இந்தியாவில் கடல் கோட்டைகள்

இந்தியாவில் கடல் கோட்டைகள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், பக்.272, விலை ரூ.275. பாதுகாப்பற்ற கடல்களுக்கு நடுவே பாதுகாப்பான கோட்டைகளை அமைப்பது என்பது சாதாரண விஷயமா? ஆனால், அப்படிப்பட்ட கோட்டைகளையும் அமைத்துள்ளனர் என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. உலகில் எங்கெல்லாம் கடல் சார்ந்த நாடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் தமது நாட்டைப் பாதுகாக்க இந்த வகை கடல் கோட்டைகள் அமைக்கப்படுகின்றன. இவை ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கடல் கோட்டைகள், கடல் நடுவில் துறைமுக வசதி கொண்ட மணல் தீவுகள் அல்லது பெரிய பாறைத் […]

Read more

1974 – மாநில சுயாட்சி – மைய – மாநில உறவு ஆய்வுக்குழு

1974 – மாநில சுயாட்சி – மைய – மாநில உறவு ஆய்வுக்குழு (ராஜமன்னார் குழு) அறிக்கை மற்றும் அதுதொடர்பான விஷயங்களின் தொகுப்பு,  ஆழி செந்தில்நாதன், ஆழி பப்ளிஷர்ஸ், பக். 608, விலை ரூ. 1,000. 1974 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானம், அதன் மீதான விவாதங்களின் உரை ஆகியன நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அரை நூற்றாண்டுக்கு முன்னரே மத்திய, மாநில உறவுகள் அறுபட்டுவிடாமல் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து திமுக தலைவரான மறைந்த கருணாநிதி சிந்தித்திருப்பதுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.  ‘ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க […]

Read more

சான்றுச் சட்டவியல்

சான்றுச் சட்டவியல், தி.வ.தெய்வசிகாமணி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், பக். 544, விலை ரூ.500. சான்று சட்டத்தின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் தெசிணி விரிவாக, எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கிறார். இதுமட்டுமின்றி, பொருண்மைகள் (உண்மைகள்), சான்றுரைஞர்கள், ஆவணச் சான்றுகளின் வழிநின்று, அதனை மெய்ப்பிப்பதற்கான நடைமுறைகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் விதிவிலக்குகளும் இடம்பெற்றுள்ளன. வாய்மொழிச்சான்றே முக்கியம் என திரைப்படத்தின் மூலம் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட ஒரு நம்பிக்கை கண்ணாடியைப் போல் நொறுங்குகிறது. வாய்மொழிச்சான்று கூறுபவரின் நடத்தை உள்ளிட்டவற்றை உற்று நோக்கிய பிறகே அதன் […]

Read more

பார்கின்சன்ஸ் நோய்

பார்கின்சன்ஸ் நோய், பேராசிரியர் டாக்டர் ம.தனராஜ், டாக்டர் எம்.டி. சாரிட்டபிள் டிரஸ்ட், பக்.136, விலை ரூ.500. நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன்ஸ் நோயைப் பற்றிய புரிதலை பாமரர்களுக்கும் ஏற்படுத்தும் வகையிலானதொரு நூல் இது. நரம்பியல் துறையின் முதன்மையான மருத்துவ நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் டாக்டர் ம.தனராஜ் எழுதியிருக்கும் நூல் இது என்பதே அதன் கூடுதல் சிறப்பு. மருத்துவத் துறையில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் பல பிரபல மருத்துவர்களின் ஆசானாக உள்ள தனராஜ், இந்தப் புத்தகத்தின் வாயிலாக எளிய வாசகர்களுக்கும் நடுக்குவாதம் குறித்து வகுப்பு எடுத்திருக்கிறார். […]

Read more

என் பார்வையில் பிரபலங்கள்

என் பார்வையில் பிரபலங்கள், பி.ஆர்.துரை, வர்த்தமானன் பதிப்பகம், பக். 316, விலை ரூ. 250, நூலாசிரியர் தனது வாழ்நாளில் சந்தித்த 73 பிரபலங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சிறுவனாக நாடகங்களிலும், திரைப்படங்களிலும் தனது கலை வாழ்வைத் தொடங்கியவர் பி.ஆர்.துரை. இதில் எஸ்.வி.சகஸ்ரநாமம், ஜெமினி கணேசன், ஏ.பி.நாகராஜன், நாகேஷ் போன்ற முந்தைய தலைமுறை கலையுலக மன்னர்கள் முதல், கலையுலகிலிருந்து அரசியலுக்குள் நுழைந்த ஜாம்பவான்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோர் வரை இடம் பிடிக்கின்றனர். ஒருசில தொழிலதிபர்களும் உண்டு. இவர்களுடன் ஏற்பட்ட […]

