முதுவர் வாழ்வியல்

முதுவர் வாழ்வியல், முனைவர் க.முத்து இலக்குமி, திருக்குறள் பதிப்பகம், பக். 216, விலை 160ரூ. தமிழக பழங்குடி மக்களான முதுவர் இனத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். எட்டு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லையில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை தனித்துவமானது. இந்த மக்களின் பழக்கவழக்கங்களை ஆராயும் நுால்கள் பல வந்துள்ளன. அவை, தமிழகத்தின் பன்முகத்தை காட்டும். கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் முதுவர் என்ற பழங்குடி மக்கள் வாழ்க்கை பற்றிய புத்தகம் இது. இவர்கள் வசிக்கும் கிராமங்களில் சென்று, […]

Read more

எத்திசையும் தமிழ்

எத்திசையும் தமிழ், திருக்குறள் பதிப்பகம், விலை 200ரூ. இந்நூல் சேர நாடாக இருந்த கேரளத்தின் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட இலக்கிய வரலாற்றை முரசறைந்து தமிழுலகிற்கு அறிவிக்கின்றது. சங்க காலத்திலிருந்து விடுதலைக்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் படைப்புகளை வகுத்தும், தொகுத்தும் ஆய்வு செய்கின்றது. மலையாள நாட்டில் தாய்த்தமிழ் பொலிவோடு சிறப்புற்றிருப்பதைக் கண்டறிகின்றது. கேரளத்திற்கும், தமிழுக்கும் உள்ள உறவுகள் விளக்கப்படுகின்றன. கேரளத்தின் இன்றைய விழாக்களான திருவோணமும், திருவாதிரையும் தமிழரின் பழம்பெரும் விழாக்கள் என சுட்டப்படுகின்றது. கேரளத்தில் படைக்கப்பட்ட இலக்கண நூல்கள், அகத்தியம், […]

Read more

மக்கள் தோழர் ஜோதிபாசு

மக்கள் தோழர் ஜோதிபாசு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 170ரூ. மேற்கு வங்க மாநிலத்தின் வரலாற்றோடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய அரசியல் வரலாற்றோடு கலந்து விட்ட மகத்தான தலைவர் ஜோதி பாசு. இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கு மிகப்பெரும் கவுரவத்தை ஏற்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடராக திகழ்ந்த ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. லண்டனில் சட்டம் பயின்ற ஜோதி பாசு வக்கீல் தொழிலை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் பணிக்காக  களத்தில் குதித்தார். சட்டமன்ற உறுப்பினராகி துணை முதல்வரானார். பின் முதல்வரானார். 23 ஆண்டுகள் மாநில […]

Read more

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு, உரை விளக்கம் அருட்கவி அரங்க.சீனிவாசன், திருக்குறள் பதிப்பகம், பக். 536, விலை 500ரூ. உரையுடன் மீண்டும் வெளியானது அண்ணாமலை ரெட்டியார் பாடல்கள் தமிழ் வளர்த்த மதிப்பிற்குரிய தென்பாண்டித் தமிழகத்தில், பலவர்கள் பலர் தோன்றினர். அவர்களில் ஒருவர், கவியாற்றல் மிக்க இளைஞர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார். 30 ஆணடுகளே வாழ்ந்த அவர், பல்வேறு தெய்வங்களையும், ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பத் தேவரையும் பாடியுள்ளார். இசையுலகமும், நாடக உலகமும் பொதுமக்களும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடிய, உயர்வுமிகு காவடிச் சிந்துப் […]

Read more

வாலி 100

வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html தலைமுறைகளைக் கடந்தும் ஜெயித்த திரையுலக ஜாம்பவான் வாலி பற்றிய 100 சுவையான செய்திகளின் தொகுப்பு. இவை செய்திகளல்ல. ஒவ்வொன்றும் ஒரு பதிவு. அடுத்த தலைமுறையினருக்கு வாலி பற்றிய ஒரு பாடம். வாலியின் துணிவு, நன்றி உணர்வு, நட்பு, நகைச்சுவை, எளிமை, ஈகோ இல்லாத மனம், யாருக்கும் தலைவணங்கா மாண்பு, தீராத தேடல், அவரது பட்டறிவு என்ற வாலியைச் சுற்றி […]

