தென்மொழி

தென்மொழி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் என்னும் 5 மொழிகளில் படிக்கவும், பேசவும், எழுதவும் வல்லமை பெற்று விளங்கியவர். அவரது ஆராய்சித் திறனாலும், நுண்பொருளை மிக எளிதாக உணர்ந்து பிறருக்கு உணர்த்தும் பிண்பாலும், ஈர்த்த தனது எளிய நடையாலும் “தென்மொழி” என்னும் இந்நூலைத் தந்துள்ளார். தமிழ் மொழி எவ்வளவு பழமையானது, உலக மொழிகளில் தலைமை தாங்கும் பண்புடையது, உயர் தனிச் செம்மொழிகளில் உயிருடன் இயங்கி வரும் தனிச்சிறப்பும் பெற்றது போன்ற […]

Read more

தென்னாட்டுச் சிற்பி ஜீவா

தென்னாட்டுச் சிற்பி ஜீவா, சங்கர் பதிப்பகம், விலை 90ரூ. சிறு வயதிலிருந்தே மக்கள் நலனுக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் போராடுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல். அவர் வாலிப்திதிலேயே தீண்டாமையையும், சாதி அமைப்பையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினார். பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றார். அரசியலில் பங்கு பெற்ற காலத்தில் சிறைவாசம், காவல்துறையினர் தாக்குதல்கள், தலைமறைவு வாழ்க்கை என்பது அவரது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளாக இருந்தன. அவர் தனது லட்சியத்தை மக்களுக்கு கொண்டு செல்வதில் பன்முகத்தன்மை கொண்ட தலைவராக […]

Read more

கம்பனின் அரசியல் கூட்டணி

கம்பனின் அரசியல் கூட்டணி, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. கடந்த காலத்தில் படைக்கப்பட்ட ஓர் இலக்கியம், நிகழ்காலத்தில் எப்படிப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்நூல். கிஸ்கிந்தாவில் சுக்கிருவனின் உதவியை ராமன் நாடவேண்டி வருகிறது. ஏனெனில் சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன் என்பதைத் தெரிந்து கொண்டபின், தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும், துயரில் சிக்கிவிட்ட மனையாளை மீட்கவும், வலிமை மிக்க, வரபலம், படைபலம், தம்பியர் துணை, ஆட்சி அதிகாரம் கொண்டுள்ள ராவணனை எதிர்க்க இருவரின் வில்கள் மட்டுமே போதாது […]

Read more

விலை மதிக்க முடியாத உயிர்கள்

விலை மதிக்க முடியாத உயிர்கள், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. தி.மு.க.வின் இலக்கிய அணி புரவலரான முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி ஏற்கனவே 3 நூல்களை எழுதி இருந்தாலும், தற்போது ‘விலை மதிக்க முடியாத உயிர்கள்’ என்ற தலைப்பில் 19 சரித்திர பெண் மணிகளின் விலை மதிக்க முடியாத, வீரமிக்க, மனிதாபிமானமிக்க செயல்களை கவிதையாக படைத்து உள்ளார். இதில் பலர் தியாகங்களும், இதுவரையில் முழுமையாக வெளிவராத தியாகங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இலங்கையில் நடந்த விடுதலை போரில் இன்னுயிர் நீத்த பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அங்கையற்கண்ணி, […]

Read more

மூக்கூடல்

மூக்கூடல், வா,மு,சே, ஆண்டவர், சேதுச் செல்வி பதிப்பகம், விலை 150ரூ. இலக்கணவியல், இலக்கியவியல், அயலகத் தமிழியல் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூல், “முக்கூடல்” என்ற பொருத்தமான தலைப்புடன் வெளிவந்துள்ளது. முதல் பகுதியில், தொல்காப்பியர் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன. இரண்டாம் பிரிவான இலக்கியவியலில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார், முனைவர் பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர். அயலகத்தமிழியல் என்ற மூன்றாம் பகுதியில், அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ் வளர்ச்சிக்கு எடுத்து வரும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை விவரிக்கிறார். இந்த நூலில் உள்ள […]

