உறவுகள்

உறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ. உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் […]

Read more

பாரதிதாசன் காதல் ஓவியங்கள்

பாரதிதாசன் காதல் ஓவியங்கள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 100ரூ. உலகில் ஒவ்வோர் உயிரும் காதலின்றி வாழ்வதில்லை. காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனே இல்லை” என்பார்கள். ‘காதல் என்பது உயிர் இயற்கை’ என்று கூறும் பாவேந்தர் பாரதிதாசன், தனிப்பாடல்களிலும், கதைப்பாடல்களிலும், காப்பியங்களிலும் ஆண்-பெண்களிடையே இருந்து வரும் தூய அன்பை-காதலை பல கோணங்களில் வர்ணிக்கிறார். புரட்சிக் கவிஞர் என்ற பெயரை பெற்ற அவர், காதலிலும் புரட்சி செய்தவர். விதவையர் காதலுக்கும், சாதி மதம் கடந்த […]

Read more

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள், கற்பகம் புத்தகாலயம், விலை 65ரூ. மனிதனின் தொழில் முன்னேற்றத்திற்கு சூத்திரம் இருப்பதுபோல, அவன் உண்ணும் உணவிற்கும் உண்டு. உடற்கூறுகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டால் அதற்குத் தகுந்தாற்போல் உணவு முறை சூத்திரத்தை மாற்றி அமைத்து உடலின் இயக்கத்தை சீர் செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வயிற்றுப்புண், குடல் புண், மலச்சிக்கல், அஜீரணம், ரத்தக் கொதிப்பு, சிறுநிரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள், மூலநோய், நிரழிவு, மாதவிடாய்க் கோளாறு என அனைத்து முக்கியமான நோய்களுக்கான உணவு ஆலோசனைகளை எளிய நடையில் சமையல் […]

Read more

திருக்கோயில் தரிசனம்

திருக்கோயில் தரிசனம், மகேந்திரவாடி உமா சங்கரன், வானதி பதிப்பகம், விலை 140ரூ. குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர்கோவில், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர்கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்பத்திரர்கோவில், கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர்கோவில், நேமம் ஆவுண்டீஸ்வரர் கோவில் மற்றும் சென்னை புறநகரில் அமைந்துள்ள கோவில்கள் உள்பட 40 கோவில்களைப் பற்றி மகேந்திரவாடி உமா சங்கரன் எழுதிய நூல்.  இந்து மத நெறியை அறிந்து கொள்ளவும், இந்தக் கோவில்களைத் தரிசிக்கவும் இந்த நூல் பெரிதும் உதவும். நன்றி: தினத்தந்தி, 12/2/2016.   —- முற்லிம் பெண்களின் நேர்வழிகாட்டி, எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், விலை […]

Read more

சொல்வேட்டை

சொல்வேட்டை, நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. தமிழுக்குப் புதுசொற் செல்வம் தேடிய ஓர் இலக்கியப் பயணம்! தமிழ்மொழியில் புதிய சொற்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியாக ஒரு முத்திரை பதித்து உள்ளார் நூசிரியர் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன். புதிய விஞ்ஞான படைப்புகள் எடுத்துக்காட்டாக டிஜிடல், பென் ட்ரைவ், ஆன்டெனா போன்ற இவற்றக்கெல்லாம் என்ன தமிழ் பெயர் பயன்படுத்துவது? என்று தெரியாமல், ஆங்கில பெயரையே எல்லோரும் பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள பல ஆங்கில சொற்களுக்கும் தமிழ் வார்த்தை இல்லாமல் ஆங்கில சொற்களையே […]

Read more

தடம் பதித்த தலைவர்கள்

தடம் பதித்த தலைவர்கள், எஸ்.பி.எழிலழகன், சுரா பதிப்பகம், விலை 250ரூ.‘ மகாத்மா காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, ராஜாஜி போன்ற தலைவர்கள், அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி தமிழ அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றும் எஸ்.பி. எழிலழகன் எழுதியுள்ள நூல். இந்தத் தலைவர்களின் வரலாற்றுக் குறிப்புகளோடு நின்று விடாமல் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு எழுப்பியுள்ள நினைவகங்கள் குறித்தும், சிலைகள் பற்றியும் கூறி இருப்பது நூலின் சிறப்பு அம்சமாகும். இந்த […]