Read more

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை, மருதன், கிழக்குப் பதிப்பகம், பக். 440, விலை ரூ.475, சிந்து சமவெளி நாகரிகம் முதல் தற்போது வரை இந்தியாவின் வரலாற்றைப் பலர் பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தப் புத்தகம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பார்வையில் இந்தியாவின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. கிரேக்கரான ஹொரோடோட்டஸில் தொடங்கி, தீஷியஸ், நியார்கஸ், மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்க்கோபோலோ, இபின் பதூதா, நிக்கோலா காண்டி, வாஸ்கோடா காமா, சீகன் பால்கு எனப் பல வெளிநாட்டவர்களின் குறிப்புகள் இதில் விரிவாக உள்ளன. இந்தியாவுக்கு வருகை […]

Read more

மனதின் குரல்

மனதின் குரல் (5 தொகுப்புகள்); பிரதமர் நரேந்திர மோடி, செந்தில் பதிப்பகம், பக். 1,664 (336+328+336+328+336), 5 தொகுப்புகள்: ரூ.2,000. விஜயதசமியன்று 2014 அக். 3-ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடியின் “மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி ஒலிபரப்புத் தொடங்கியது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று வானொலியில் உரையாற்றும் நிகழ்ச்சியானது, 87-ஆவது நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறது. இதில் 85 உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 5 தொகுப்புகளாக வெளிக்கொணர்ந்திருப்பது ஆவணப் பெட்டகமே. உரையாடலில் பல்வேறு, தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும் அதில் தமிழகத்தைப் பற்றியும், […]

Read more

சைக்கோதெரபி

சைக்கோதெரபி,  அசரியா செல்வராஜ்,  கண்ணதாசன் பதிப்பகம், பக்.360, விலை ரூ.350.   உடலில் உயிர் இருக்கும்வரை உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. அதுபோலத்தான் மன நலப் பாதிப்பும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் குறையுள்ளவர்கள்தான் என்கிறது மருத்துவத் துறை. ஒருவரது மனநிலை, பேச்சு, நடத்தை முதலியன பிறருக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தொடர்ந்து அளிக்கும்பட்சத்தில் அவருக்கு மன நலச் சிகிச்சை தேவை. மன நலச் சிகிச்சை குறித்த பல்வேறு அம்சங்களை 60 அத்தியாயங்களில் மிகவும் நுணுக்கமாக எளிய தமிழில் இந்த நூல் விளக்குகிறது. மருந்துகளைத் […]

Read more

டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை

டிசிஎஸ் – ஒரு வெற்றிக் கதை, எஸ்.ராமதுரை, தமிழில் – கி.இராமன், கிழக்கு பதிப்பகம், பக். 456, விலை ரூ.550. டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியோடு தனது வாழ்க்கையை நகர்த்தியவரும், அதன் தலைமைப் பொறுப்பை வகித்தவருமான ராமதுரையால் எழுதப்பட்டது இந்நூல். தன்னம்பிக்கை பேச்சாளர்கள் நூறு மணி நேரம் பேசினாலும்கூட கிடைக்காத உத்வேகத்தை தனித்து நின்று ஜெயித்துக் காட்டிய ஒருவரது கதை தந்துவிடும் என்பதை உணர்த்தும் நூல் இது. டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம், அருகம்புல் அளவில் தொடங்கியது முதல் ஆலமரமாக கிளை பரப்பியது வரை […]

Read more

அறவாணரின் கீழ்க்கணக்கு உரை  சிறப்பியல்புகள்

அறவாணரின் கீழ்க்கணக்கு உரை  சிறப்பியல்புகள், இனம் பதிப்பகம்,  பக் 208, விலை  ரூ.200,  பதினெண்கீழ்க்கணக்கு க.ப.அறவாணன் எழுதிய உரைத்திறம் எத்தகையது என்பதை அறிவதற்தென்றே ஓர் ஆய்வரங்கத்தை நடத்தி, கட்டுரை உருவாக்கத்துக்கான நெறிமுறைகளைப் பேராளர்களுக்கு அனுப்பி, அறவாணரின் உரை சிறப்பியல்புகள் பெறப்பட்டன என்று இந்நூல் உருவான விவரத்தை முன்னுரை தெளிவாக்குகிறது.  அந்த வகையில், க.ப.அறவாணன் உரை நூல்களில் கையாண்டுள்ள சொல், தொடருக்கான பொருள் பொருத்தப்பாட்டை உரிய சான்றுகளுடன் சுட்டிக் காட்டுவது; ஒவ்வொரு பாடலுக்கும் அவர் கொடுத்துள்ள தலைப்பின் பொருத்தத்தை விளக்குவது, கட்டமைப்பு நோக்கில் அவரது மொழியாளுமைகளை […]

Read more
1 2 3 4 180