Read more

தொல்லியல் புதையல்

தொல்லியல் புதையல், நடன. காசிநாதன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 160, விலை 120ரூ. To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-209-0.html தமிழ்நாடு அரசு தொல்லியல்  துறைக் காலாண்டிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் வெளியான, தொல்லியல் தொடர்பான 18 கட்டுரைகளின் தொகுப்பு. மோத்தக்கல் என்ற ஊரின் தென்கிழக்கில் உள்ள மூங்கில் காட்டில் கிடைத்த வட்டெழுத்து பொறிக்கப்பட்ட இரு நடுகற்கள், பல்லவ மன்னன் முதலாம் மசேந்திரவர்மனின் காலத்தைச் சேர்ந்தவை. அதாவது இன்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எழுதபப் பெற்றவை. இவை சோழன் […]

Read more

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும்

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும், முனைவர் செல்லன் கோவிந்தன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 78, பக். 272, விலை 170ரூ. தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும் என்ற, இந்த நூலினைப் படைத்துள்ள நூலாசிரியர் ஆய்வாளரா என்னும் ஐயம் தோன்றும் அளவிற்கு, இந்த நூலினைப் படைத்திருக்கிறார். சங்க இலக்கியத்தில், மனிதன் இனக் குழுவாக வாழ்ந்த காலத்துப் பாடல் துவங்கி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரைஉள்ள பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதை, சங்க இலக்கியத்தைப் படிக்கும் எவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த […]

Read more

கடவுளைக் காட்டிய கவிகள்

கடவுளைக் காட்டிய கவிகள், மு. ஸ்ரீநிவாஸன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 240, விலை 150ரூ. கேரளத்தின் எழுத்தச்சன், ஸ்ரீநாராயண குரு, கர்நாடகத்தின் சர்வக்ஞர், கனகதாசர், புரந்தரதாசர், மகாராஷ்டிராவின் பக்த ஜனாபால், பஞ்சாபின் அர்ஜுன்தேவ், தமிழகத்தின் ஆளவந்தார் உள்பட 32 பக்திக் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிஞர்களின் முக்கியத்துவம், தனித்தன்மை, பக்தியினூடாக அவர்கள் பரப்பிய சமுதாயச் சிந்தனைகள் போன்ற அனைத்தையும் பற்றிய அற்புதமான செய்திகளைப் பரிமாறும் நூல். பல்வேறு மொழிக் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க கவிதைகளை மேற்கோளாக இனிய தமிழில் தந்திருக்கிறார் […]

Read more

ஆட்சித்தமிழ் வரலாற்று நோக்கு

ஆட்சித்தமிழ் வரலாற்று நோக்கு, மு.முத்துவேலு, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 176, விலை 90ரூ. சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆட்சிமன்றம், நிர்வாகம், நீதித்துறைகளில் தமிழ் பயன்படுத்தப்பட்டு வரும்விதம் குறித்துப் பேசும் நூல். சோழர் காலத்தில் கூற்றம், கோட்டம், நாடு, வளநாடு மண்டலம் என்று நிர்வாக அடிப்படையில் நிலப்பகுதிகள் பிரிக்கப்பட்டன. அப்போது கழஞ்சு, பாட்டம், கூலிர முத்தாவணம், மேரை, காணம் என்ற தமிழ்ப் பெயர்களில் விற்பனை வரி வசூலிக்கப்பட்டு வந்தன என்று எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். சங்க காலம் ஆட்சித் தமிழின் பொற்காலம் […]

Read more

வரலாற்றில் மணிமங்கலம்

வரலாற்றில் மணி மங்கலம், அனந்தபுரம் கோ. கிருட்டின மூர்த்தி, திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 304, விலை 200ரூ. மகேந்திரவர்மனிடம் தோல்வி கண்ட இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மனை வெற்றிகாண காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் போர் புரிந்து தோல்வியைத் தழுவுகிறான். இரண்டாம் புலிகேசியின் போர் முயற்சியால் பல்லவ நாடு பெரும் துன்பத்தைச் சந்தித்திருக்கிறது. இதனால் நரசிம்மவர்மன், இரண்டாம் புலிகேசியை அவன் நாட்டிலேயே அவனைத் தோற்கடிக்கிறான். அதனால் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிரம் பல்லவருக்கு உரியதாக நிலைபெற்றது. இதனால் பல்லவ நாட்டின் முக்கிய […]

Read more
1 2