காந்தியைக் கடந்த காந்தியம்

காந்தியைக் கடந்த காந்தியம், ஒரு பின் நவீனத்துவ வாசிப்பு, பிரேம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 288, விலை 240ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-925-9.html சர்வதேச சமூகத் தனது நீண்ட, நெடிய பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், தற்போது சந்தித்து வரும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துள்ள நூலாசிரியர், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு காண அறிஞர்கள் இதுவரை வகுத்தளித்துள்ள கோட்பாடுகளும், கொள்கைகளும் போதுமானவையாக இல்லை என்பதைத் துணிவுடன் சுட்டிக்காட்டியுள்ளார். காந்தியைப் பற்றியும், காந்தியத்தைப் […]

Read more

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை

தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்-சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப. திருமலை, எஸ். செல்வ கோமதி, சோக்கோ அறக்கட்டளை, மதுரை 20, பக். 320, விலை ரூ. 150. சங்க காலம் தொடங்கி தற்போது வரையில் தொடரும் அடிமைமுறை வரலாற்றை எளிமையாக விளக்குகிற புத்தகம். தமிழ்நாட்டில் சங்க காலத்தில் கொத்தடிமை முறை இருந்ததற்கான புறநானூறு, தொல்காப்பியம், உள்ளிட்ட இலக்கியச் சான்றுகளுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி ஐரோப்பியர் காலம் வரையிலான தமிழகத்தில் நிலவிய அடிமை முறை பற்றி விரிவாக […]

Read more

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம்

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 532, விலை 300ரூ. மேடைப் பேச்சுத் தொனியில் 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அரசு அதிகார மையங்களுடன் பெருமுதலாளிகள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதையும் இந்நூல் விட்டுவிடவில்லை. சுமார் 60 ஆண்டுகால ஊழல்கள் அத்தனையும் இந்த நூலில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தை உற்றுநோக்குவதற்கு இன்னும் கூடுதலான வாசிப்பு […]

Read more

என் சரித்திரச் சுருக்கம்

என் சரித்திரச் சுருக்கம், கி.வா. ஜகந்நாதன், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை 108, பக். 544, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-340-6.html எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் வார இதழில் உ.வே. சாமிநாதையர் என் சரித்திரம் என்ற பெயரில் தொடராக எழுதிய தன் வரலாறு மிகவும் பிரபலமானது. அவர் எழுதிய 122 அத்தியாயங்களை 58 அத்தியாயங்களாகச் சுருக்கி, ஆனால் ஐயரின் வாழ்க்கைச் சம்பவங்களில் முக்கியமான எதுவும் விடுபட்டுவிடாமல் கவனமாகத் தொகுத்து என் […]

Read more

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள்

பரதேசம் போன தமிழர்களின் பரிதாப பாடல்கள், பெ. முத்துலிங்கம், கயல் கவின் புக்ஸ், திருவான்மியூர், சென்னை 41, விலை 160ரூ. 1820களில் அடிமைகளாக இலங்கைக்குச் சென்ற மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு சொல்கிறது. வாய்மொழிப் பாடல்கள் மூலம் அவர்களின் துயரங்களையும் இழப்புகளையும் இந்நூல் பதிவு செய்கிறது. -தொகுப்பு: கவின்மலர், கௌரி. நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   ஆ. பத்மநாபன் – ஆளுமையின் அரிய பரிமாணம், பசுபதி தனராஜ், தாய்த்தமிழ் பதிப்பகம், 1/4, துளசி அடுக்ககம், 7ஆவது […]

Read more

இறகுதிர் காலம்,

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, 1447, அவினாசி சாலை, பீளமேடு, கோயம்புத்தூர் 641004. இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரி, குளம், மலைகளின் இன்றைய நிலை என்ன? பறவையினங்கள், மற்ற உயிரினங்கள் எத்தகைய பாதிப்பை அடைந்திருக்கின்றன? விடை தேடுகிறது இந்நூல். நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும், இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம், சென்னை 17, பட்க. 160, விலை 70ரூ. இளைய தலைமுறைக்கு முன்னோர்களின் வாழ்வியல் அறிவுக் களஞ்சியத்தைத் தரவேண்டும் என்று நோக்கத்துடன் […]

