சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்

சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்,  ம.சுரேந்திரன், பாரதி புத்தகாலயம், பக்.112, விலை ரூ.100 . கொந்தளிப்பும், போராட்டமும் மிகுந்த இந்த சமூக வாழ்க்கையில், நடைமுறை வாழ்வில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு, அதற்குத் தொடர்புடைய ஒரு சங்க இலக்கியப் பாடலை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சங்ககால சைவ சாப்பாடு, சங்ககால டாஸ்மாக், நரையைப் போக்கும் மருந்து எங்கே கிடைக்கும்?  போரூர் ஏரியும் குடபுலவியனார் ஆலோசனையும், நுங்கம்பாக்கம் ஸ்வேதாவும் பெருங்கோப்பெண்டும், பறவைகளின் […]

Read more

குறுந்தொகை ஓவியம்

குறுந்தொகை ஓவியம், வெ.பரமசிவ பாண்டியன், வனஜா, பக். 242, விலை 100ரூ. சங்க இலக்கியங்களில், 4 முதல், 8 அடிகள் கொண்ட, 401 காதல் பாடல்களின் தொகுப்பே எட்டுத் தொகை. எட்டாத காதலின் சுவை நம் மனதை எட்டி தொட்டு இழுக்கும். இதில் உள்ள பறவை, விலங்கு, மனித பாசப் போராட்டங்கள். 205 புலவர்கள் இதைப் பாடியுள்ளனர். கபிலர், பரணர், அவ்வையார் போன்ற புகழ் பெற்ற, 205 புலவர்களும், பெயரே தெரியாத, 10 புலவர்களும் பாடியுள்ளனர். கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல்களைப் […]

Read more

தமிழ் மொழி அடிப்படைகள்

தமிழ் மொழி அடிப்படைகள், முனைவர் பிரகாஷ்.வெ, வேலா வெளியீட்டகம், விலை 40ரூ. மொழி ஆளுமைக்கு! பிழையின்றித் தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் பல நுல்கள் வெளிவந்திருக்கின்றன. இருந்தாலும் கால மாற்றத்துக்கு ஏற்பத் தகவமைக்கப்பட்ட நூல்கள் தேவைப்படுகின்றன. தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆங்காங்கே மொழியில் தடுமாறும் ஆய்வாளர்கள் வரை தமிழ் மொழியை எளிமையான முறையில் பயில தமிழ் மொழி ஒலி அடிப்படைகள் கைகொடுக்கும். நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

வள்ளுவப் பொருளியல்

வள்ளுவப் பொருளியல், டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக். 384, விலை ரூ.200. திருக்குறளைப் பல்வேறு கோணங்களில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நூலிலுள்ள 23 கட்டுரைகளும் வள்ளுவர் கூறும் பொருளியலின் ஆழத்தையும் அகலத்தையும் விரித்துரைக்கிறது. பொருட்பால், அமைச்சியல், நட்பியல், குடியியல், ஆகியவற்றுள் வருகின்ற பல அதிகாரங்கள் அனைவருக்கும் பொதுவானவையாகும். மேலும், புறவாழ்விற்குத் தேவையான பல கருத்துகள் பொருட்பாலில் உள்ளன. உலகப் பொருளியல் வல்லுநரான கார்ல்மார்க்சின் பொருளியல் கோட்பாடுகளோடு திருவள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளை ஒப்பீட்டு முறையில் காட்டியிருக்கிறார். திருவள்ளுவர் காலச் சூழலும் […]

Read more

குறள் இனிது

குறள் இனிது, சோமவீரப்பன், தமிழ் திசை , விலை 225ரூ. உலகம் போற்றும் தமிழ் இலக்கியமான திருக்குறளில் சொல்லாத கருத்துகளே இல்லை எனலாம். தலைமைப் பண்பு, ஆளுமை, மேலாண்மை தத்துவம் ஆகியவற்றையும் திருவள்ளுவர் திறம்படத் தந்து இருக்கிறார். இந்தத் தலைப்புகளில் உள்ள 125 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள ஆழமான கருத்துகளை, ஆங்காங்கே நகைச்சுவையுடனும், எளிய முறையிலும் விளக்குவதோடு, இன்றைய வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதும் அழகாகத் தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027269.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு, சங்க காலத்தில் தமிழக மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. தமிழ் மொழியும் தமிழ் நூல்களும் எந்த முறையில் சிறப்புப் பெற்று வளர்ந்தன என்பவை போன்றவற்றின் அரிய தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. தமிழகத்தின் முற்கால, இடைக்கால, மற்றும் பிற்கால நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் ஆகியவற்றுடன் தற்கால புலவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்று இருக்கின்றன. தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழி ஆய்வு […]

