மார்க்சிய சிந்தனை சுருக்கம்

மார்க்சிய சிந்தனை சுருக்கம் (மூலதனம் பற்றிய எளிய விளக்கம்), தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 184, விலை 135ரூ. சமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸி எழுதிய மூலதனம் என்ற நூலின் சாராம்சத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல். பொருளியல் அறிவுடையவர்கள் மட்டுமே மார்க்ஸின் மூலதனத்தைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, பாமர மனிதர்களும் மூலதனத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பெரிய முயற்சியின் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நூலை மார்க்சிய […]

Read more

திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன்

திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன், சீ.பிரமிளா, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 100ரூ. தமிழ்க் கவிதைத் திறனாய்வில் சிலம்பொலி செல்லப்பனாரின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடாகி தற்போது நூலாகியிருக்கிறது. பிற மொழி இலக்கியத் திறனாய்வுகளை விடத் தமிழ் இலக்கியத் திறனாய்வு மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அந்த வரிசையில், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், கவிதை நூல்கள் எனப் பலவற்றுக்கும் திறனாய்வுகளை மேற்கொண்டவர் சு. செல்லப்பன். சங்க இலக்கியத் திறனாய்வு, […]

Read more

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ கி.பி. 1741- ஆம் ஆண்டுகளில் குளச்சலில் மார்த்தாண்ட வர்மா ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதில் ஆரம்பித்து கி.பி. 1859ஆம் ஆண்டு வரையிலான இந்தியச் சுதந்திரப்போர் குறித்த பல்வேறு தகவல்களை நூலாசிரியர் தேதி வாரியாகத் தொகுத்தளித்துள்ளார். இந்திய சுதந்திரப் பெரும்போரில் பங்கேற்ற முஸ்லிம் மன்னர்கள், சிப்பாய்கள், தளபதிகள், இளவரசர்கள், மௌலவிகள், அரசிகள் உள்ளிட்டோர் குறித்த இருட்டடிப்புச் செய்யப்பட்ட சரித்திரச் சான்றுகளை ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்நூல். கி.பி. 1831ஆம் ஆண்டு முதல் கி.பி. […]

Read more

சுந்தரி

சுந்தரி, வ.ரா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 150ரூ. தமிழ் வசன நடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னோடியும் மணிக்கொடி ஆசிரியருமான வ.ரா. எழுதிய நான்கு நாவல்களில் இதுவும் ஒன்று. சுந்தரி ஓர் அற்புதமான நவ இலக்கிய பொக்கிஷம். எனக்கு இலக்கியப் பிரக்ஞை ஓரளவு உண்டானதாக நான் மதிக்கும் காலத்துக்குப் பின்பு, ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த நாவல்கள் நாலே நாலுதான். அதில் ஒன்று சுந்தரி என்ற நூலுக்கு முன்னுரை அளித்துள்ள தி.ஐ.ர. குறிப்பிட்டுள்ளார். நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களும் உயிர் […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 110ரூ. கனடாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பிறக்காதவர்கள். அதாவது, 120 நாட்டு மக்கள், பிறந்த நாட்டைவிட்டு, இங்கு வந்து குடியேறியவர்கள் என்கிறார் நூலாசிரியர் சா. கந்தசாமி. இது வழக்கமான பயணக்கட்டுரை அல்ல. தகவல்கள், வரலாறுகளின் குவியல் இந்நூல். உதாரணத்திற்கு விமானத்தில் சிற்றுண்டியாக வறுத்த வேர்க்கடலையைத் தருகிறார்கள். உடனே நூலாசிரியரின் நினைவு வேர்க்கடலையின் தாயகமான மணிலாவுக்குப் போய்விடுகிறது. மணிலாவிலிருந்துதான் இந்த ‘peanut’  இன்று உலகம் முழுவதும் பரவி விளைவிக்கப்பட்டு, பணப்பயிராக மாறியிருப்பதன் வரலாற்றைக் […]

