மகாபாரதம்

மகாபாரதம், பதிப்பாசிரியர் அனந்த் பய், விளக்கம் திலிப் கதம், வெளியீடு அமர் சித்ர கதா, மூன்று தொகுதிகளும் சேர்த்து 2199ரூ. அமர் சித்ர கதை என்ற தலைப்பில் வெளியாகும் அனைத்து சித்திரக் கதைகளும், சிறுவர்களையும் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்பது, மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாபாரதப் புத்தகத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. வியாசர் அருளிய மகாபாரதக் கதை எவ்வாறு, எந்த சமயத்தில் சொல்லப்பட்டது என்பது முதல் தொடங்கி இந்த இதிகாசத்தின் இறுதிப் பாகம் வரை உள்ள அனைத்து முக்கிய சம்பவங்களும் அழகாகத் […]

Read more

அறியப்படாத தமிழ்மொழி

அறியப்படாத தமிழ்மொழி, கண்ணபிரான் இரவிசங்கர் தடாகம் வெளியீடு, விலை: ரூ.250 கல்தோன்றி மண்தோன்றாச் சமூகமா தமிழினம் என்பதில் தொடங்கி இலக்கண அரசியல், நாட்டுப்புறத் தமிழ் என்று விரிகிறது இந்நூல். திருக்குறளில் முரண்பாடுகளா, அணுவைத் துளைத்ததை அவ்வை கண்டுபிடித்துவிட்டாளா, மாயோனும் சேயோனும் யார், எது முதல் திணை, தமிழை மறைத்தது எப்படி என்று விறுவிறுப்பான மொழியில் விவரிக்கிறார். சித்திரையா – தையா எது புத்தாண்டு, திராவிடமா – தமிழா, தொல்காப்பியத்தில் சாதி உண்டா, ஜாதிக்கும் சாதிக்கும் வேறுபாடு என்ன போன்ற விளக்கங்கள் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கின்றன. […]

Read more

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஜெயகாந்தன், தொகுப்பு: ஜெ.ஜெயசிம்மன், கா.எழில்முத்து, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.300. தமிழ் சினிமா மாறியதும் மாறாததும் எழுத்து, சினிமா, பொது வாழ்க்கை எனக் கால்வைத்த அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த அரிதான ஆளுமை ஜெயகாந்தன். அவரது சிறுகதைகள், நாவல்கள் அளவுக்கு சுவாரசியம் கொண்டவை அவரது கட்டுரைகள். அரசியல் அனுபவங்கள், பத்திரிகையுலக அனுபவங்கள் வரிசையில் எழுதிய ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ இதுவரை வெளிவராத கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் சரித்திரம், அதன் கலாச்சாரம், […]

Read more

சொல்லாய்வுகள்

சொல்லாய்வுகள்,  வய் .மு. கும்பலிங்கன்,  மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. ஓரெழுத்து ஒரு மொழி, ஒரு பொருள் பன்மொழி, பல்பொருள் ஒரு மொழி என்பது தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும். ஒரு சொல்லில் ஓர் ஒற்று இல்லையென்றால் அதன் பொருளே மாறிப் போய்விடும் அபாயம் தமிழில் உண்டு. அதேபோல, பொருள் மாறுபாடான- வேறுபாடான பல சொற்கள் தமிழில் உண்டு. அத்தகைய சொற்களின் பொருளை அறியாமலேயே அவற்றை நாம் அன்றாடம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பது இந்நூலைப் படிக்கும்போது நன்கு விளங்குகிறது. அத்தகைய சொற்களை […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்,  தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம்,  பக்.693, விலை ரூ.600. அவ்வையார் என்ற பெயரில் எட்டு அவ்வையார்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதியதாக இதுவரை 17 நூல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த நூல்களைப் பற்றியும் அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் அகநானூறு, புறநானூறில் இடம் பெற்றிக்கின்றன. அதற்குப் பிறகு அவ்வையாரின் தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, பெட்டகம், அவ்வை நிகண்டு, விநாயகர் அகவல், உள்ளிட்ட பல […]

