பொருநை – ஆதிச்சநல்லூர்

பொருநை – ஆதிச்சநல்லூர் (அறிக்கைகளும், அருங்காட்சியகங்களும்), முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், பக்.383, விலை ரூ.375. ஆதிச்சநல்லூரின் தாழிகளை, இருக்கும் இடத்திலேயே பார்த்து மகிழவும், வரவிருக்கும் மத்திய அகழாய்வுத் துறை அருங்காட்சியகத்தின் விளக்கங்களையும், திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள மாநில அகழாய்வுத் துறை அருங்காட்சியகம் குறித்தும் நூல் எடுத்துரைக்கிறது.  நூலுக்கு மெருகேற்ற பல்வேறு காலங்களில் ஆதிச்சநல்லூர் குறித்து வெளியிடப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிக்கையின் முழு வடிவங்களை ‘க்யூ ஆர்’ கோடு மூலம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் முனைவர் சத்தியபாமாவின் அறிக்கையும் (2004), அதே ஆண்டில் […]

Read more

கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 270, விலை ரூ. 270. பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்தார்கள் குறித்த நூல்கள் தமிழில் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த நூல் தென் தமிழகத்தைச் சேர்ந்த இளையரசனேந்தல், குருவிகுளம் ஜமீன்தார்களைப் பற்றியது. அந்த வகையில், இரு ஜமீன்களின் பூர்விகம், வாழ்க்கை முறை, ஆன்மிக, சமுதாயப் பணிகள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் சுவாரசியமான முறையில் கூறப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடும் சம்பவத்தின்போது, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்கள்அழைப்பு விடுத்தனர். அதைப் பார்க்கும் பாளையக்காரர்கள் அஞ்சி ஒழுங்காக கப்பம் கட்டுவார்கள் என்பதே அந்த […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா; விலை:ரூ.1000. தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டுக்குள் ஓடி, கடலில் கலக்கும் புண்ணிய நதியான தாமிரபரணி தொடர்பான தகவல்கள் இந்த ‘நூலில் பொதிந்து கிடக்கின்றன. தாமிரபரணி தோன்றிய வரலாறு, அதன் குறுக்கே உள்ள கள், நீர்த்தேக்கங்கள், அருவிகள், இந்தப் பகுதியில் வாழ்ந்த அகத்தியர் பற்றிய செய்திகள், நதி தொடர்பான பழங்கதைகள், நதி செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள், முக்கிய ஸ்தலங்கள் போன்றவையும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அது தொடர்பான புராணம் மற்றும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் கதை […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக்.1040, விலை ரூ.1000. தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புராண விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள், சிற்றாறுகள், கால்வாய்கள், கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை […]

Read more

வரங்களை அள்ளித் தரும் வல்லநாடு சித்தர்

வரங்களை அள்ளித் தரும் வல்லநாடு சித்தர், முத்தாலங்குறிச்சி காமராசு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.260. மனிதனுக்குள் சொல்லொணாத ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்பவர்களை சித்தர்கள் என அழைக்கிறோம். சித்து என்றால் உயிர். சித்தர் என்றால் உயிர் உடைய ரகசியம் அறிந்தவர் என்று பொருள். ஆற்றல் பெற்றாரைச் சித்தி அடைந்தவர் என அழைப்பதுண்டு. மனத்துக்கண் மாசிலனாகி செயற்கரிய செயல்புரிபவர் சித்தர்கள். சித்தி எனும் சொல்லிற்குக் கைகூடல், முயற்சியில் வெற்றி என்பது பொருளாகும். ஐம்புலனை அடக்கும் சித்திகளில் […]

Read more

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017, முத்தாலங்குறிச்சி காமராசு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.260 அகழாய்வு என்றதும் கடந்த தலைமுறை வரை அறிந்தது சிந்துச் சமவெளி நாகரிகத்தை வெளிக்காட்டிய மொஹஞ்சதாரோ, ஹரப்பாதான். வேறெதுவும் அறியாத இந்தத் தலைமுறையினருக்குக் ‘கீழடி’யும் அங்கே நடைபெற்றுவரும் அகழாய்வுகளும் அறிமுகம். ‘தொன்மையான நதிகளின் கரைகளில் மனிதர் வாழ்ந்து மறைந்த வரலாற்றின் சுவடுகள் இருந்தே தீரும்’ என்பது மரபு. அப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அகழாய்வுகள்கூட ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்விக்கு இன்று வரை வெளிப்படையான பதிலில்லை. […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா பதிப்பகம், விலை: ரூ.1000. பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில […]

Read more

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்,  முத்தாலங்குறிச்சி காமராசு,  காவ்யா, பக்.343, விலை ரூ.350.  திருநெல்வேலி -திருச்செந்தூர் சாலையில் ஆதிச்சநல்லூர் பரம்பு என்றழைக்கப்படும் 114 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கே ஜெர்மனியைச் சேர்ந்த சாகோர் என்பவர் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல அரிய உண்மைகள் வெளிவந்தன. அதைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது. ஆதிச்ச நல்லூரில் தொல்லியல்துறையினர் 3 கட்டங்களாக அகழாய்வு செய்தனர். அவ்வாறு அகழாய்வு செய்யும்போது நிறைய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் அருகே சிறிய மண்குடங்கள், குவளைகள், மூடிகள், தீப […]

Read more

தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள்

தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள், முத்தாலங்குறிச்சி காமராசு,காவ்யா பதிப்பகம், பக்.244, விலை ரூ. 240. நெல்லைச் சீமையைப் பற்றி, தாமிரவருணி நதிக் கரையோரம் பற்றி படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு நல்லதொரு தகவல் கருவூலம் இந்நூல்.எங்கெங்கோ தேடித் தனித்தனி நூல்களில் படிக்க வேண்டிய விஷயங்களை ஒரே நூலில் திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். ஏற்கெனவே, தாமிரவருணி சார்ந்து இவர் எழுதிய, தாமிரபரணிக் கரையினிலே “தாமிரபரணி கரையில் சித்தர்களுடன் பயணிப்போம்  என்ற தொடர்கள் இணைந்து நூலாகியிருக்கிறது. நன்றி: தினமணி, 2/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள் , முத்தாலங்குறிச்சி காமராசு; காவ்யா,  பக்.1042, விலை ரூ.1000. தமிழகத்தின் தென்னாடு என குறிப்பிட்டாலும் நெல்லைச் சீமையை மையமாக வைத்து 18 ஜமீன்களின் வரலாற்றையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். மறவர், நாயக்கர் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஜமீன்களின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் நூலில் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. ஊர்க்காடு ஜமீனில் சிலம்பத்தில் சுப்புத்தேவர், அய்யங்கார் வரிசை குறித்து படிக்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது. கழுதையை வாயால் கடித்து தூக்கி எறிந்த சுந்தரத்தேவர், குத்தாலிங்கத் தேவர், கொள்ளையர்களாக இருந்து தற்போது தெய்வமாக வணங்கப்படும் […]

Read more
1 2