மருதநாயகம் என்ற மர்ம நாயகம்

மருதநாயகம் என்ற மர்ம நாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், பக்.336, விலை ரூ.300. மருத நாயகத்தின் 39 வருட வாழ்க்கையை பல்வேறு ஆவண ஆதாரங்களுடன் தேதி வாரியாக விரிவாக அலசுகிறது இந்நூல். மருதநாயகம் இந்துவா, இஸ்லாமியரா அல்லது இந்துவாகப் பிறந்து இஸ்லாத்துக்கு மாறினாரா என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அதுபோன்றேஅவர் ஆங்கிலேயர்களை தமிழக மண்ணில் வேரூன்ற வழிவகை செய்தாரா அல்லது விடுதலை வீரரா என்பதை வாசகர்களின் முடிவுக்கு நூலாசிரியர் விட்டுவிடுகிறார். 17-ஆம் நூற்றாண்டில் முகலாயர், ஜமீன்தார், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள் என நான்கு முக்கிய […]

Read more

யோகா அறிவியலும் ஆரோக்கியமும்

யோகா அறிவியலும் ஆரோக்கியமும், பி.கே. அய்யாசாமி, மணிமேகலைப் பிரசுரம், விலை 280ரூ. கொரோனா காலத்தில் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. அமெரிக்க பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரிந்து பல்வேறு நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த இந்த நூலின் ஆசிரியர், உடல் நலத்துக்கான அனைத்து ஆசனங்களின் செய்முறை, அதனால் ஏற்படும் பலனகள், ஆசனத்தின் போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள் ஆகியவற்றை அறிவியல் நோக்கிலும், பட விளக்கங்களுடனும் எளிமையாகத் தந்து இருக்கிறார். யோகாவின் வரலாறு, […]

Read more

உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள்

உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள், மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு, மணிமேகலைப் பிரசுரம், விலை 140ரூ. பல்வேறு நாடுகளிலும் அரசியல் வாழ்வில் மகத்தான சாதனை புரிந்த 31 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் சாதனைச் சரித்திரம், அவனைவருக்கும் உந்து சக்தியைத் தரும் வகையில் தரப்பட்டு இருக்கிறது. இத்தாலியின் மாவீரன் கரிபால்டி, பிரான்ஸ் நாட்டின் ஜோதன் ஆப் ஆர்க், மங்கோலியாவின் செங்கிஸ்கான், இந்தியாவின் ஜான்சி ராணி, மன்னர் அசோகர் போன்றவர்களின் வீரச் செயல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமிழகத்தின் மாமன்னர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் போன்றவர்களில் ஒருவரை இந்த நூலில் இணைத்து […]

Read more

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. கொரோனா தாக்கியதால் மரணம் அடைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாறு, திரைப்படம் தொடர்பான பல துறைகளிலும் அவர் ஆற்றிய சாதனைகள் இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரைப்படத் துறையில் எவ்வாறு நுழைந்தார் என்பதும் அவரது நேரம் தவறாமை, எளிமை, நகைச்சுவை உணர்வு, எல்லோரிடமும் அன்பாகப் பழகும் தன்மை போன்ற அவரது குணாதிசயங்கள், பல்வேறு சம்பவங்ளை சுட்டிக்காட்டி அழகாகப் படம்பிடித்து தரப்பட்டுள்ளன. […]

Read more

கடவுள் இருக்கிறார்

கடவுள் இருக்கிறார், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், பக். 152, விலை 100ரூ. சுவாமி சிவானந்தாவின் கடவுள் பற்றிய சிந்தனைகளை தமிழில் தரும் நுால். அவர் அருளிய, ‘கோ எக்சிஸ்ட்’ என்ற ஆங்கில நுாலை, தமிழில் சி.கனகராஜன் மொழிபெயர்த்துள்ளார். மிக எளிமையாக கருத்துக்களை விவரிக்கிறது. நன்றி: தினமலர், 11/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்

வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், பக். 122, விலை 80ரூ. புன்னகை துவங்கி, கடவுள் முடிய அறிஞர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ள நுால். ‘உயர்ந்ததோர் லட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம், வாழ்கிறோம் என்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது…’ என்கிறார் அரிஸ்டாட்டில். ‘நம்பிக்கை குறையும் போது, ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்…’ என கணித்துள்ளார் ஜான் மில்டன். இப்படி எளிய கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. – பின்னலுாரான் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை

திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை, சுரேஜமீ, மணிமேகலைப் பிரசுரம், பக். 94, விலை 100ரூ. உலக மக்களால் உயர்த்திப் பார்க்கப்படுவது திருக்குறள். மக்களுக்குக் குறள் நெறிகளை எளிதாக உணர்த்தும் நோக்கில் உரை, வார்ப்புரை, சிறுகதைகள் எனப் பலவும் வந்த வண்ணமுள்ளன. செறிந்த செய்யுளின் கருத்தை அதன் பொருள் மாறாமல் வாசிப்புக்கு எளிமைப்படுத்தி வழக்கப்படுவது உரை. குறள்களுக்கான உரைக்கு அப்பாற்பட்டு புதுமைச் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாறுபட்ட எண்ணத் தெறிப்புகள் பலவும் பயனுள்ள அறிவுரைகளாக விளங்குகின்றன. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனும் முப்பால் அடங்கிய திருக்குறளின் […]

Read more

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும், டாக்டர் எம்.பிர்லா பவளம், மணிமேகலைப் பிரசுரம், பக். 192, விலை 160ரூ. மனிதனின் வாழ்க்கையில் கவனம் பெறும் இடத்தைக் கவன வேல் என்னும் தலைப்பில் நுணுக்கமாக ஆய்ந்துள்ள நூல். தலைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் கனமாக்காமல் எளிமையாக உணர்த்துவதற்கு இசையைத் துணைக்கு அழைத்துள்ளார். எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, இளையராஜா, எம்.எஸ். சுப்புலட்சுமி என்று பல இசைக் கலைஞர்களின் இசை லயத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பகுத்து அவற்றில் பதினொரு அத்தியாயங்களை வகுத்துத் தந்துள்ளார். மருத்துவ ஆர்வலர்களை நிச்சயம் கவரும். ஆங்கிலத்தில் […]

Read more

நல்கிராமம்

நல்கிராமம், கோ.கமலக்கண்ணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 416, விலை 250ரூ. இருபத்தோராம் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே வெகு வேகமாக செல்கிறது. புத்தகத்தை எடுத்துவிட்டால், 74ம் அத்தியாயம் வரைக்கும் படிக்க கதையோட்டம் நீரோட்டமாய் அமைந்துள்ளது. ‘பேஸ்புக், சாட்டிங்’ என்று தற்கால மொழியில் தற்காலப் பிரச்னைகளைச் சாதுர்யமாக அணுகுவதுடன், மெல்லிய காதலையும் படம் பிடித்துக் காட்டுகிறது. நாவலாசிரியர் கோ.கமலக்கண்ணனுக்கு இந்த கால பேச்சு மொழி, மிகவும் எளிமையாக வந்திருக்கிறது. கொஞ்சமும் சிரமப்படாமல், கதையை நகர்த்தும் துல்லியத்தை இந்த […]

Read more

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், சி.விநாயகமூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், பக்.268, விலை ரூ.200. கபிலர் பல இலக்கியங்களைக் பாடியிருந்தாலும், அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இலக்கியம் குறிஞ்சிப் பாட்டுதான்! கபிலருக்கும் வள்ளல் பாரிக்குமான நட்பு, தலைவன்-தலைவியரின் காவியக் காதல், கபிலர் பாடிய-கபிலரைப் பாடிய மன்னர்கள், மன்னர்களை நல்லுரை கூறி நல்வழிப்படுத்திய கபிலரின் அறிவுத் திறன் முதலானவற்றுடன், பலவகையான உயிரினங்கள் மற்றும் வரலாற்றுத் தரவுகளையும் குறிஞ்சிப் பாட்டில் காணமுடிகிறது. அவற்றை இந்நூல் விரித்துரைக்கிறது. இயற்கை வருணனைகளையும், உவமைகளையும் தகுந்த இடங்களில் எடுத்துக்கூறி, […]

Read more
1 2 3 4 16