ரசிக்க… சமஸ்கிருதம்

ரசிக்க… சமஸ்கிருதம், அபிநவம் ராஜகோபால், ஜெனரல் பப்ளிஷர்ஸ், விலைரூ.160. சமஸ்கிருதத்தில் உள்ள அறக் கருத்துகளையும், நீதிகளையும் எளிய முறையில் அறிந்து கொள்ள ஏதுவாக, எட்டு தலைப்புகளில் வாழ்வியல் நுட்பங்களை பதிவு செய்துள்ளார். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், தெருவில் பொதுமக்கள் குப்பையைக் கொட்டினால் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை பதிவு செய்துள்ளது. வேத காலத்தில் ஆண்களுடன், பெண்களும் சில தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சாணக்கியரின் காலத்தில், ஓலைச் சுவடிகளில் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. நான்கு வேதங்கள் குறிப்பிடும் அறக் கருத்துகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. குற்றத்திற்கு ஏற்ற […]

Read more

புனிதம் தேடும் புதினம்

புனிதம் தேடும் புதினம், கவுதமன் நீல்ராஜ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலைரூ.70. திருநங்கையரின் காதல் பற்றிய புரிதலையும், உணர்வுகளையும் வெளிக்காட்டுகிறது இந்நாவல். காதலுடன் பெற்றோரைத் தொலைத்த சோகம், வருத்தம், தனிமை, வேலைக்குச் செல்லும் இயல்பு, இயலாமை என அனைத்துப் பக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார். செங்கோடனாகப் பிறந்து சிறுநகையாகமாறிய திருநங்கையைக் கடைசியில் அவரது பெற்றோர் ஏற்கச் செய்வது நம்மை நெகிழச் செய்கிறது. இனிய துாய தமிழ் நடையைக் கையாண்டும் புனிதப்படுத்திக் கொண்டுள்ளது. திருநங்கையருக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு, காதல் உண்டு என மெல்லிய நுாலிழையில் கோர்த்து […]

Read more

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!, முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80 ‘புதியன கண்ட போழ்து விடுவரோபுதுமை பார்ப்பார்’ என்ற கம்பன் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பல்வேறு அரிய அறிவியல் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். ஆற்றல் அழிவின்மை விதியை உணர்த்தும் முதல் பாடல் துவங்கி, யுத்த காண்டத்தில், கம்பன் கணக்காக படைகளின் பலத்தைக் காட்டுவது ஈறாக, 19 கட்டுரைகளில் அறிவியல் நுட்பம் அணிவகுத்து உள்ளது. சோலார் கருவிகளின் பயன்பாட்டை, வருணனை வழி வேண்டுபடலத்தில் ஒப்பிடும் திறம் புதுமை. ‘விசை இலவாக தள்ளி வீழ்ந்தன’ என்னும் […]

Read more

கந்தனே உனை மறவேன்

கந்தனே உனை மறவேன், திருப்புகழ் மதிவண்ணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220. ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!’ என்ற பழமொழிக்கு இணங்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கும் தேவ சேனாதிபதி வரலாற்றை விளக்கும் நுால். பக்திரசம் சொட்ட எழுதியுள்ளார் மதிவண்ணன். கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், நக்கீரர், தாயுமானவர், வள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி, சரளமான நடையில் தற்கால பாடல் வரிகளையும் புகுத்தி எழுதப்பட்டுள்ளது. கந்தனின் பிறப்பு, வளர்ப்பு, திருவிளையாடல்கள், வேல் […]

Read more

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும்

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும், முனைவர் பெ.ராஜேந்திரன், காவ்யா, விலைரூ.300. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைச் சிறப்பாக விவரித்து, கல்வெட்டு, செப்பேடு, மெய்கீர்த்தி மற்றும் இலக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொல்தமிழர் வாழ்வியல் அடையாளங்களை விளக்கிக் கூறும் நுால். அகழாய்வில் கிடைத்த பொன், இரும்புக் கருவிகள், மண்பாண்ட எச்சங்கள், வெண்கலப்பொருட்கள், வேளாண் பொருட்கள், நுண்கலைப் பொருட்கள், தாழிகள், தங்கப் பட்டைகள், மனித எலும்புகள், போர்க்கருவிகள் மற்றும் தரவுகளைத் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் அரசு ஆவணங்கள், கள ஆய்வு தரவுகள் மற்றும் […]