Read more

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு(தமிழ் பதிப்பு வரலாற்று ஆவணம்) – பதிப்பாசிரியர் கா.அய்யப்பன்; காவ்யா, பக்.626. விலை ரூ.600. ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது வாழ்த்துரை, பதிப்புரை, முன்னுரை, ஆராய்ச்சியுரை போன்றவை இருப்பது சிறப்பு. இவை அனைத்தும் இல்லை என்றாலும், பதிப்புரை கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த வகையில், தமிழ் மொழியில் உள்ள செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு, இன்னா நாற்பது, ஆசாரக்கோவை, கைந்நிலை முதலிய நூல்களுக்குப் பதிப்புரை, மதிப்புரை, முகவுரை எழுதிய தமிழறிஞர்களின் பதிவுளைத் தொகுத்துரைக்கிறது இந்நூல். கு.சுந்தரமூர்த்தியின் ஆராய்ச்சி முன்னுரையில் […]

Read more

கம்பரச ஆராய்ச்சி

கம்பரச ஆராய்ச்சி, கு.பாலசந்திர முதலியார், செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கம்பரசம் என்ற பெயரில் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தை மறுக்கும் விதமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அண்ணா எழுதிய 9 பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு கருத்தையும் தக்க காரணங்களுடன் மறுப்பதோடு, கம்பரின் கவிரசம், கவித்துவம், கம்பசிருஷ்டி, கம்ப சூத்திரம் ஆகியவற்றையும் இந்த நூல் ஆய்வு நோக்கத்துடன் தந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028036.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன், உம்பர்ட்டோ ஈகோ கட்டுரைகள், தமிழில்: க.பஞ்சாங்கம், அருட்செல்வர், பக்.128, விலை ரூ.125. உம்பர்ட்டோ ஈகோ இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ஆசிரியப் பணி, ஊடகப் பணி, கட்டடக்கலைத் துறையில் பணி என பல பணிகளைச் செய்தவர். எனினும் குறியியலில் ஆர்வம் உள்ளவர். குறியியல் கோட்பாடு என்ற புத்தகத்தை எழுதியவர். இலக்கியம் சார்ந்து அவர் எழுதிய நூலில் உள்ள ஏழு கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல்.கணினியுகத்திலும் இலக்கியத்தின் தாக்கம் இருக்க முடியும். இலக்கியம் மனிதமனங்களை, மனிதர்களின் செயல்களை உருவாக்கும். இலக்கியம் நம் சொந்தக் கதைகளைத்தான் […]

Read more

வானொலி தமிழ் நாடக இலக்கியம்

வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, பக். 192, விலை 180ரூ. வானொலியில் இடம்பெற்ற நாடகங்கள் பற்றிய செய்திகளையும், அவை நுாலாக ஆக்கப்பட்டு உள்ள குறிப்புகளையும் இந்நுால் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. நுாலின் இறுதிப்பகுதி நுாலாசிரியரால் எழுதப் பெற்ற, ‘செம்பியர் கோன்’ எனும் வானொலி நாடகத்தை முழுமையாகக் கொண்டு சுவை பயக்கிறது. வானொலி என்னும் ஊடகம் எவ்வாறு, எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, அதன் வளர்ச்சி நிலைகளை விளக்குவதாக நுாலின் அறிமுகப் பகுதி அமைகிறது. வானொலி நாடகம் என்பது வானொலிக் காகவே […]

Read more

குறுந்தொகைப் பாடல்கள் (1-25)

குறுந்தொகைப் பாடல்கள் (1-25), குழ.கதிரேசன், ஐந்திணைப் பதிப்பகம், பக்.136, விலை 80ரூ. குழந்தைகள் மனத்தைக் குளிர்வித்துப் பல குழந்தை இலக்கியங்களைப் படைத்த குழந்தைக் கவிஞர் குழ.கதிரேசன், இப்போது இலக்கிய இன்பம் நல்கும் நல்ல குறுந்தொகை எனப் போற்றப்படும் குறுந்தொகை பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் முதல் இருபத்தைந்து பாடல்களுக்கான எளிய விளக்கத்துடன், அப்பாடல்களில் இடம்பெறும் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், முதல், கரு, உரிப்பொருள்களுக்கான விளக்கங்களையும் மாணவர்கள்புரிந்து கொள்ளும் வகையில் தந்திருப்பது சிறப்பு. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மூல […]

Read more
1 10 11 12 13 14 56