Read more

புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலிம்பஸ், கணேசபுரம், ராமநாதபுரம், கேவை 45, பக், 322, விலை 275ரூ. புத்தகம் எழுதுவது முதல் தொகுத்தல் அச்சிடுதல், பதிப்புரிமை பெறுதல், காப்புரிமை பெறுதல், வாசகர்களிடம் புத்தகத்தை அறிமுகம் செய்தல், இணைய புத்தகம் உருவாக்குதல் என அறிமுக எழுத்தாளர்கள் முதல் மூத்த எழுத்தாளர்களுக்குவரை அரிய தகவல்களை அள்ளித் தரும் வித்தியாசமான நூல் இது. இந்தப் புத்தகத்தை படித்தால் புத்தகம் எழுதும் ஆசை நிச்சயம் தூண்டிவிடும். புத்தகம் தோன்றிய வரலாறு, […]

Read more

புனையா ஓவியம்

புனையா ஓவியம், அநன், காவ்யா, சென்னை 24, பக். 210, விலை 180ரூ. சங்கத் தமிழ் நூல்கள் குறித்து பல்வேறு ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது இந்நூல். மடல், மன்றல், காஞ்சி, நடுகல், வையை, யானைக்கொடி, மருதம், பாலை, கோ, உணவு, உடை, புனையா ஓவியம், வி, நீர் மேல் எழுந்த நெருப்பு, அகத்தில் வரலாறு என சின்னச் சின்னத் தலைப்புகளிலான 15 கட்டுரைகளின் அணிவகுப்பு. அழகிய தொகுப்பு. தலைப்புகளில்தான் சொற்சிக்கனம். ஆனால் கட்டுரைகள் விரிவாகவும், ஆழமாகவும், […]

Read more

கடவுளின் நிறம் வெண்மை

கடவுளின் நிறம் வெண்மை, 52 புனிதர்களின் சரிதம், எஸ்.கே.முருகன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 336, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-391-3.html நமது இதிகாசங்கள், புராணங்கள், உபநிடதங்களில் எண்ணற்ற புனிதர்கள் உலவுகின்றனர். அவர்களில் துருவன்,பிரகலாதன், நாரதர் போன்ற பக்த மகாரத்தினங்களை அனைவரும் அறிவர். அதே சமயம் புராணங்களில் எதிர்மறை நாயகர்களாக இருந்த பலரும்கூட, இறை பக்தியில் சளைத்தவர்களல்ல. அவர்களில் சிலரை அறிமுகப்படுத்தும் முயற்சியே இந்நூல் எனலாம். மது கைடபர், சூரபதுமன், மாருசன், சகுனி, கஜமுகன் […]

Read more

நோய்மனம்

நோய்மனம், கோவி. பால. முருகு, தமிழ்வேந்தன் பதிப்பகம், வடலூர் 607303, பக். 112, விலை 70ரூ. கண்ணில் பட்டு கருத்தில் பதிந்து மனதைவிட்டு அகலாத கருத்தை ஏற்படுத்துபவையே சிறந்த சிறுகதைகள் என்பர் இலக்கிய ஆர்வலர். நூலாசிரியர் நல்ல சிறுகதைகளைப் படைக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால், அதே சமயம், கருத்துத் திணிப்பின் களமாக சிறுகதையை அவர் பயன்படுத்துகிறாரோ என்ற எண்ணத்தை படிப்போர் மனதில் ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. திருப்பம் என்ற முதல் சிறுகதையில் தொடங்கி வேட்கை வரையில் கதையை அவசர அவசரமாகக் கூறுவதுபோல இருக்கிறது. கதையைப் […]

Read more
1 154 155 156 157 158 180