புத்துயிர்ப்பு

புத்துயிர்ப்பு, லியோ டால்ஸ்டாய், தமிழில்: ரா.கிருஷ்ணய்யா, அடையாளம் பதிப்பகம், விலை: ரூ.395. நெருக்கடியான சூழலில் துவண்டிருக்கும் மனதுக்கு வாசிக்க இதமான புத்தகமாக டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவல் பரிந்துரைக்கப்படுகிறது. ‘உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகம் மட்டும்தான் வைத்திருக்க அனுமதி என்றால், எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்ற கேள்விக்குப் பலரும் ‘புத்துயிர்ப்பு’ நாவலைச் சொல்கிறார்கள். என்ன காரணம்? வாசகர்களை இந்நாவல் சுயபரிசீலனைக்கு உட்படுத்த முயல்கிறது என்பதுதான் முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை […]

Read more

நிலவென வாராயோ!

நிலவென வாராயோ!,  வரலொட்டி ரெங்கசாமி,  தாமரை பிரதர்ஸ், விலை ரூ.300. அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும், அன்னையின் பல்வேறு பெயர்களைத் தாங்கியே நடைபயணிக்கிறது. காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய் எழுத்துக்கள் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு.  வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டமாய் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு,உலவவிட்டு, ‘நிலவென வாராயோ’ […]

Read more

சா

சா,  கு. ஜெயபிரகாஷ்,  ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120.  மரணத்தை எண்ணத்தில் கொண்டு எழுத்தாக மாற்றுவதைப் பெரும்பாலும் யாரும்விரும்புவதில்லை அல்லது முன் வருவதில்லை.தமிழில் மரணம் தொடர்பாக வெளிவந்த நூல்களை, புதினங்களை விரல்விட்டு அவலம் சம்பத்தின் “இடைவெளி’யையும் சேர்த்து. இத்தனைக்கும் சித்தர்கள் வாழ்ந்த நிலம் இது. இங்கே மரணத்தைப் பாடாத சித்தர்களே இல்லை. பழந்தமிழ்க் கவிஞர்கள் பாடிய தனிப் பாடல்கள் ஏராளம். ஆங்கிலத்தில் நிறைய நூல்கள். தமிழில் பதிவுகள் குறைவே.கு. ஜெயபிரகாஷ் எழுதிய ‘சா’ நாவல் (ஓரிடத்தில் நூல் என்றும் எச்சரிக்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) இந்தப் […]

Read more

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920) , மலர் -விசு, வாசக சாலை பதிப்பகம், பக்.392, விலை ரூ.380.   சுதந்திரப் போராட்டத்தின் விதையான சிப்பாய் புரட்சி முளைத்த வேலூரின் காந்தி நகரில் தொடங்கும் கதை, பாஸ்டன் விமான நிலையத்தில் முடிகிறது. கிச்சா என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் கதைநாயகன். கிளிமூக்கு என்று அவனால் செல்லமாக அழைக்கப்படும் உமா கதையின் நாயகி. பிளஸ் 2, கல்லூரி, சிஏ என அவர்களுடைய படிப்புடன் காதலும் வளருகிறது. அம்மா உள்பட தான் நேசிப்பவர்களை இழந்துவிடும் உமா, “விச்சு பயமா இருக்கு. நாம […]

Read more

கர்ணன் – காலத்தை வென்றவன்

கர்ணன் – காலத்தை வென்றவன், மராத்தி மூலம்: சிவாஜி சாவந்த், தமிழில் – நாகலட்சுமி சண்முகம்;மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.862; விலை ரூ.899. மகாராஷ்டிர அரசின் விருது, குஜராத் இலக்கிய அமைப்பின் விருது, ஞானபீடத்தின் மூர்த்திதேவி விருது உள்பட பல விருதுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம் இது. சூரிய பகவானுக்கும், குந்திக்கும் பிறந்த கர்ணனை குந்தி அசுவநதியில் போட்டுவிட, அதிரதன் என்னும் தேரோட்டி கர்ணனை அசுவநதியில் கண்டெடுத்து தனது மகனாக வளர்த்தார். பிறந்த கணம் தொட்டு பாரதப் போரில் அர்ஜுனனால் கொல்லப்படும் வரை கர்ணன் […]

Read more

அகத்திய ரகசியம்!

