திருஅருட்பா தொகுதி 1 மற்றும் 2

திருஅருட்பா தொகுதி 1 மற்றும் 2, சிவாலயம் ஜெ.மோகன், சிவாலயம் வெளியீடு, சென்னை, பக். 772, 586, விலை 650, 500ரூ. மரபை பின்பற்றி புதிய பதிப்பு To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-205-0.html அகத்தே கறுத்து புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும், சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட இறைவனால், இந்த உலகிற்கு வருவிக்க உற்ற அருளாளர் வள்ளல், ராமலிங்க அடிகள் இயற்றிய, 5818 பாடல்களை, இந்த பதிப்பாசிரியர் முந்தைய பதிப்பாளர்களை ஆதாரமாக கொண்டு, அழகுற பதிப்பித்துள்ளார். சைவ திருமுறைகள் […]

Read more

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்)

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்). ப. கலாநிதி, செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 80, விலை 70ரூ. பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயமா? இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கால்மாட்டில், விளக்கேற்றி வைத்து விட்டதால், ஆங்கில மருத்துவ முறைகள், அரியணையில் அமர்ந்துவிட்டன. பெரும்பாலான பிரசவங்கள், அறுவை சிகிச்சையில் முடிகின்றன. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமானதற்கு கூட்டுக்கு குடும்ப வாழ்வு சிதைந்ததும் ஒரு காரணம். இன்றைய நிலையில் மீண்டும், மரபு வழி மருத்துவ முறைகளின் […]

Read more

தாய்மைப் பொருளாதாரம்

தாய்மைப் பொருளாதாரம், காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா, இயல்வாகை குவாவாடீஸ், பக். 196, விலை 120ரூ. அமெரிக்க உதவி தூக்கு கயிறுக்குச் சமம் அமெரிக்காவின் உதவி தூக்கு கயிறுக்கு சமமானது. இப்படி சொன்னவர் காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா. இந்த விமர்சனம் அந்த நாளில் பலத்த எதிர்ப்பை சந்தித்தபோதும், குமரப்பாவின் பின்வாங்கவில்லை. இந்திய மண்ணுக்குரிய பொருளாதாரத்தை காந்திய சிந்தனையின் அடிப்படையில், கட்டமைக்க முற்பட்டவர் குமரப்பா. இந்த நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளவர் வெ. ஜீவானந்தம். எளிய நடையில், மொழியாக்கம் உள்ளது. […]

Read more

நாரதர் கதைகள்

நாரதர் கதைகள், பாலகுமாரன், விசா பதிப்பகம், பக். 160, விலை 90ரூ. நாரதர் என்றவுடன், அவர் பெரும் கலகக்காரர், புராணகால மாந்தரிடையே சண்டை மூட்டிவிடுபவர், கோள் மூட்டுவதே அவருடைய தொழில் என்பதான எண்ணம் பலருக்கும் எழுவது இயல்பு. அதன் அடிப்படையிலேயே தமிழில் சில திரைப்படங்களும் வந்துவிட்டன. ஆனால் நாரதர் கோமாளியோ, கோள்மூட்டியோ அல்ல. தந்திரக்காரரோ, பிறரை இழிவுபடுத்துபவரோ அல்ல. மிகச்சிறந்த மகரிஷி, இசை வல்லுனர். தாமும் நல்வழி நடந்து, பிறரையும் நல்வழி நடக்கச் செய்பவர். பக்திக்கு ஒரே சிறந்த உதாரணம் நாரதர். நாரதரைச் சரியாகப் […]

Read more

வீரக்கதைப் பாடல்கள்

வீரக்கதைப் பாடல்கள், எம்.எம்.மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், பக். 152, விலை 110ரூ. போர்க்களத்தில் வீர முழக்கமிடும் ஒன்போது நாடோடிப் பாடல்களை ஆய்கிறது நூல். இரவிக்குட்டிப் பிள்ளைப் போர், கான் சாகிபு சண்டை, தம்பிமார் கதை, இராமப்பய்யன் அம்மானை ஆகிய நான்கும், தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னால் எழுந்த வீர நிகழ்ச்சி போர் பாடல்கள். காசீம் படைப்போர், அலியார் படைப்போர், சைத்தூன் கிஸ்ஸா, சக்கூன் படைபபோர், மலுக்கு மலுக்கு ராஜன் கதை ஆகிய ஐந்தும் முஸ்லிம் பெயர் பூண்ட போர் பாடல்கள். வீரச்சுவை எல்லாவற்றிலும் […]

