தகராறு

தகராறு, கடந்து சென்றிடம் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும், யொ. ஹான்கால்டுங், தமிழில்-சுப.உதயகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 168, விலை 85ரூ. தகராறு என்பது தவறானது அல்ல. மனித வாழ்க்கைக்குத் தகராறு மிகவும் இன்றியமையாதது. கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலை தகராறு. தகராறு முற்றும்போது தீர்வு ஒன்று உருவாகும். தகராறுகளுக்கு நிவாரணம் என்ன? என்பதைப் பற்றி இந்த நூல் விரிவாக அலசுகிறது. மனிதனுக்குள் மற்றும் மனிதருக்கிடையே எழும் முரண்பாடுகள், சிறுதகராறுகள், சமூகங்களிடையே எழும் பிணக்குகள் குறுந்தகராறுகள், அரசுகளுக்கும் மக்களுக்கும் இடையே எழும் தகராறுகள், […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், (புதுப்புனலிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், முதல் மாடி, 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 128, விலை 100ரூ. புதுப்புனல் இதழில் நூலாசிரியர் கோவை ஞானி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தியைக் கொண்டுதான் மாபெரும் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த முடியும் என்பதும் ஒரு பொய்க் கனவு. அணுசக்தி நிலையங்கள் என்பவை இறுதியில் அணுகுண்டு உற்பத்திக்கான யுரேனியத்தைக் கழிவுப் பொருளெனக் கடைந்து எடுப்பதற்குத்தான். மலைப் பகுதிகளில், காடுகளில் நிலத்துக்கு அடியில் […]

Read more

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம்,(சிறந்த மொழிபெயர்ப்பு புனைவு), சி. மோகன், அதிர்வு பதிப்பகம். மாவோ தலைமையில் சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து அங்கு அழிந்துபோன அல்லது அழித்தொழிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களின் தொன்மையை, நாகரிகத்தை, அவை அழித்தொழிக்கப்பட்ட வன்முறையைப் பேசும் வரலாற்று ஆவணம் ஓநாய் குலச்சின்னம். 2004ம் ஆண்டு வெளியாகி Wolf Totem என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நாவலின் ஆசிரியர் ஜியாங் ரோங், சீனாவின் ஜியாங்சூவில் பிறந்தவர். வெளியான இரண்டே ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையான இந்த நாவல், மங்கோலிய மேய்ச்சல் நில […]

Read more

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழ்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழ், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அறக்கட்டளை, சென்னை 4, பக். 146, விலை 25ரூ. ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் இந்த இதழ், 2 லட்சம் பிரதிகள் காணும் சிறப்பிதழாகவும், சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் குறித்து பிரபலங்கள் எழுதிய 60 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும் என்று சுவாமிஜி எழுதிய கட்டுரை முத்தாய்ப்பாகத் திகழ்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி […]

Read more

மனசே மருந்து

மனசே மருந்து (மனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம்-ஹிப்னோதெரபி, டாக்டர் வேத மாலிகா, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை 17, பக். 240, விலை 150ரூ. நம் மனதுக்கும், உடல்நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதை உணர்த்தும் வகையில் உடல் நலத்துக்கு மனசே மருந்து என்கிறது இந்நூல். இயந்திரமயமாகிவிட்ட இன்றைய அவசர யுகத்தில், போதிய ஓய்வின்றி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து முடித்துவிட வேண்டும் என டென்ஷனாகிறோம். டென்ஷனைக் குறைக்க மாத்திரைகளை விழுங்குகிறோம். மனநோய்க்கு தொடர்ந்து தரப்படும் மருந்துகளே நரம்பு தளர்ச்சி போன்ற பல புதிய நோய்கள் […]

Read more

சிக்கலில் இந்திய விவசாயிகள்

சிக்கலில் இந்திய விவசாயிகள், பத்து வேளாண்மைப் பொருளாதாரக் கட்டுரைகள், அ. நாராயணமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 81, விலை 50ரூ. விவசாயிகளின் இன்றைய அவல நிலைக்கான காரணங்களை ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். விவசாயத்தின் பின்னடைவுக்குக் காரணம், அரசாங்கத்தின் தவறான பல்வேறு கொள்கைகளே என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவும் நூல். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் போன்ற விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களின் விலைகளை அரசு கட்டுப்படுத்துவதில்லை. அதே சமயம் உற்பத்தி செய்த பொருள்களின் விலையை விவசாயி நிர்ணயிக்க முடிவதில்லை. இதனால் விவசாயி இழப்புகளைச் […]

Read more

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும்

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 368, விலை 200ரூ. அருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றையும், அவர் அருளிய திருஅருட்பாக்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் தாங்கிய விரிவான ஆய்வுப் புத்தகம் இது. வள்ளலார் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள், அவரது சத்திய ஞான வாக்குகள், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இராமலிங்கர் சென்னை, ஏழுகிணறு, வீராசாமிப்பிள்ளை தெருவில் பழைய கதவு எண் 39இல் வசித்தது முதல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் உள்ள அறைக்குள் […]

Read more

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 376, விலை 150ரூ. தென் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி காலத்துக்கு முன்பே பாளையக்காரர்கள் என்ற பெயரில் ஜமீன்தாரி முறை அமலில் இருந்ததையும், நாயக்கர் ஆட்சிக்குப் பின் அது பலப்பட்டதையும் விரிவுபட்டதையும் நூல் எடுத்துரைக்கிறது. இதில் பாண்டிய நாட்டுக்கு உள்பட்ட 72 பாளையங்களில் அன்றைய நெல்லை ஜில்லாவைச் சேர்ந்த சிவகிரி, நெற்கட்டும், செவ்வல், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி,  உள்ளிட்ட 10 ஜமீன்களின் குறுநில மன்னர்கள் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் நூல் விளக்குகிறது. ஊர்க்காடு […]

Read more

வரப்பெற்றோம்

  வரப்பெற்றோம் கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், மூ. இராசாராம், குமரன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 100ரூ. கர்நாடக சங்கீதத்தை ரஸியுங்கள், வாதூலன், அல்லையன்ஸ், சென்னை 4, பக். 144, விலை 70ரூ. உங்கள் குழந்தைகளைப் படியுங்கள், ச. அசாப் அலி, தாமரைப் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை 98, பக். 88, விலை 65ரூ. ஈஸ்வரனின் சிறுகதைகள், தெ. ஈஸ்ரன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 136, விலை 50ரூ. சித்தர் பாடல்கள், தொகுப்பு-இரா.முருகன், சாகித்திய அகாதெமி, […]

Read more

ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், வீ. அரிதாசன், தலைமுறை பதிப்பகம், சென்னை 32, பக். 160, விலை ரூ. 170 ஒரு பொருளை அதன் இயல்பான நிலையிலேயே விற்பனை செய்தால், விற்பனை வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அந்தப் பொருளுக்குள் புதிய பண்பை, உள்ளடக்கத்தைச் சேர்த்து அதன் மதிப்பைக் கூட்டினால் அதை வெற்றிகரமான விற்பனை செய்து லாபமீட்ட முடியும் என்பதை விளக்கும் நூல். சாதாரணத் தேனை விட தும்பைத் தேனுக்கும், சூரியகாந்திப் பூத் தேனுக்கும், மாந்தேனுக்கும், ஏலக்காய்த் தேனுக்கும் மதிப்பு அதிகம் உள்ளதல்லவா? இவ்வாறு மதிப்பூக்கூட்டும் முறையில் […]

Read more
1 152 153 154 155 156 180