ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1, நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 208, விலை 110ரூ. கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள், குறுந்தொகையில் உவமை நயம், கலித்தொகையில் நோக்கு, நற்றிணை நவிலும் கற்பு நெறி, சங்க இலக்கியத்தில் குந்தை, ஊடல் தணிக்கும் வாயிலாக, ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார் உள்பட சங்க இலக்கியம் தொடர்பான 16 கட்டுரைகளும், திருக்குறள் உள்பட அற நூல்கள் தொடர்பான 3 கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியாரின் தனித்திறன் கட்டுரை தமிழ்ப் பெண் கவியின் கற்பனை வளம் உவமை நயம், […]

Read more

எழுதித் திரிந்த காலம்

எழுதித் திரிந்த காலம், புதுவை ரா. ரஜினி, புதுவை ரா.ராஜினி, புதுச்சேரி, பக். 128, விலை 150ரூ. பல்வேறு இதழ்களில் எழுதிய 22 கட்டுரைகள், நூலாசிரியரின் 2 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு இந்நூலில் சுவையாகப் பரிமாறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்கள், நிகழ்வுகள் இந்தக் கட்டுரைகளில் பதிவாகியிருக்கிறன்றன. எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த கட்டுரைகளில் விவரிக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள் இருந்திருக்கும் என்றாலும், இக்கட்டுரைகளைப் படிக்கும்போது இனம்புரியாத வாசிப்பின்பம் ஏற்படுகிறது என்பது என்னவோ உண்மை. எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடன் நூலாசிரியர் பழகிய அனுபவம் சல்யூட் என்ற கட்டுரையில் நமது […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை 31, பக். 296, விலை 200ரூ. சுதந்திரம் என்பது போராடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் மக்களாட்சி மாண்புக்கும் 1975 ஜுன் 25இல் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து மீண்டது எப்படி? நமது உரிமைகளை சத்தமின்றி மீட்டவர்கள் யார்? அதில் அவர்கள் அடைந்த கஷ்டங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. தனது அரசியல் எதிரிகள் பலம் பெற்று வருவதைத் தடுக்கவும், நீதிமன்றங்களின் கண்டனங்களிலிருந்து தப்பவும் அன்றைய பிரதமர் இந்திரா […]

Read more

மானாவாரிப்பூ

மானாவாரிப்பூ, மேலாண்மை பொன்னுசாமி, கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 299ரூ. 34 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு பெற்றள்ள இந்நூலில் சாதி, ஏழ்மை என பல்வேறு கருக்களை மையமாகக் கொண்டு படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் விறுவிறுப்பாகவும், படித்துத்தூண்டும் வகையிலும் எழுதியிருப்பதில் ஆசிரியரின் கைவண்ணம் புலனாகிறது. சிறுகதைகள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக அதே நேரம் சிந்தனையை தூண்டும் வகையில் எழுதப்பட்டு உள்ளது இதன் சிறப்பு.   —-   சனிக்கிரகத்தின் […]

Read more

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், வயல்வெளி பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம், விலை ரூ150. சங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன் முதலாகப் பட்டினப்பாலை என்னும் கட்டுரை ஈறாக 20 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இலக்கிய நூல்களின் கருத்துக்களை வாழ்வியல் செய்திகளோடு எளிய மொழி நடையில் சுவைபட சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் முனைவர் மு. இளங்கோவன். நன்றி: தினத்தந்தி, 16/10/2013   —-   ஜுபிடர் பிக்சர்ஸ் – ஜுபிடர், எஸ்.கே. ஹபிபுல்லா,  விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை 26, […]

Read more

மொழிப்போர்

மொழிப்போர், ஆர். முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ. நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் பல்வேறு கால கட்டங்களில் தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் நடத்திய மொழிப்போர், மற்றுமொரு சுதந்திர போராட்டமாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/10/2013.   —- […]

Read more

சங்கர காவியம்

சங்கர காவியம், டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், 39, நந்திகோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி 2, விலை 250ரூ. காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியாரின் ஆன்மிக வாழ்க்கையின் சில பகுதிகள் நாடக வடிவில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுப்பில் அவர் எத்தனை பெரும் அருளாளர் என்பதும், பாமரனுக்கும் இரங்கும் கருணாமூர்த்தி என்பதும் நெஞ்சில் பரவசமாய் பதிந்து போகின்றன. எத்தனை துயர நிலையில் ஒருவர் வந்தாலும் அவரை பசியமரத்தி ஆற்றுப்படுத்தும் மகானின் கருணை உள்ளம் பக்தர்களை எந்தெந்த விதமாய் குளிர்வித்தது என்பதையும், நடுநடுவே சொல்லிப் போயிருப்பது நெஞ்சார்ந்த சிலிர்ப்பு. […]

Read more

திறமைதான் நமது செல்வம்

திறமைதான் நமது செல்வம், இரா. மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 150, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-3.html வாழ்க்கை வழிகாட்டல் முறையிலான நூல்கள் புற்றீசல்கள் போல நாள்தோறும் வெளிவந்து கொண்டுள்ளன. ஆனால் மற்ற நூல்களில் இருந்து இந்நூல் வேறுபங்டடு இருப்பதை மறுப்பதற்கில்லை, நூலாசிரியரின் இலக்கிய அனுபவம், எளிய முறையில் விளக்கும் பாங்கு ஆகியவை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகிறது. இல்லறம் நல்லறம் ஆவது எப்போது? என்று முதல் கட்டுரையில் சிறு குழந்தைக்குச் சொல்வதுபோல கேள்வி […]

Read more

வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html ஆழ்வார்கள் பாசுரங்களை அணுகுவது எப்படி? அணுஅணுவாய் சுவைப்பதெப்படி? என்ற முன்னுரையுடன் திகழும். இந்தப் புத்தகம் பிரபந்தப் பாசுரங்களின் விளக்கங்களைத் தாங்கியுள்ளது. அம்பலம் இணைய இதழ், கல்கி வார இதழ்களில் சுஜாதா எழுதிய வாரம் ஒரு பாசுரம் என்ற தொடரின் தொகுப்பு இந்த நூல். திவ்யப் பிரபந்தத்தில் […]

Read more

கடவுளைக் காட்டிய கவிகள்

கடவுளைக் காட்டிய கவிகள், மு. ஸ்ரீநிவாஸன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 240, விலை 150ரூ. கேரளத்தின் எழுத்தச்சன், ஸ்ரீநாராயண குரு, கர்நாடகத்தின் சர்வக்ஞர், கனகதாசர், புரந்தரதாசர், மகாராஷ்டிராவின் பக்த ஜனாபால், பஞ்சாபின் அர்ஜுன்தேவ், தமிழகத்தின் ஆளவந்தார் உள்பட 32 பக்திக் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிஞர்களின் முக்கியத்துவம், தனித்தன்மை, பக்தியினூடாக அவர்கள் பரப்பிய சமுதாயச் சிந்தனைகள் போன்ற அனைத்தையும் பற்றிய அற்புதமான செய்திகளைப் பரிமாறும் நூல். பல்வேறு மொழிக் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க கவிதைகளை மேற்கோளாக இனிய தமிழில் தந்திருக்கிறார் […]

Read more
1 158 159 160 161 162 180