Read more

இளைப்பாறும் சுமைகள்

இளைப்பாறும் சுமைகள், குன்றக்குடி சிங்காரவடிவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. அடிமாடுகள் படும் அவஸ்தைகள் இளைப்பாறும் சுமைகள் என்ற சிறு கதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். குன்றக்குடி சிங்காரவடிவேலு எழுதியுள்ள 15 சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தமிழில், ஜாம்பவான் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களோடு, ஒப்பிடும் அளவுக்கு இளம் எழுத்தாளர்களும், வந்துகொண்டே இருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் ஒன்றை, மற்றொன்று முந்திச் செல்வதுபோல், ஜாம்பவான்களை, இளம் எழுத்தாளர்கள் முந்தி செல்வதும் நடந்துகெண்டு […]

Read more

மானா

மானா (இமயத்தின் மகள்), ராதா பட், தமிழில் கே.என். சாருமதி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 216, விலை 200ரூ. ராதா பட், தன் 16 வயதிலேயே கவுசானியிலுள்ள லட்சுமி ஆசிரமத்தில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக உத்தரகண்ட் மலைப் பகுதியில் வாழும் பெண்களுக்கு கல்விப்பயிற்சி கொடுத்துள்ளார். 1957ல் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் ஐக்கியமானார். உத்தரகண்ட் பகுதியில் மதுவிலக்கு இயக்கம் நடத்தி பெரும்பாலும் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். ‘சிப்கோ’ இயக்கத்தில் ஈடுபட்டு வனப் பாதுகாப்பு, வனப்பொருட்களை நீடித்துப் பயன்படுத்தும் முறைகள் பற்றி பெண்களுக்கு கல்வி […]

Read more

சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு

சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு, சு. தாமரைப் பாண்டியன், அருள் பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-335-9.html கவுரவ கொலைகள் சங்க காலத்திலும் நிகழ்ந்ததா? பண்டைக் காலந்தொட்டே, தமிழ் சமூகத்தில் ஆண்டிகளும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதற்கு காரணம், கீழ்த்தட்டு மக்களின் இனப்பற்றும், குல மானமும், குலத் தூய்மையுமே ஆகும். மேலும், அனைத்து இனங்களும், சம்பந்த வழி உறவுடைய கிளையினருடன் மட்டுமே, மண உறவு வைத்து கொள்கின்றனர். “புல்லு அறுத்தா தொழுபட்டிக்குத் தான் […]

Read more

ஒரு தலித்திடமிருந்து

ஒரு தலித்திடமிருந்து, வசந்த் மூன், தமிழில் வெ. கோவிந்தசாமி, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 285, விலை 220ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-287-0.html தலித் சமூக உட்பிரிவு பகைமையை அம்பேத்கர் இயக்கம் எதிர்கொண்டது எப்படி? டாக்டர் அம்பேத்கரின் வரலாற்றை ஆதாரத்தோடும் சுவையாகவும் எழுதியவர் வசந்த் மூன். மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் நூல்களுக்கு தொகுப்பாசிரியராக இருந்து அம்பேத்கரின் எழுத்துக்களை, பேச்சுக்களை மக்கள் முன் வைத்தவர். அம்பேத்கரின் தொண்டர் படை அமைப்பில் சேர்ந்து கடைசி வரை […]

Read more

நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள்

நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள், ருத்ராங்சூ முகர்ஜி, பெங்குயின் பதிப்பகம். வங்க எழுத்தாளர் ருத்ராங்சூ முகர்ஜி எழுதி, பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள்’ (நேரு அண்டு போஸ் பேரலல் லைவ்ஸ்) என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். நேதாஜியை விட, நேரு எட்டு வயது மூத்தவர். இருவரும், பெரும் செல்வ குடுங்பங்களில் பிறந்தவர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர்கள். நேரு நினைத்திருந்தால், அவரது தந்தை வழியில், பிரபல வழக்கறிஞர் ஆகியிருக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் தற்போதைய ஐ.ஏ.எஸ்., போல, ஐ.சி.எஸ்., தேர்ச்சி பெற்றவர் […]

Read more
1 171 172 173 174 175 240