சயாம் – பர்மா மரண இரயில் பாதை

சயாம் – பர்மா மரண இரயில் பாதை, சீ. அருண், தமிழோசை பதிப்பகம், பக். 232, விலை 180ரூ. மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு இலங்கையில் மட்டும்தான் தமிழர்கள் இனப்படுகொலைக்கும், பாலியல் வன்முறைக்கும், சொல்லொணாத் துயருக்கும் ஆளானதாக தற்கால உலகம் அறிந்து வைத்திருக்கும். ஆனால் சயாம் – பர்மா தொடர் வண்டிப்பாதை கட்டுமானத்தில், எண்ணிலடங்கா இன்னல்களை அடைந்து உயிர்நீத்தவர்கள் நம் தமிழ் மூதாதையர்கள் என்ற மறக்கப்பட்ட வரலாற்றை இந்நூல் நமக்கு கண்ணீர் மல்க எடுத்தியம்புகிறது. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் இந்நூலை வாசிக்க வேண்டும். இந்நூல் மலாயாவில் […]

Read more

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்

சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என்று பல துறைகளில் சாதனையாளராகத் திகழ்ந்தவர் பாக்யராஜ். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் அவரது பாணியில் அமைந்த திரைப்படங்கள் தமிழக மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன என்றால் அது மிகையாகாது. முந்தானை முடிச்சு தொடங்கி பாக்யராஜ் இந்திய 24 திரைப்படங்களின் துணை கொண்டு, அவரது அறிவுகூர்மையையும் விரிவாக அலசியிருக்கிறார் நூலாசிரியர். மேலும் ஒவ்வொரு திரைப்படத்தை இயக்கும்போதும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள், கடைபிடித்த […]

Read more

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 312, விலை 360ரூ. தொல்காப்பியர் பெயர்க் காரணம், அவரது காலம், அவர் முந்துநூல் கண்டது, தொல்காப்பிய விளக்கம், அதிகாரமும் உட்பிரிவுகளும், தொல்காப்பியத் திணைகள், நூற்பாக்கள் போன்றவற்றை விளக்கிவிட்டு, தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள தாவரங்களின் பட்டியலைத் தந்திருக்கிறார் நூலாசிரியர். அதன்படி, அரை, ஆண், ஆர், ஆல், ஆவிரை, இல்லம், உதி, உழிஞை, உன்னம், எகின், கடு, ஞமை, தளா, காஞ்சி, தும்பை, நமை, குமிழ், குறிஞ்சி, காந்தள், நொச்சி, பனை, பீர், மருதம், முதலிய 48 […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இண்டக்ரேட்டர், பக். 144, விலை 120ரூ. இயற்கை விவசாய ஆராய்ச்சி விஞ்ஞானியான நூலாசிரியர், செயற்கை ரசாயன உரங்களால் நமது மண் மாசடைந்து, விவசாயம் செய்யவே தகுதியற்றதாக மாறிவிட்டதைக் கண்டு கொதித்து எழுபவர். அவருடைய இயற்கை விவசாயம் சார்ந்த தேடல்கள், அனுபவங்கள், தெளிவான கருத்துகளின் தொகுப்பே இந்நூல். பசுமைப் புரட்சிக்கு முன்பே நிலத்தில் ரசாயன உரங்களைப் போடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை […]

Read more

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி

எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. திரைப்படத்துறையில் முத்திரை பதித்து முன்னேற்றம் கண்ட நாகிரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நூல். அவருடைய மகன் விஸ்வம் இந்நூலை எழுதியிருக்கிறார். தினமணி கதிரில் இது தொடராக வெளிவந்தது. திரைப்படத் தயாரிப்புத் தொழிலின் நிதிநிலை ஒரு சமயம் மிகவும் மோசமாக இருந்தது. அப்போது, விஜயா வாகினி ஸ்டுடியோ அதிபரான நாகிரெட்டி, தமது ஸ்டியோவில் படம் பிடித்த தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களிடம் ஏற்கெனவே தான் ஸ்டுடியோ கட்டணமாகப் பெற்ற தொகையில், ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுத்த சம்பவம் […]