Read more

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம், ஜி. சந்தானம் ஐ.ஏ.எஸ்., நேசம் பதிப்பகம், விலை 175ரூ. 40 ஆண்டு காலம் தமிழக அரசில் எல்லோரும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. சந்தானம் எழுதிய ‘வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்’ என்ற இந்த நூலில், வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் எல்லோரும் சந்தித்ததும், அதே நேரத்தில் சரியாக புரிந்து கொள்ளாததுமான பல விஷயங்களை சுட்டிக்காட்டி உள்ளார். ‘அரசு அலுவலகம் என்றால் கதவுகளும் காசு கேட்கும், கம்பியும் கை நீட்டும்,’ என்ற சாமானிய மக்கள் […]

Read more

பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள்

பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், தொகுதி 1, விலை 330ரூ, தொகுதி 2-3 விலை 250ரூ(ஒவ்வொன்றும்). மறைந்த பேரறிஞர் அண்ணா எழுதிக் குவித்த கதைகளும், கட்டுரைகளும் ஏராளம். அவற்றில் சிறு கட்டுரைகளை தேர்வு செய்து, மூன்று புத்தகங்களாக வெளியிட்டுள்ளது பூம்புகார் பதிப்பகம். 1937ம் ஆண்டில் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து 1948ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை வரை, இந்நூல்களில் காலவரிசைப்படி இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்கள் பற்றி அண்ணா ஆழமாக ஆராய்ந்து, தமக்கே உரிய பாணியில் காரசாரமாகவும், நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் தமது கருத்தை […]

Read more

ஜுலியஸ் சீசர்

ஜுலியஸ் சீசர், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 110ரூ. அலெக்சாண்டரைப்போல் ஒரு மாவீரர் ஜுலியஸ் சீசர், ரோமாபுரி மன்னர். கிளியோபட்ராவின்மனம் கவர்ந்து அவளை மணந்தவர். இறுதியில் ரோமாபுரியின் பாராளுமன்றத்தில், அவர்களுடைய ஆதரவாளர்களாலேயே படுகொலை செய்யப்படுகிறார். ஜுலியஸ் சீசர் வரலாற்றை சுவையாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார் ஜனனி ரமேஷ். சீசர் காலத்து ரோமாபுரி பற்றி அவர் கூறியுள்ள தகவல்களில் சில- உடல் ஊத்தோடு பிறக்கும் குழந்தைகளை பெற்றோரை கொன்றுவிடலாம். இரவு நேரத்தில் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. நீதிபதிகள் லஞ்சம் வாங்கினால் மன்னிப்பே கிடையாது. […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம்

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம், தமிழ்க்கோட்டம், விலை 140ரூ. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாற்றை இதுவரை 8 புத்தகங்களாக எழுதியுள்ளார். கடைசிப்பகுதியான 9வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. காலமாறுபாட்டால் தமிழர்களின் வாழ்விலும், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை இதில் விவரிக்கிறார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருப்பது சாதிப்பிரிவினையே என்று கூறுகிறார். “இன்றைக்கும் தன்னை வழி நடத்தக்கூடிய தமிழனை சினிமாத் துறையிலேயே தமிழன் தேடுகிறான்” என்று சுட்டிக்காட்டுகிறார். தமிழரிடம் காணப்படும் குறைபாடுகளை, குட்டவும் செய்கிறார், தன் மோதிரக் கையால்! […]

Read more

கரப்பான் பூச்சி நகைக்குமோ?

கரப்பான் பூச்சி நகைக்குமோ?, நீதியரசர் பிரபர ஸ்ரீதேவன், கவிதை பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ. நீதியரசர் பிரபர ஸ்ரீதேவன் நான் நினைத்ததை, நம்புவதை, உணர்ந்ததை, உள்வாங்கியதை, படித்ததை, நேசித்ததை கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். புத்தகத்திற்கு அவர் சூட்டியிருக்கும் ‘கரப்பான் பூச்சி நகைக்குமோ’ என்கிற தலைப்பும், அக்கட்டுரையும் இன்று வெற்றத்தில் மிதக்கும் தமிழகத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது. “ஒரு புறம் உணவு எச்சங்கள் குப்பை மலைகளாகக் குவிகின்றன. மறுபுறம் உணவையே பலநாள் பார்த்திராத மக்கள். ஒரு புறம் ஒவ்வொரு விட்டிற்கும் ஒரு நீச்சல் […]

Read more
1 98 99 100 101 102 223