கல்கி தீபாவளி மலர்

கல்கி தீபாவளி மலர், பக். 276, விலை 120ரூ. காஞ்சி மகா பெரியவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை புருஷார்த்தங்களைப் பற்றி விளக்கி அருளாசியும் வழங்கியுள்ளார். அட்டைப் படத்துக்குத் தக்க கல்யாணபுரம் ஆர். ஆராவமுதனின் சொல்லின் செல்வன் சிறப்புக் கட்டுரையும், அக்கட்டுரைக்கான அமர்க்களமான ஓவியர் வேதாவின் கைவண்ணமும் மலருக்குப் பெருமை சேர்த்துள்ளது. ஓவியர் கே.என். ராமச்சந்திரன், ம.செ. ஆகியோரின் ஓவியங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பேசிவிடுகின்றன. புதுகையிலிருந்து மதுரை செல்லும் பாதையில் உள்ள திருமயம் கோட்டைக்கே நம்மை அழைத்துச் சென்று எல்லா இடங்களையும் […]

Read more

ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்

ஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள், செவல்குளம் ஆச்சா, சுரா பதிப்பகம், சென்னை 40, பக். 202, விலை 90ரூ. சோசலிச சமுதாய மேதைகள் என்ற வரிசையில் சீனாவின் ஸன் யாட் ஸென், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய மூவரையும் வைத்து அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களைச் சுவையாக விளக்கும் நூல். சீனாவில் மஞ்சு வம்சத்தின் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ஸன் யாட் சென் அடிப்படையில் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவ்வழியில் சீனாவில் சோசலிச சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட்டவர் அல்ல. எனினும் […]

Read more

கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு, தொகுப்பாசிரியர்-செ.தங்கமணி, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை, 33, உட்க சாலை, சென்னை 2, பக். 240, விலை 200ரூ. கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றை பல்வேறு கோணங்களில் விவரித்துச் சொல்லும் நூல். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகால தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே அக்காலத்திலேயே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் என்கிறது இந்நூல். ஆய்நாடு, பண்ணை சமூக அமைப்பு முறை, சங்காலத்திலும் அதற்குப் பின்பும் குமரி மாவட்டத்தில் நடந்த போர்கள், மக்கள் உரிமை இயக்கங்கள், தோள்சீலைப் […]

Read more

உயிர்ச்சொல்

உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 200, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-207-2.html நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் ஏங்கித் தவித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் மனஉளைச்சல்களையும் அதிலிருந்து அவள் மீண்டதையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் நாவல். அவளுடைய கணவன் ஊடகத்துறையில் செல்படக்கூடியவன். அவனுடைய நண்பன் நாட்டின் ஊழல் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறார்கள். இணைய தளங்கள் மூலமாகவும், கண்காட்சிகள் மூலமாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற வைக்கப்பாடுபடுகிறார்கள். மக்கள் எழுச்சியின் மூலம் […]

Read more

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு

எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு, ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 160, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-426-6.html செங்கோல் வார இதழில் ம.பொ.சிவஞானம் நானறிந்த கலைஞர்கள் என்ற தலைப்பில் எழுதிய தொடரின் நூல்வடிவம் இது. எம்.ஆர்.ராதா, என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர். ராமசாமி போன்ற கலைஞர்களைப் பற்றிக் குறைவாகவும் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அதிகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு நடிகர் என்ற முறையிலும் ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும், நல்ல மனிதர் என்கிற […]

Read more

பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள்

பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள், மு. நளினி, ரா. கலைக்கோவன், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-9.html வரலாற்று ஆய்வில் பாறைச் சிற்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தின் ஆதி வரலாற்றை அறிய உதவுபவையாக குடைவரைக் கோயில்களும், பாறைகளும், கல்வெட்டுகளும் உள்ளன என்பதற்கு ஆதாரமாக நூலாசிரியர்கள் தங்களது கள ஆய்வுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர். சிங்கப் பெருமாள் கோயில் குடைவரை கட்டுரையில் பெருமாளைத் தரிசிக்கும் ஆடவர் திருவுருவத்தைக் கூட விட்டுவிடாமல் […]

Read more

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி

தமிழைப் பழித்தவருக்கு சாட்டையடி, தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, காஞ்சிபுரம் மாவட்டம், விலை 120ரூ தொல்லியல் ஆராய்ச்சியாளரான இரா. நாகசாமி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் காட்டும் கண்ணாடி (The Mirror of Tamil and Sanskrit) என்பது அந்த நூலின் பெயர். தமிழ் தனித்தன்மையுடன் வளரவில்லை என்றும், சமஸ்கிருத சொற்களைக் கடன் வாங்கியே வளர்ந்தது என்றும் இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவில் வடமொழியை உயர்த்தியும், தமிழைத் தாழ்த்தியும் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு […]

Read more

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும்

வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும், புலவர் ஆ. காளத்தி, கிள்ளை நிலையம், 16/383, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 294, விலை 190ரூ. வான்மீகி இயற்றியுள்ள ராமாயணத்தின் பாலகாண்ட தமிழ் மொழிபெயர்ப்பான இந்த நூல் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக வெளிவந்துள்ளது. பால காண்டத்தில் உள்ள எழுபத்து ஏழு சருக்கங்களில் சில சுலோகங்களை அழகிய முறையில் காளத்தி மொழி பெயர்த்துள்ளார். மூல நூலுக்கு ஊறு செய்யாது மொழி பெயர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இதைப் பாராட்டும் ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் […]

Read more

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண்

ஜெகாந்தன் சிறுகதைகளில் பெண், ந. சுரேஷ்ராஜன், அய்யா நிலையம், ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, இ.பி. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர் 613006, பக். 224, விலை 175ரூ. சமூகத்தில் எந்த நிலையில் இருந்தபோதிலும் பெண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதைத் தனது படைப்புகள் மூலம், அழுத்தமாகப் பதிவு செய்தவர் ஜெயகாந்தன். அவரது கதைகளில் மேல்தட்டுப் பெண்களை விடவும், நடுத்தர மற்றும் விளிம்பு நிலைப் பெண்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட பெண் பாத்திரங்களை வரிசைப்படுத்தி அவர்களின் குணாதிசயங்களை விளக்கியிருப்பதோடு, தொடர்புடைய கதைகளில் இருந்து ஓரிரு […]

Read more

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழில் மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், 10, புலியோன் பஜார், இரண்டாவது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 270, விலை 180ரூ. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தோடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழர்களின் தொன்மையை நிலை நிறுத்துவது, போலவே நூலாசிரியர்கள் முயற்சி அமைந்திருப்பதைப் பாராட்டலாம். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என தமிழில் பாட்டி கால கதைகளை ஞாபகமூட்டும் வகையில் நூலின் முதல் கதையான கடவுளை நோக்கி ஒரு பயணம் அமைந்துள்ளது. பெரியதும், சிறியதுமான 94 […]

Read more
1 157 158 159 160 161 180