அகத்திய ரகசியம்!, ஸ்ரீஜா வெங்கடேஷ், ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ், பக். 674, விலை 400ரூ. நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று தோன்றும். ஆனால், கற்பனை கலந்த ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய நாவல் தான் அகத்திய ரகசியம். போகிற போக்கில் இந்த நாவலில் பல அறிவியல் உண்மைகளையும், மருத்துவ உண்மைகளையும் எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர் ஸ்ரீஜா வெங்கடேஷ். தற்கால தமிழ் நாவல் இலக்கியம் புதிய பரப்புகளில் தடம் பதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நாவலின் நிறைவு பகுதியில், 24ம் […]

Read more

இந்தியா அழைக்கிறது

இந்தியா அழைக்கிறது, ஆங்கிலத்தில் ஆனந்தகிரிதாஸ், தமிழில் அருட்செல்வர் நா.மகாலிங்கம், மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு, பக். 360, விலை 300ரூ. அமெரிக்க இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர் ஆசிரியர். தாய் பஞ்சாபி; தந்தை தமிழர். அவ்வப்போது பெற்றோரோடு இந்தியா வந்தவருக்கு, இந்திய மண் மணம் ஆசிரியரின் நெஞ்சை ஈர்க்கிறது. படிப்பு அமெரிக்காவிலும், பிழைப்பு இந்தியாவிலும் பரிணமிக்கிறது. ஆசிரியரின் ஆதங்கங்கள், ஆசைகள், கொதிப்புகள், வார்த்தைக்கு வார்த்தை என மொழி பெயர்க்காமல் ஆசிரியரின் உணர்வுகளை ஊர்வலமாக்கியுள்ளார் மொழிபெயர்ப்பாளர். எத்தனை பாராட்டினாலும் தகும். தம் தாய் – தந்தையர், பாட்டி – […]

Read more

நல்கிராமம்

நல்கிராமம், கோ.கமலக்கண்ணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 416, விலை 250ரூ. இருபத்தோராம் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே வெகு வேகமாக செல்கிறது. புத்தகத்தை எடுத்துவிட்டால், 74ம் அத்தியாயம் வரைக்கும் படிக்க கதையோட்டம் நீரோட்டமாய் அமைந்துள்ளது. ‘பேஸ்புக், சாட்டிங்’ என்று தற்கால மொழியில் தற்காலப் பிரச்னைகளைச் சாதுர்யமாக அணுகுவதுடன், மெல்லிய காதலையும் படம் பிடித்துக் காட்டுகிறது. நாவலாசிரியர் கோ.கமலக்கண்ணனுக்கு இந்த கால பேச்சு மொழி, மிகவும் எளிமையாக வந்திருக்கிறது. கொஞ்சமும் சிரமப்படாமல், கதையை நகர்த்தும் துல்லியத்தை இந்த […]

Read more

காதம்பரியம்

காதம்பரியம், அமர்நாத், வெல்லும் சொல் பக்.288, விலை ரூ.270. காதம்பரி என்ற பெயர் கொண்ட முன்னாள் தமிழ் நடிகையின் கதை. 22 வயதுக்குள் 20 படங்களில் நடித்து முடித்து இனி நடிப்பதில்லை என்ற முடிவுடன் அமெரிக்காவில் உள்ள சித்தப்பா வீட்டுக்குப் பயணமாகிறாள் கதையின் நாயகி. சித்தப்பாவின் வீட்டில் பிரேமசந்திரன் என்ற இளைஞனைச் சந்தித்துக் காதல் வயப்படுகிறாள். அவள் நடிகை என்பதைத் தெரியாது அவனும் விரும்புகிறான். சினிமாவை முற்றிலும் துறந்த அவள், மனைவி, தாய் என்ற புது கதாபாத்திரங்களை ஏற்கிறாள். துணைப் பேராசிரியரான பிரேமசந்திரன் அன்பும் […]

Read more

ஒப்பில்லா நாயகி

ஒப்பில்லா நாயகி,  மூலம்: ஷாபு, தமிழில்: கே.வி.ஷைலஜா, வெளியீடு: வம்சி புக்ஸ், விலை: ரூ.350. வாழ்க்கையின் மர்மம்தான் அதன் சுவாரசியம். ஒரு பெண்ணின் ஆர்வமும் தேடலும் இன்னொரு பெண்ணைச் சாய்த்துவிடுமா என்பது புதிரான கேள்வி. அம்மாவால் கைவிடப்படும் சிறுமி, துயரங்களிலிருந்து மேன்மை அடைகிற கதைதான் உமாவுடையதும். அம்மா, சித்தி இருவருமே தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள சிறுமி உமாவைப் பிரிந்துசெல்கின்றனர். உமாவுக்குத் தெரிந்ததோ அன்பின் மொழி மட்டுமே. வன்மத்துக்குப் பரிசாக அவர் அன்பைத்தான் கொடுத்தார். அதுதான் அவரை ஆலமரமாக வளர்த்தெடுத்தது. அதை ‘கதை கேட்கும் சுவர்கள்’ நூல் மூலம் உலகுக்கு […]

Read more
1 7 8 9 10 11 66