கண்ணதாசன் பயணங்கள்

கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்ணதாசன், பக்.144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html கவியரசு கண்ணதாசன் நாடறிந்த பாடலாசிரியர் மட்டுமல்ல, சிறந்த கட்டுரையாளர் என்று இந்நூலால் அறியலாம். கவிஞர் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஆதங்கங்களையும் ஒளிவு மறைவில்லாமல் எழுதியுள்ளார். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர் 17/11/13.   —-   தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், பக். 160, விலை 150ரூ. தமிழ் இலக்கியங்கள் மொழிவளம், கற்பனைத் திறன், வாழ்க்கைத் தர்மங்களை மட்டுமல்ல, அவை சரித்திரத்தின் பதிவுகளாகவும் திகழ்ந்துள்ளன என்பதை மிக மிக எளிமையாகக் கூறும்வகையில் நூலின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழக மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்தார்கள் என்று எண்ணத்தை மாற்றும்வகையில் அமைந்துள்ள கரிகாற்சோழன் கட்டுரை முதல் பட்டினப்பாலை வரையில் அனைத்திலும் புதிய புதிய அரிய தகவல்களை அறியும் […]

Read more

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html வெங்காயத்தில் இருந்து வெடிகுண்டுவரை இந்த நூல் அனைத்து விஷயங்களையும் பேசும் எனக்குறிப்பிட்டிருப்பதுபோல், பல துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பொதுக் கட்டுரைகள், தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல் – சமூகம், நாடகம் என ஆசிரியர் சில தலைப்புகளில் கட்டுரைகளைப் பிரித்துத் தந்துள்ளார். […]

Read more

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்

ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள், எஸ். சாய்ராமன், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 200, விலை 100ரூ. இந்நூலில் உள்ள அருணகிரிப் புராணமும் அருணாசலப் புராணமும் என்ற கட்டுரை, அருணாசல தல வரலாறு குறித்து சிறப்பாக விவரிக்கிறது. வானவரும் வாசகரும் என்ற கட்டுரையில் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடல் ரசிக்கும்படி உள்ளது. அந்தந்தக் கால மக்களின் நாட்டின் நாகரிகம், பண்பாடு, மரபு இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு வற்றாத நீரோட்டமாகப் பாய்ந்து இக்கால மக்களையும் வளப்படுத்துவதுதான் இலக்கியம். ஆதலின் இலக்கியம் காலத்தால் அழியாமல் என்றும் நிலைபெற்றிருக்கும் […]

Read more

உயிர்ப்பு மிக்க காவியம்

உயிர்ப்பு மிக்க காவியம், சீறா வசனகாவியம், கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டி பாபு தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5. சீறாப்புராணத்தின் உரைநடை வடிவம்தான் இந்தச் சீறா வசன காவியம். இதை எழுதியிருப்பவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர். இது 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. என்றாலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியால் இந்நூல் இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தப் புத்தகம் சீறாப்புராணத்தின் பொழிப்புரையோ தெளிவுரையோ அல்ல. கண்ணகுமது மகுதூமுகம்மது புலவர் இதை ஒரு பருந்துப் பார்வையுடன் எழுதியிருக்கிறார். சீறாப்புராணத்தின் […]

Read more

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், பக். 397, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html இலங்கை யாழ்ப்பாணத்தில் கரம்பொன் என்ற ஊரில் பிறந்த சேவியர் தனிநாயகம் அடிகளார் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணியை மீண்டும் ஒரு முறை நினைவு கூரும் வகையில் உள்ளது. இந்த நூலின் முதல் பிரிவான ஒன்றே உலகம் பகுதியில், தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, […]

Read more

எங்கே அந்த சொர்க்கம்

எங்கே அந்த சொர்க்கம்?, வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 284, விலை 200ரூ. நூலின் அட்டையிலேயே கடந்த ஐம்பதாண்டு கால தமிழக திராவிட இயக்க வரலாற்றை அலசி ஆராயும் நாவல் என்ற விளக்கத்துடன் வெளிவந்துள்ள இந்நூலை நாவல் என்று நூலாசிரியர் எவ்வாறு வகைப்படுத்தினார் என்பது புலப்படவில்லை. திராவிட இயக்கம் குறித்த கூர்மையான விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்நூல் காட்சி தருகிறது. இரு தலைமுறையினர் இடையிலான கடித உரையாடல் வடிவில் தனது அரசியல் பார்வையை நூலாசிரியர் முன்வைக்கிறார். திராவிட இயக்கத்தின் பரிணாமமான கட்சிகளின் லட்சணம், சுயநலனுக்கு […]

Read more

கரிகாலர் மூவர்

கரிகாலர் மூவர், வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-8.html கரிகாலன் என்பவன் ஒருவன்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் மூன்று கரிகாலன்கள் வாழ்ந்ததாகக் கூறுகிறார் இந்நூலாசிரியர். அதுமட்டுமல்ல, முதலாம் கரிகாலனின் காலம் கி.மு. 630 என்றும் இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 630 என்றும் இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 450 எனவும், மூன்றாம் கரிகாலனின் காலம் கி.மு. 305 எனவும் அறுதியிட்டுக் […]

Read more

356 தலைக்குமேல் கத்தி

356 தலைக்குமேல் கத்தி, தி.சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 116, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-8.html பஞ்சாபில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் ஆஙட்சிகள் கலைக்கப்பட்டு 356வது பிரிவு தொடர்ந்து எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பது குறித்த தெளிவான விவரங்களை இந்தப் புத்தகம் தந்துள்ளது. காங்கிரஸ் மட்டுமே இந்த அரசமைப்புச் சட்டப்பிரிவை துஷ்பிரயோகம் செய்ததில் குற்றவாளியாக இருக்கவில்லை. காங்கிரஸுக்கு மாற்றாக உருவான ஜனதா கட்சிக்கும் இதில் பங்கு உண்டு. 1977இல் ஜனதா ஆட்சியில் ஒட்டுமொத்தமாக […]

Read more

கனவுகள்

கனவுகள் (ஒரிய மொழி சிறுகதைகள்), சந்திரசேகர் ராத்,ரா. குமரவேலன், சாகித்யஅகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 400, விலை 190ரூ. பேராசிரியர் சந்திரசேகர் ராத், ஒரிய மொழி எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். அவர் ஒரு நாவலாசிரியரும், நல்ல கவிஞரும் கூட. அவர் எபதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 25 சிறுகதைகளை மொழிபெயர்த்து தொகுத்திருக்கின்றனர். இவற்றில் சாமூவேல் பாதிரியாரின் கதை, உள்ளத்தை உருக்குவதாய் இருக்கிறது. அனாதை ஆசிரமத்தை நிர்வகிக்க அவர் படும்பாடு, தியாகம் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. […]

Read more
1 155 156 157 158 159 180