கூடு விட்டு கூடு பாயும் வித்தை

கூடு விட்டு கூடு பாயும் வித்தை, ஜெகாதா, அருணா பதிப்பகம், விலை 70ரூ. பிற தேகத்தில் கூடு விட்டு கூடு பாய்தல் என்பது அஷ்டா சித்தியில் பிரகாமியம் எனும் சித்தியில் அடங்குகிறது. இந்த கலை ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வு அல்ல. தனிப்பட்ட பயிற்சியும் இல்லை. பல சித்திகள் கைவரப்பெற்றதன் கூட்டு கலவையின் உச்ச சித்தியாகும். சித்தர்கள் அனுபவத்தில் கண்ட இந்த அற்புத கலையை அறிவியல் கூறுகளோடு ஒப்பிட்டு பார்த்து பிரமிக்கும் நிலையை இந்நூல் வாசிப்பில் உணரலாம். இந்நூலில் கூடு விட்டு கூடு பாயும் […]

Read more

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் 2)

சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் (பாகம் 2), உளிமகிழ் ராஜ்கமல், வானதி பதிப்பகம், விலை 180ரூ. ஏற்கனவே வெளியான சோழ சிரஞ்சீவி கரிகாலன் என்ற நாவலின் 2 வது பாகமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் முடிவடைந்ததில் இருந்து தொடங்கி, சோழத்தில் உத்தம சோழரின் ஆட்சி தொடங்கியது வரை பயணிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வினை சிறப்பாக விவரித்து உள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4)

வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4), பேராசிரியர் பானுமதி தருமராசன், புதுகைத் தென்றல், விலை 150ரூ. ஆண்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இன்றைய உலகில் பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம். சமுதாயத்தில் முன்னேற துடிக்கும் இளம் பெண்களிடையே ஒரு உத்வேகத்தை தூண்டும் வகையில், சாதனை புரிந்த வைர மங்கையர்களின் வரலாற்று தரவுகளை சுவைபட படைத்துள்ளார் ஆசிரியர். நாம் இதுவரை அறியாத, விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற சில சாதனை பெண்மணிகளின் தகவல்களையும் இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. தங்களது இலக்கை […]

Read more

நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, சி.அசோக், மணிமேகலை பிரசுரம், விலை 225ரூ. மாறிவரும் உணவு பழக்கங்களின் காரணமாக இன்று எண்ணற்ற நோய்கள் நம்மை ஆட்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களுக்கான காரணங்கள், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் மற்றும் அந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கூறுவதே இந்நூல். அகில இந்திய வானொலி, திருச்சி கோடை எப்.ம்., தருமபுரி எப்.எம். ஆகியவற்றில் ‘நாளும் நலம் நாடி’ என்கிற தலைப்பில் மருத்துவம் தொடர்பாக தான் ஆற்றிய சொற்பொழிவுகளை எழுத்து வடிவமாக்கி புத்தகமாக தந்து இருக்கிறார் மருத்துவர் சி.அசோக். முதல் தொகுதியாக […]

Read more

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும்

வலம்புரி ஜானும் சில பனங்கிழங்குகளும், பானுமதி பாஸ்கோ, நெய்தல்வெளி, விலை 100ரூ. எழுத்து, பேச்சு ஆகிய இரு பெருங்கலைகளில் வல்லவராக விளங்கி மறைந்த வலம்புரி ஜானுடனான தனது அனுபவங்களை நூலாசிரியர் அழகு தமிழில் பதிவு செய்துள்ளார். தனது முதல் சந்திப்பில் வலம்புரி ஜான் பனங்கிழங்கு அளித்து உபசரித்த நினைவில், அதையே புத்தகத்துக்கு தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர். வலம்புரி ஜானைப்பற்றிய அரிய பல தகவல்களை சுவைபட எழுதி இருக்கிறார். 1957-ல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்தி, ஆங்கிலம், தமிழுக்கு விளக்கம் அளித்து கலைஞர் கருணாநிதி கூறிய […]

Read more

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள், கே.எஸ்.சுப்ரமணி, புதிய புத்தக உலகம், விலை 140ரூ. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எந்த உணவுப் பொருளை எப்படி சாப்பிட்டால் எந்த பாதிப்பு தீரும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்பவை மிக எளிய முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக நீண்ட காலம் இளமைத் துடிப்புடன் வாழ இந்த நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும். கை விரல் முத்திரைகள் மூலம் பல வியாதிகளை விரட்டலாம் என்ற தகவல் வியப்பு அளிக்கிறது. […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், தொகுப்பு அ.வெண்ணிலா, சாகித்திய அகாடமி, விலை 200ரூ. வரலாற்றில் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை போன்ற தொகுப்பு ஆசிரியரின் முன்னுரை, பல அரிய தகவல்களைத் தாங்கி இருக்கிறது. சங்க காலத்திற்குப் பிறகு, தற்போதுதான் அதிக அளவில் தோன்றி இருக்கும் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பலரின் ஆற்றலை வெளிக்கொணர்ந்து அவர்களை மெச்சும் வகையில் இந்தக் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கவிதையும் ஆழ்ந்து படித்து இன்புறும் வகையில் அமைந்து இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

நவீன தாமிரபரணி மஹாத்மியம்

நவீன தாமிரபரணி மஹாத்மியம், முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், விலை 450ரூ. தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திற்கு உள்ளேயே ஓடி கடலில் கலக்கம் ஒரே நதியான தாமிரபரணி, புண்ணியமானது என்று இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தாமிரபரணியின் வரலாறு, அதன் முக்கியத்துவம், அது தொடர்புடைய அதிசயிக்கத்தக்க தகவல்கள், கதைகள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. தாமிரபரணி நதியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும் என்ற அளவு அத்தனை அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்தின் […]

Read more

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரும், சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான மனோன்மணியம் சுந்தரனாரை பற்றிய நூல் இது. அவரது இளமைக்காலம் மற்றும் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளுடன், சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் கவிதை நாடகம் குறித்தும் சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர். தனது அறிவுத்திறமையால் சுவாமி விவேகானந்தருடன் விவாதம் நடத்தி அவரை தனது நண்பராக்கிய சுந்தரனாரின் திறமையும், தமிழை அன்னையாக கருதிய அவரது மாண்பும் வியக்க வைக்கிறது. பாரதிதாசன், கவிமணி, […]

Read more

ஓடு பையா ஓடு

ஓடு பையா ஓடு, எஸ்.இளங்கோ, மேன்மை பதிப்பகம், விலை 100ரூ. இன்றைய குழந்தைகள்தான் நாளைய உலகின் தூண்கள். அந்த குழந்தைகள் இன்று அனுபவித்து வரும் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட, உலக சினிமாக்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. இந்த புத்தகம் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழந்தைகளின் போராட்டங்களை கண்முன் நிறுத்துகின்றார் ஆசிரியர். தொகுக்கப்பட்டுள்ள 20 சினிமாக்களும் நம்மிடம் எழுப்பும் கேள்விகள் பல. புத்தகத்தை படிக்கும்போதே, அந்தந்த சினிமாக்களை நேரல் பார்க்கும் உணர்வு ஏற்படுவது நிஜம். நன்றி: தினத்தந்தி, 24/10/2018. இந்தப் […]

Read more
1 33 34 35 36 37 223