Read more

ஊடகச் சட்டங்கள்

ஊடகச் சட்டங்கள், சந்திரிகா சுப்ரமண்யன், சந்திரோதயம் பதிப்பகம், விலைரூ.250. ஊடக சட்டங்கள் மற்றும் அறங்கள் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம், 16 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. எளிய மொழிநடையில் புரியும் வகையில், குறுந்தலைப்புகளில் நேரடி அடுக்கமைவு முறையில் தகவல்கள் அமைந்துள்ளன. ஊடகம் பற்றி மகாத்மா காந்தியின் பொன்மொழியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, நான்காவது துாண், இந்தியாவில் ஊடக சுதந்திரம் போன்ற விபரங்கள் தனித்தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயே ஆட்சியில் ஊடக சுதந்திரம் தனி இயலாக உள்ளது. ஊடகத்துறை வளர்ச்சி மற்றும் வணிகம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை, […]

Read more

புதுமையான தமிழ்ச் சீரமைப்பும் உச்சரிப்பும்

புதுமையான தமிழ்ச் சீரமைப்பும் உச்சரிப்பும், கே.எஸ்.சக்திகுமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150. தமிழ் எழுத்து வரி வடிவங்களை, 28 என்ற எண்ணிக்கையில் சீரமைத்து விளக்கமாக எழுதியுள்ளார். இந்த எழுத்துக்களை கணினியில் பயன்படுத்தும் முறைகளை விளக்கியுள்ளார். அதுபோல, 8 மற்றும் 9 என்ற எண்கள் சரி. ஆனால், ஒலி வடிவில், எண்பது மற்றும் தொன்னுாறு என்பதை, எண்பது, தொன்பது எனச் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். கால மாற்றம் தான் இதை ஒப்புக் கொள்ள வேண்டும். – சீத்தலைச்சாத்தன் நன்றி: தினமலர்,25/7/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

நானும் என் கணவரும்

நானும் என் கணவரும், சாலை செல்வம், இயல்வாகை, விலைரூ.70 .இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலேயின் வாழ்க்கை வரலாறு, கதை வடிவில் சித்தரித்து எழுதப்பட்டுள்ளது. எளிய உரையாடல் மூலம் நகர்கிறது. பெண்களுக்கான உரிமையை நுட்பமாக விவரிக்கிறது. கதைக்கு தக்கவாறு வண்ண ஓவியங்கள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. அவை பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சிறுவர் – சிறுமியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தரமான காகிதத்தில் தெளிவான அச்சில் தயாரிக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 27/6/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வீரம் விளைந்த வேலுார் கோட்டை

வீரம் விளைந்த வேலுார் கோட்டை, சா.திருமலை கமலநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.100 புகழ்பெற்ற வேலுார் கோட்டை பற்றிய வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பு நுால். அரிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது. வேலுார் ஊர் பெயர் காரணம் இலக்கிய ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது. வேலுார் கோட்டை வரலாறு, சிப்பாய் கலகம் வரை சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. கோட்டையில் கோலோச்சிய மன்னர்கள் பற்றிய விபரமும் கால வரிசைப்படி உள்ளது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆன்மிகத் தொண்டு புரிந்த மகான்கள் பற்றிய விபரமும் உள்ளது. […]

Read more

2050–இல் பெண்கள்

2050–இல் பெண்கள், விஜிமா, வசந்தா பதிப்பகம், விலைரூ.300. கல்வி வாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் அவலம் துவங்கி, இன்றைய செழுமையான சூழலை விவரித்து, படிப்பறிவாலும், பட்டறிவாலும், விழிப்புணர்வும் நன்மதிப்பும் எய்தி வருவதை விளக்கிச் சொல்லும் நுால். கடந்த நுாற்றாண்டுகளில் பெரும்பான்மைப் பெண்கள், ஆண்களைச் சார்ந்து இல்லற இயந்திரமாகவும், போகப் பொருளாகவும் உழன்ற நிலைமை மாறி, உயர்ந்த வேலைவாய்ப்புகளால் செல்வாக்கு, எழுச்சி, முன்னேற்றம், தன் மதிப்பு உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, கல்வி வளர்ச்சியே பெண்களின் நிலையை புதிய தளத்துக்கு உயர்த்தி இருப்பதை முன்வைக்கிறது. […]

Read more
1 19 20 21 22 23 240