Read more

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு

முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு, இரா. ரவிக்குமார், கொங்குமண்டல ஆய்வு மையம், உடுமலைப்பேட்டை, பக். 368, விலை 250ரூ. பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு திசைகளில் இருந்தும் ஒலித்து வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமான தக்க சமயத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. மதுப்பழக்கத்தினால் தனிமனிக்கும், அவனைச் சார்ந்துள்ளோருக்கும், சமுதாயத்துக்கும் ஏற்படும் பேராபத்துகள் பற்றி ஆசிரியர் இந்நூல் தெளிவாகக் கூறியுள்ளார். பழைய இலக்கியங்களில் சோமபானம், சுராபானம் என்று கூறப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில்தான் மதுவின் தாக்குதல் தமிழகத்தில் அதிகமாகியது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் […]

Read more

மாவீரன் மருதநாயகம்

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. மருதநாயகம் என்ற வீரனை மாவீரனாக உருவகப்படுத்தும் புதினம். இந்துவாகப் பிறந்த மருதநாயகம் ஒரு முஸ்லிமாக வாழந்து ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணந்தான். எல்லா மதங்களையும் மதித்தான். யூசுப்கானாக மாறி தன் வீர பராக்கிரமத்தால் ஆங்கிலேயரை மிரள வைத்தான். தன்னை மதுரைக்கு கவர்னராக்கிய பிரிட்டிஷாருக்கு விசுவாசத்தையும் விவேகத்தையும் காட்டி ஏமாந்து போனான். தமிழ்நாட்டையே பிரிட்டிஷாருக்கு தாரைவார்த்துக் கொடுத்ததுன் அவன் செய்த மாபெரும் தவறு. பிராய்ச்சித்தம் தேடிக்கொண்டபோது, பக்கத்தில் இருந்தவர்கள் காட்டிக்கொடுத்தார்கள். பயத்தில் இருந்த […]

Read more

வேதகணிதம்

வேதகணிதம், (உலகின் அதிவேக மணக்கணக்கு முறை), அன்பழகன் தேவராஜ், தமிழ் அங்காடி, பக். 188, விலை 165ரூ. கணிதம் என்றாலே மாணவர்கள் மத்தியில் ஒருவித வெறுப்பு இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அனால் கணிதத்தை முறையாகக் கற்றுக்கொண்டால் அதைவிட, சுலபமான பாடம் எதுவும் இருக்காது என்பதுதான் உண்மை. கோலம் முதல் கோயில் கோபுரம் வரை எல்லாவற்றிலும் கணிதம் நீக்கமற நிறைந்துள்ளதை அறிய முடியும். அனைத்துவித அறிவியல் துறை வளர்ச்சிக்கும், கோயில் வடிவமைப்புக்கும் கணிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய அவசர யுகத்தில் காகிதத்தையும், எழுதுகோலையும் கையாளுவது […]

Read more

சீறாப்புராணம்

சீறாப்புராணம்(மூலமும் உரையும்), உமறுப்புலவர், உரையாசிரியர் செய்குத் தம்பி பாவலர், யுனிவர்ஸல் பப்ளிகேஷன்ஸ், முதல் பாகம் பக். 850, விலை 500ரூ, இரண்டாம் பாகம் பக். 968, விலை 600ரூ. ஒப்பாரும் மிக்காருமற்ற தன்னிகரில்லாத் தலைவராக, முகமது நபியை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே சீறாப்புராணம். தமிழ் இலக்கியத்தில் கம்பராமாயணம் ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பிறகே பல சமய காப்பியங்கள் உருவாகின. அந்த வகையில் சீறாப்புராணமும் மதம் கடந்து தமிழ் இலக்கியவாதிகளால் வாசிக்கப்பட்டு வருகிறது. புராணத் தலைவரின் பெருமைகளையும், அற்புதங்களையும் கூறும்போதுஅதனுடனே, தமிழ் மொழியின் செறிவையும், வளத்தையும் பாடல்களில் […]

Read more

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும், உமரி காசிவேலு, வர்ஷன் பிரசுரம், பக். 520, விலை 350ரூ. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் தாக்கம் வலுவானது. உலக வரலாறே கிறிஸ்துவுக்கு முன் பின் என்றுதான் பகுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறது. தேவமைந்தன் ஏசுவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம் ஏக போதித்ததுபோல அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் மதப்பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தத்தால் திகிலடைவர். இந்தப் பின்னணியில் கிறிஸ்தவத்தை பைபிள் ஆதாரங்களுடன் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கும் […]

Read more
1 115 116 117 118 119 180