய் வணங்கப்பட்ட முக்குலத்துப் பெருமக்களின் நாயகனாம் தேவர் திருமகனது வாழ்வியல் சரிதை நூல் இந்நூல். “”பத்தரை மாற்றுப் பசும்பொன்” என்ற தலைப்போடு 146 அதிகாரங்களை நல்ல கட்டமைப்புடன் காவ்யாவிற்கே உரிய அழகோடு வெளியிட்டுள்ளது. தேவரது வீர உரைகள் பக்கத்திற்குப் பக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. “”காமராசர் மீது எவரேனும் […]

Read more

ஞானி வாசகம் நானூறு

ஞானி வாசகம் நானூறு, தொகுப்பாசிரியர்: ஜே.மஞ்சுளா தேவி, புதுப்புனல், பக்.440, விலைரூ.390. மார்க்சியம், தமிழ் இலக்கியம் , அரசியல், ஆன்மிகம், வரலாறு என பலதுறை அறிவுமிக்க கோவை ஞானி எழுதிய பல நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு கருத்துகளை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்து எதைப் பற்றியது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மரபுவழியிலான அல்லது ஏற்கெனவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளுடன் ஞானி எவ்வாறு வேறுபடுகின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. […]

Read more

திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6

திருமுறைத் திருத்தலங்கள் – பாகம் 6, சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக்.128, விலை ரூ.80. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வர் பெருமக்களோடு அருணகிரிநாதர், சேக்கிழார், காரைக்கால் அம்மையார், நக்கீரர், பரணர் போன்ற பல சிவனடியார்களின் பாடல்களும் 12 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இந்நூலில் இவ்வாறு பதிகம் கண்ட பல திருக்கோயில்களின் பெருமைகள், தல வரலாறு, ஆலயச் சிறப்பு, கோயில் அமைப்பு, அமைந்துள்ள ஊர், செல்லும் வழி போன்ற விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்து அருள் செய்த திருக்கடவூர் மயானம், பேச்சுத்திறன் […]

Read more

மூளைக்குள் சுற்றுலா

மூளைக்குள் சுற்றுலா, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 658, விலை 1500ரூ. ‘மூளைக்குள் சுற்றுலா’ என தலைப்பிட்டு, நம் மூளையின் மூலை முடுக்குக்கெல்லாம் செல்ல வைத்து விட்டார், நுாலாசிரியர். சிம்பன்சியை விட, மூன்று மடங்கு மூளை, நமக்கு அதிகம் என்பதில் துவங்கி, புராணம், கடவுள், மதங்கள் தோன்றியதன் காரணத்தை விளக்குகிறார். உலகச் சண்டைகள் ஏன் உருவாகுகின்றன என்பதற்கு, இதுவரை யாரும் சொல்லாத, அழகான விளக்கமும் வேறு. ‘ஹைட்ரா’ விலங்கின் தலையை வெட்டினால், இரண்டு தலைகள் முளைக்கின்றன. அதற்கும், ஜெல்லி மீனுக்கும் […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு, செ.ராசு, வேலா வெளியீடு, பக். 126, விலை 100ரூ. தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், வேறொரு நாட்டுடன் கடுமையாக போரிட்டு கைப்பற்றுவது தான் பண்டைய காலந்தொட்டு நடந்து வருகிறது. ஆனால், இந்திய நாட்டின் பூர்வீக நிலப்பகுதியான ஒரு தீவோ, மிக எளிதாக இன்னொரு தீவு நாட்டிற்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு இன்றும் மண்ணின் மைந்தர்களை உறுத்திக் கொண்டிருப்பதன் விளைவே இந்நுால். வளர்ச்சிப்பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த இந்தியா, இராமநாதபுர மாவட்டத்துக்குச் சொந்தமான, மீன்வளமும் கனிம வளமும் நிறைந்த கச்சத்தீவை, […]

