அறம் பொருள் இன்பம்

அறம் பொருள் இன்பம், சாரு நிவேதிதா, அந்திமழை, விலை 200ரூ. மனதில் பட்டத்தை துணிச்சலாக எழுதும் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் ஒரு பத்திரிகையில் எழுதிய கேள்வி – பதில் புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, இலக்கியம், கடவுள், மதுவிலக்கு… இப்படி சகலவிதமான விஷயங்களையும் அலசி இருக்கிறார். சில பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. சில சிரிக்க வைக்கின்றன. ஒரு ஜோசியர் பற்றி அவர் எழுதியிருப்பதாவது: “ஒருமுறை அவர் இந்திரா காந்திக்கு ஜோதிடம் பார்த்திருக்கிறார். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு இந்திரா காந்தி […]

Read more

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள்

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள், மறைமலை ராதா, மணிமேகலை பிரசுரம், விலை 60ரூ. தமிழ்த்தொண்டு புரிந்த உ.வே.சாமிநாத அய்யர், மறைமலை அடிகள் உள்ளிட்ட 20 செம்மொழிச் சிற்பிகளைப் போற்றுவதுடன், அவர்கள் ஆற்றிய பணிகளின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- ஸ்ரீஹரி வம்சம், எல். வரலட்சுமி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 250ரூ. வேத வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதத்தோடு இணைந்த ஒரு பாகமாக இருக்கிறது ஸ்ரீஹரி வம்சம். சுமார் 12 ஆயிரம் சுலோகங்கள் […]

Read more

அலைகடலுக்கு அப்பால்

அலைகடலுக்கு அப்பால், பூங்கொடி பதிப்பகம், விலை 80ரூ. மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்ரமணியன் தனது அனுபவங்களை இந்த நூலில் எழுதியுள்ளார். தமிழ் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக இச்சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதால், கட்டுரைகளில் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —-   செல்வம் தரும் தென்னை வளர்ப்பு, டாக்டர் வா.செ. செல்வம், நர்மதா பதிப்பகம், விலை 75ரு. அறிவியல் வழிமுறைகளால் சாதிக்க முடியாதவற்றை தனது அனுபவ ஆராய்ச்சி அறிவால் ஆராய்ந்து, தென்னை வளர்ப்போருக்கு ஒரு […]

Read more

பிராஜக்ட்

பிராஜக்ட், ஜீவா புத்தக நிலையம், விலை 200ரூ. மர்ம நாவல் என்ற குறிப்புடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. நாவலை எழுதியவர் பெயர் கவா கம்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி, அணிந்துரையில் “திருக்குறள் பாராயணம்” அமைப்பின் தலைவர் புதேரி தானப்பன் கூறுகிறார்- “இந்த நூலின் ஆசிரியர் ‘கவாகம்ஸ்’ ஸா? இப்படியும் ஒரு பெயரா? இவர் ஆணா, பெண்ணா? நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்கள் நிரம்பி வழிகின்றன…” இவ்வாறு தானப்பன் கூறினாலும் நாவல் சிறப்பானது என்று பாராட்டவும் செய்திருக்கிறார். என்ஜீனியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர […]

Read more

லட்சுமி என்னும் பயணி

லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ. சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் […]

Read more

கனவின் பலன்கள்

கனவின் பலன்கள், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 33ரூ. கனவின் பலன்களைக் கூறுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். கனவில் கழுதையைக் கண்டால், கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் நீங்கும். யானையைக் கண்டால் அதிர்ஷ்டம். புலிகள், சிங்கங்கள், கரடிகள் முதலிய கொடிய மிருகங்களைக் கண்டால் பலவான்களுடன் விரோதம் ஏற்படும். சிட்டுக்குருவி, வாத்து ஆகியவற்றைக் கண்டால் நல்லது நடக்கும். இப்படி பல பலன்களை சொல்கிறார் வாரியார் சுவாமிகள். புராணங்களிலும் இலக்கியங்களிலும் கனவு கண்டவர்கள் பற்றியும், அவர்கள் கண்ட கனவுக்கான பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

வ.உ.சி. வாலேஸ்வரன்

வ.உ.சி. வாலேஸ்வரன், செ.திவான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், சென்னை, விலை 100ரூ. “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் மகன் பெயர் வாலேஸ்வரன். அவரைப் பற்றிய புத்தகம் இது. இவருக்கு வாலேஸ்வரன் என்ற பெயர் வந்தது எப்படித் தெரியுமா? சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்ட வ.உ.சிதம்பரனாருக்கு வெள்ளையர் ஆட்சி “இரட்டை ஆயுள் தண்டனை” விதித்தது. அத்துடன் அவர் பெற்ற வக்கீல் பட்டத்தை ரத்து செய்து, கோர்ட்டில் வழக்காட முடியாதபடி தடை விதித்தது. விடுதலையடைந்தபின், வ.உ.சி. வறுமையில் வாடினார். கோர்ட்டிற்கு சென்று வக்கீலாக வாதாடவும் முடியவில்லை. […]

Read more

தாய்மை

தாய்மை, லக்ஷ்மி, சந்தியா, விலை 140ரூ. ‘லக்ஷ்மி’ என்ற புனை பெயரில் பல அற்புத நாவல்களைப் படைத்த திரிபுரசுந்தரி, ஒரு டாக்டர் ஆவார். தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டுகள் டாக்டராக பணிபுரிந்தார். அவர் எழுதிய “தாய்மை:பூப்படையும் நாள் முதல் பிள்ளைப் பேறு வரை” என்ற மருத்துவ நூல் இப்போது வெளிவந்துள்ளது. இளம் பருவத்தில் இருந்து வயோதிகம் வரை, ஒரு பெண்ணுக்கு தன் உடல் பற்றிய அறிவியல் உண்மைகள் தெரிந்திருக்க வேண்டும். அந்த உண்மைகளை இந்த நூலில் விரிவாகக் கூறியுள்ளார், டாக்டர் திரிபுரசுந்தரி. பெண்கள் கையில் […]

Read more

மனப்பலகை

மனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று […]

Read more

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும்

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும், முனைவர்ச. கணபதிராமன், பூங்குன்றன் பதிப்பகம், விலை 50ரூ. தென்காசி கோபுரம் பற்றி அரிய புத்தகம் தென்காசி கோவிலில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட ராஜகோபுரம் சிதைந்துபோய், மொட்டை கோபுரமாக நின்றது. புதிய கோபுரம் கட்ட பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அது நிறைவேறவில்லை. முடிவில், ராஜகோபுரம் கட்டும் பணியை டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ஏற்று, பல லட்சம் ரூபாய் செலவில் 178அடி உயர ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார். 25/6/1990ல் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த வரலாற்று […]

Read more
1 100 101 102 103 104 223