Read more

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலைரூ.125. சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மணிவாசகரின் திருக்கோவையாரில் இடம் பெற்ற மீண்டாரென உவந்தேன் என்ற பாடலையும், அதன் பொருளையும் விளக்கும் தூண்டா விளக்கனையாய் என்ற கட்டுரையில் தொடங்கி, இறைவனின் இன்பமான இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் பெருமையைக் கூறும் இன்ப ஊர்தி என்ற கட்டுரை ஈறாக இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியர் மேடையில் பேசியவை, தினமணியிலும் வேறு சிறப்பு மலர்களிலும் எழுதியவைகட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சைவத்தின் […]

Read more

கம்பனின் தமிழமுது

கம்பனின் தமிழமுது,சாலமன் பாப்பையா,கவிதா பப்ளிகேஷன், பக்.336, விலை ரூ.300. சாலமன் பாப்பையாவின் கம்பனின் தமிழமுது என்ற இந்நூலில், துளசி இராமாயணத்தில் உவமைகள், கம்பனும் பாரதிதாசனும், இராமாயணத்தில் அர்த்த பஞ்சகம், கம்பனில் அமரர்கள், கம்பனின் சூரியன், கம்பனின் கற்பனைகள், கம்பரும் அ.ச.ஞா.வும், மணிவாசகரும் கம்பரும், காப்பிய உதயம் என 9 முத்தான கட்டுரைகள் அடங்கியுள்ளன. துளசி இராமாயணத்தில் உவமைகள் கட்டுரையில், ராமனுக்கும் பரதனுக்கும் உள்ள பாசத்தை விளக்க, ஆமை எப்படி தனது முட்டைகளை மார்பில் வைத்துக் காக்குமோ, அதுபோல ராமன் இரவு பகல் பரதன் நினைவையே […]

Read more

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம்,  பக்.184, விலை ரூ.120, இயல்,இசை,நாடகம் எனும் முத்தமிழும் பின்னி பிணைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம்.முத்தமிழ், மூவேந்தர்,மூன்று தலைநகரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாலும், அமைப்பாலும் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ரத்தினச் சுருக்கமாக தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிலப்பதிகாரம் முழுவதும் காணப்படுகின்ற பன்முகத் தன்மை குறித்து நூலாசிரியர் ஆராய்ந்து சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி தமிழறிஞர்கள் மற்றும் பிற நாட்டு அறிஞர்களின் மேற்கோள்களை காட்டி ஒப்பிட்டும் விளக்குகிறார்.பண்டிய மன்னன் அரசவையில் […]

Read more

திருக்குறள் களஞ்சியம்

திருக்குறள் களஞ்சியம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக். 560, விலை 600ரூ. திருவள்ளுவரும் திருக்குறளும், நம் பண்டைய நீதி நுாலாசிரியர், கம்பன் கண்ட வள்ளுவர், வாழ்க்கை துணை நுால், திருக்குறளும் பொது நோக்கமும், இரந்து வாழும் வாழ்வு, தோன்றின் புகழோடு, குறள் நெறி, குறள் உணர்த்தும் பாடங்களை பட்டியலிடுகிறது இந்நுால். குறளில் சைவ சித்தாந்தம், கீதையும் குறளும், நுண்பொருள்மாலை ஆய்வுரை, குறள் வழங்கும் செய்தி, வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும், சீர்திருத்தம் உள்ளிட்ட கட்டுரைகள் அடங்கியது இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், […]

Read more
1 12 13 14 15 16 56