Read more

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.674, விலை ரூ.680. சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை. இவர் 1925 – இல் எழுதி வெளியிட்ட சைவ சித்தாந்த சந்தானாச்சாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் என்ற நூலும், சைவ சித்தாந்த விளக்கம் எனும் நூலும், 1930 – இல் அவர் எழுதி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட தாயுமானவ சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலும், பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் என்ற நூலும், 1932 – […]

Read more

மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை

மரியா மாண்டிசோரியின் குடும்பத்தில் குழந்தை,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன்,முல்லை பதிப்பகம்,  பக்.112, விலை ரூ.90. குழந்தைகளுக்கான வித்தியாசமான கற்பித்தல் முறையை உலகுக்கு அளித்த மரியா மாண்டிசோரி, இந்நூலில் குழந்தைகளைக் குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்; எப்படி அவர்களை நடத்த வேண்டும் என்று விளக்கியிருக்கிறார். குழந்தை தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் என்பது உண்மை. இதுவே ஆதாரமாக இருக்கும் தத்துவம். குழந்தை தன்னுடைய எண்ணங்களை வெளியிட விரும்பும்போது பிரத்யேகமான முறையில் செய்கிறான். அது அவனுடையதேயான முறை. குழந்தைகளை தம்முடைய ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் […]

Read more

ருஷ்யப் புரட்சியும் இந்தியாவும்

ருஷ்யப் புரட்சியும் இந்தியாவும், தொகுப்பாசிரியர்: இளசை மணியன், வேலா வெளியீட்டகம்,பக்.128, விலை ரூ.100. மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாளங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி என்று பாரதியார் பாடிய ருஷ்யப் புரட்சிக்கும் இந்தியாவுக்கும் உள்ள பல்வேறு தொடர்புகளை விளக்கும்விதமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சோவியத் நாடு, இஸ்கஸ், குடியரசு, ஜனசக்தி- நவம்பர் புரட்சி மலர் ஆகியவற்றில் இந்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பாலதண்டாயுதம், ஆர். நல்லகண்ணு, சி.எஸ்.சுப்ரமணியம், நெ.து.சுந்தரவடிவேலு, தொ.மு.சி.ரகுநாதன் மற்றும் பல ருஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. […]

Read more

தேவார யாப்பியல்

தேவார யாப்பியல், அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.576, விலை ரூ.550. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல்களில் இசைப் பாடல்களே அதிகம். இவை பண் முறையில் பிரித்துப் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் யாப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை செய்யுளுக்கு உறுப்பாக அமைகின்றன. இவற்றில் தொடை என்பது ஒலிப்பு முறையால் செய்யுளுக்கு இனிமை தருகின்ற உறுப்பாகும். தொடைகளுள் எதுகை, மோனை ஆகிய இரண்டுமே சிறப்பானவை. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியர் இதன் சிறப்பை (செய்யுள் 94) எடுத்துரைக்கிறார். அவ்வகையில், தேவாரப் பாடல்களில் […]

Read more

செலுலாய்ட் சோழன்

செலுலாய்ட் சோழன்,  சுதாங்கன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.648, விலை ரூ.625. நடிகர் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகரான நூலாசிரியர் சிவாஜியின் திரையுலகப் பயணத்தையும் வாழ்க்கை அனுபவங்களையும் கலந்து இருநூற்றைம்பது பகுதிகளாக ஒரு நாளேட்டில் எழுதியதன் தொகுப்பே இந்நூல். இது சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. ஆண்டுவாரியான திரைப்பட அனுபவங்களும் இல்லை. ஆனால் சிவாஜி குறித்து இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்கள் (பெரும்பாலானவை சிவாஜியே நூலாசிரியரிடம் கூறியவை) இத்தொகுப்பில் உள்ளன. சிவாஜியின் நாடக அனுபவங்கள், திரைப்படத்தில் நடிக்க சிவாஜிக்கு வந்த வாய்ப்பு, படவுலகில் தொடக்க காலத்தில் […]

Read more
1 248 249 250 251 252 505