காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ.   To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149352.html ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியரின் துறை சார்ந்த அனுபவமும், கதை சொல்லும் ஆற்றலும், சரித்திர ஆதாரங்களும் பின்னிப் பிணைந்ததாக உள்ள இந்நூல், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என நிறுவுகிறது. பிரிக்கப்படாத பாரதம் இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிளவுபட்டபோது காஷ்மீர் தனிநாடாக இருக்க விரும்பியது ஏன்? பிறகு காஷ்மீர் மன்னர் […]

Read more

அகப்பொருள் விளக்கம்

நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், பதிப்பாசிரியர் க.வெள்ளைவாரணன், பாரி நிலையம், பக். 360, விலை 200ரூ. தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியமே இன்றைக்கு முதன்மையான இலக்கண நூலாகவும் காலத்ததால் மிகவும் தொன்மையான நூலாகவும் திகழ்கிறது. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்றுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார். பிற மொழி இலக்கண நூல்களில் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியத்தில் உள்ள பொருளிலக்கணம். இது தமிழுக்கே – தமிழருக்கே உரித்தான அக வாழ்க்கை பற்றி தமிழரின் காதல் வாழ்வின் மேன்மைகளைப் பற்றி விரித்துரைக்கிறது. தொல்காப்பியத்தின் இலக்கணக் கூறுகள் ஒவ்வொன்றையும் […]

Read more

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும், நிஜவாழ்வின் பொருளியலுக்குள் ஒரு பயணம், சி.டி. குரியன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 272, விலை 170ரூ. பொருளாதாரம் என்பது பொருட்கள், பணம் பற்றியதல்ல. அடிப்படையில் மனிதர்கள், அவர்களது சமூக உறவுகள் பற்றியது. யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்? யார் எதைப் பெறுகிறார்? என்ற மூன்று முக்கியமான கேள்விகள்தான் எந்தவொரு பொருளாதாரத்தையும் ஆய்வு செய்ய உதவும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். இந்த அடிப்படையில் பொருளியலின் பல்வேறு தன்மைகளை விரிவாக விளக்குகிறது. […]

Read more

நாடு படும் பாடு

நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. சமூக மாற்றத்திற்கு மக்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூகச் சிந்தனையுடன் கூடிய எழுத்தும் முக்கியம் என்பதை இந்த நூலின் கட்டுரைகள் உணர்த்துவதாக அமைந்துள்ளன. கட்டுரைஆசிரியர் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள சமூக, அரசியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையும், சமூக அக்கறையுடன் ஆழமான சிந்தனையுடன் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. 51 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலில் பல கட்டுரைகள் கடந்த கால […]

Read more

எனக்கு நிலா வேண்டும்

எனக்கு நிலா வேண்டும், சுரேந்திர வர்மா, தமிழில் எம்.சுசீலா, சாகித்ய அகாதெமி, பக். 960, விலை 550ரூ. குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்டு புதினம் எழுதப்படுவது புதிய விஷயமல்ல. ஹிந்தி எழுத்தாளர் சரேந்திரவர்மா, அவர் சார்ந்த நாடகத் துறையின் பலம், பலவீனங்களையும், வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் முஜே சாந்த் சாஹியே என்ற இப்புதினத்தில் மிகத் தெளிவாகச் சித்திரித்திருக்கிறார். உத்திரப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஷாஜான்பூரின் சுல்தான்கஞ்சில் எழை பிராமண ஆசிரியரின் மகளாகப் பிறந்த யசோதா சர்மா, தனது […]

Read more

ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம்

ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம் (இந்து மத ஆன்மீகத் தலைமை), வி.என். கஜேந்திர குருஜி, ஸ்ரீ பரப்பிரம்மன் ஐந்தியல் ஆய்வு மையம், பக். 1279, விலை 800ரூ. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் ஆண், முதல் பெண் யார்? என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்திருக்கறோமா? இல்லை. ஆனால் அந்த ரகசியம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. உயிரினங்கள் வாழும் பூலோகம் என்பது, விண்சேர்க்கையும் பூமிச் சேர்க்கையும் ஒன்றுசேர்ந்த இடமாகும். பூலோகத்தில் ஆண்தன்மையும், பெண்தன்மையும்இணைந்து அலித் தன்மையில் ஓர் உருவம் என அமைந்ததுதான் ஸ்ரீபரப்பிரம்மம். அந்தப் பிரம்மம் ஆண்-பெண் […]

Read more

மாமதுரை

மாமதுரை, பொ. இராசேந்திரன், சொ. சாத்தலிங்கம், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 282, விலை 250ரூ. பண்டைத் தமிழரின் இதிகாச, புராண, சங்ககால பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது மதுரை மாநகர். மதுரை நகரின் வரலாற்றை எழுதுவது எனும் பணியில் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியர்களின் வரலாற்றை எழுதாமல் எழுத முடியாது என்பதைக் கூறும் நூலாசிரியர்கள் சங்ககாலப் பாண்டியர், முற்காலப் பாண்டியர், பிற்காலப் பாண்டியர் போன்றவர்களைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளனர். பாண்டியர் இல்லையேல் தமிழ் இல்லை எனும் அளவுக்கு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். […]

Read more

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும், உ.வே. சுவாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 194, விலை 100ரூ. நூலாசிரியரின் இருநூல்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியது நான் கண்டதும் கேட்டதும் தொகுப்பு. இதில் தனிப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய வரலாறுகள் சில. சரித்திர சம்பந்தமானவை சில. முள்ளால் எழுதிய ஓலை என்ற கட்டுரை தினமணி பாரதி மலரில் வெளிவந்தது. மருது பாண்டியரின் பரோபகாரச் சிந்தையையும் தம் குடிகளை தாய்போல் காப்பாற்றும் பாங்கையும் இக்கட்டுரை எழுத்தாளுமையுடன் எடுத்துரைக்கிறது. இக்கட்டான […]

Read more

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1)

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(தொகுப்பு 1), தொகுப்பாசிரியர் அ. சிதம்பரநாத செட்டியார், விகடன் பிரசுரம், பக். 304, விலை 120ரூ.   To buy this Tamil book online : http://www.nhm.in/shop/1000000021817.html தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கல்கி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அகிலன் உள்ளிட்ட 20 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே படித்திருக்கக்கூடிய கதைகள்தாம் என்றாலும், அத்தனை சிறுகதைகளையும் ஒரே புத்தகமாகப் படிக்கின்ற வாய்ப்பு பரவசத்தைத் தருவதாக உள்ளது. எல்லாச் சிறுகதைகளிலும் கதை இருக்கும். ஆனால் […]

Read more

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை

தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரை, திரட்டித் தொகுத்தவர் ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 327, விலை 260ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024589.html கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தைப் பற்றி பலர் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள், குறிப்புகள் பலவற்றிலிருந்து 140 தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை முதல் நீலகிரி வரை மற்றும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான பயணக் குறிப்புகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் தூர தேசப் பிரயாணம் செய்வது அசாத்தியமான காரியம். […]

Read more
1 114 115 116 117 118 180