Read more

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள்

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள், தொகுப்பாசிரியர் கமல் கிஷோர் கோயங்கா, தமிழில் மு. ஞானம், சாகித்ய அகாதெமி, பக். 576, விலை 330ரூ. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்த லட்சக்கணக்கானோரை இலங்கை, மொரிஷியஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு கப்பலில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், துயரங்கள், சுக துக்கங்கள் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொரிஷீயஸ் நாட்டில் அபிமன்யு அனத், ஜயதத் ஜீவுத், தீபந்த் பிஹாரி, தர்மவீர் கூரா, […]

Read more

ஜெயந்தி சங்கர் நாவல்கள்

ஜெயந்தி சங்கர் நாவல்கள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, பக். 1014, விலை 1000ரூ. மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களிடம் பணம் இருக்கும். படைப்பாற்றல் இருக்காது என்ற சில இலக்கியவாதிகளின் கருத்து, ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் என்ற நாவலைப் படித்தால் உடைந்துபோகும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுபெற்ற இந்த நாவல், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்தும் வாழும் பல பெண்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. அவர்களது மனப்புண்களைக் காட்டிச் செல்வதோடு, வாசனையும் வலிகொள்ளச் செய்ய, கதாபாத்திரங்களை இன்னும்கொஞ்சம் கூடுதலாகப் பேசவிட்டிருக்கலாம். அல்லது வலியின் அடியாழத்துக்கு […]

Read more

பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும்

பழந்தமிழில் சமூக சமய மரபுகளும் பனுவலாக்கக் கோட்பாடுகளும், மு. இரமேஷ், இராசகுணா பதிப்பகம், பக். 175, விலை 130ரூ. மேலைத் திறனாய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி திறனாய்வு நூல்களைப் படைத்துவரும் நூலாசிரியரின் இன்னொரு திறனாய்வுப் படைப்புதான் இது. அகம், புறம் பற்றிய கருத்துருவாக்கத்தில் இணைவும் இயைபும் என்ற தலைப்பில் அடையாள அரசியல் பேசப்படுகிறது. புறானனூற்றை முன்வைத்து தொல் தமிழ் சமூகங்களும் சமயச் சொல்லாடல்களும் எப்படி இருந்தன என்பதை விளக்கியுள்ளார். அகமரபில் முருகன் பற்றிய விளக்கங்கள், அதாவது சங்க இலக்கியங்களில் முருகன் தொடர்பான குறிப்புகள் பல, சிந்துவெளிப் […]

Read more

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம்

ஜெயகாந்தன்-ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பாசிரியர் மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 256, விலை 170ரூ. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவைப் போற்றும்விதமாக உருவாகியுள்ள நூல். எனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவே வைத்துக் கொள்ள நான் முயலுகிறேன்’ என்று சொன்னார் ஜெயகாந்தன். அவர் தன்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள், அவர் அளித்த நேர்காணல்கள், ஜெயகாந்தனுடன் பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள், ஜெயகாந்தன் மணிவிழா மலரில் ஜெயகாந்தனின் துணைவியார் எழுதிய கட்டுரை, ஜெயகாந்தன் எழுதிய ‘ஒரு பிடி சோறு’ சிறுகதை, பிரபல ஓவியர்கள் வரைந்த ஜெயகாந்தனின் […]

Read more

சாவித்திரி கலைகளின் ஓவியம்

சாவித்திரி கலைகளின் ஓவியம், மு.ஞா.செ. இன்பா, தோழமை வெளியீடு, சென்னை, பக். 272, விலை 250ரூ. நடிகையர் திலகம் சாவித்திரி, தன்னைப் பற்றி ஒரு சுயசரிதை நூல் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதுபோல உள்ளது இந்நூல். சாவித்திரியின் மரணப்படுக்கையில் தொடங்கி, பின்னர் பின்னோக்கிச் சென்று அவருடைய வாழ்க்கையை ஃப்ளாஷ்பேக் பாணியில் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தின் திரைக்கதையைப் போல பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாவித்திரியின் தேச பக்தி, தயாள குணம், வெகுளித்தனம், வெளிப்படையான பேச்சு, நிர்வாத் திறன், நடிப்புத் திறன், இயக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு […]

Read more
1 116 117 118 119 120 180