Read more

இலக்கிய அமுதம்

இலக்கிய அமுதம், தொகுப்பு முனைவர் இரா. மோகன், திருவரசு புத்தக நிலையம், விலை 180ரூ. வெறும் உணர்வுகள் – வெறும் வார்த்தைகள் என்ற நிலைகளைக் கடந்து தமிழுக்கும், வாழ்வியலுக்கும் புதிய பரிமாணங்கள் கொடுக்கும் படைப்புகளாக இந்த ‘இலக்கிய அமுதம்’ தொகுக்கப்பட்டிருக்கின்றன. மனித குலத்திற்கு இலக்கினை இயம்பி, அவன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிமுறையினை – வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழும் நெறியினை எடுத்துரைப்பதால் இலக்கியத்தையும் இவ்வரிசையில் ‘அமுதம்’ எனச் சுட்டுவது சாலப் பொருந்தும் வகையில் 30 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனித […]

Read more

காந்தி எனும் மனிதர்

காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதயா இலக்கியப் பண்ணை, விலை 100ரூ. மகாத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில்இந்தியர்களின் உரிமைக்காக போராடியபோது, அவருடன் பழகியவர், இந்த நூலை எழுதிய திருமதி மிலி கிரகாம் போலக். “நான் அவரை (காந்தியை) எப்போதும் ஒரு மகாத்மாவாகவோ, புனிதராகவோ, நுட்பமான அரசியல்வாதியாகவோ அறிந்திருக்கவில்லை. அன்பும், மகத்தான கருணையும் நிறைந்த மனிதராகவே அவர் இருந்திருக்கிறார். இந்த மகத்தான மனிதரை வாசகர்களுக்கு கவனப்படுத்துவதே என் நோக்கம்” என இந்த நூலை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறார் நூலாசிரியை திருமதி போலக். நன்றி: தினத்தந்தி, […]

Read more

சமயாதீதம்

சமயாதீதம்(அறு சமய விளக்க உரை), ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 80ரூ. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்துள்ள சமயங்கள் சைவமும் வைணவமும் ஆகும். மனித இன சிந்தனையும் வாழ்க்கை அமைப்பு முறையும் வளர வளர இவ்விரண்டு சமயங்கள் அறுவகைசமயங்களாக விரிந்து விளங்கலாயிற்று. அதைப் பற்றிய விளக்கமே இந்நூல். சவுரம், சைவம், சாந்தேயம், வைணவம், காணபத்திய, கவுமாரம் ஆகியவை ஆறு சமயங்களாகும். சவுர சமயம் சூரியனையும், சைவ சமயம் சிவபிரானையும், சாந்தேய சமயம் சக்தியையும், காணபத்திய சமயம் கணபதியையும், கவுமார சமயம் […]

Read more

பறந்து மறையும் கடல் நாகம்

பறந்து மறையும் கடல் நாகம், ஜெயந்தி சங்கர், காவ்யா, விலை 1000ரூ. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கன்பியூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ் மூதாதையர் வழிபாடு, பெற்றோரை மதித்துப் பேணிக் காத்தல், ஆண் வாரிசுகளை உருவாக்குதல் போன்ற மூன்று முக்கிய அலகுகளைச் சுற்றி உருவானதே சீனக் கலாசாரம். அத்தகைய சீனக் கலாசாரம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர் பண்பாட்டுடன் சீனப் பண்பாடு பல வகைகளில் ஒத்துப் போகிறது. இது குறித்தும், சீனப் பெண்களின் குடும்ப வாழ்க்கை, அவர்களின் அடிமைத்தனம், சமூக சிக்கல்கள், […]

Read more
1 101 102 103 104 105 223