பெரியபுராண வாயில்

பெரியபுராண வாயில், சாமி. தியாகராசன், சிவாலயம், பக்.136, விலை ரூ.120.  சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணத்தில் பாயிரம் என்ற பெயரில் பத்துப் பாயிரங்கள் (பதிகங்கள்) உள்ளன. பாயிரம் என்ற சொல்லுக்கு வரலாறு என்று பொருள். அதாவது, நாயன்மார்களின் வரலாற்றை விரித்துரைப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். நூலில் சொல்லப்பட்ட செய்திகளைப் பாயிரத்தைப் படித்து சுருக்கமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதனால், பாயிரம் என்பது கோயிலுக்குக் கோபுரம் போல நூலுக்கு கோபுரமாக (முதன்மையானதாக) அமைகிறது. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அசரீரியாக “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்த பெரியபுராணத்தில் உள்ள […]

Read more

நலம் தரும் நாற்பது

நலம் தரும் நாற்பது,  இரா.இராஜாராம்; ஜீவா படைப்பகம், பக்.140; ரூ.140;   தினமணி, கலைக்கதிர், புதிய தென்றல், ஆனந்தயோகம், மஞ்சரி ஆகிய இதழ்களில் வெளிவந்த 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சிறந்த வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைந்த கட்டுரைகள். அமைதியும் ஆனந்தமும் நிறைந்ததாக மனம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கட்டுரை, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறது. காலம் எவ்வளவு அருமையானது என்பதை விளக்கும் நூலாசிரியர், பணியிடங்களுக்குத் தாமதமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். ” […]

Read more

ஞாபகச் சுவடு

ஞாபகச் சுவடு,  ஆ.ப.செந்தில்குமார், காக்கை பிரதிகள்,  பக்.90, விலை ரூ.100. இதழியல்துறையில் அனுபவமிக்க நூலாசிரியர், அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய, சம்பவங்களைப் பற்றிய அறிமுகமாக இந்நூலை எழுதியிருக்கிறார். ஓவியர் ஆதிமூலம், விஸ்வம், நெடுஞ்செழியன், பொன் ரகுநாதன், ஓவியர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் குறித்த தகவல்கள் வியக்க வைக்கின்றன. “மரணம் சில குறிப்புகள்”  கட்டுரை, ” மரணம் என்பது என்ன? நிரந்தரமாகத் தூங்குதல் தவிர, வேறொன்றுமில்லை” என்கிறது. “பிரபஞ்சன் எனும் ஆளுமை” கட்டுரையில், “ரஷ்ய எழுத்தாளரைப் பாருங்கள், ஜப்பானிய எழுத்தாளரைப் பாருங்கள் என்று ஆங்காங்கே குரல்கள் அவ்வப்போது […]

Read more

இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல்,  இறையன்பு; கற்பகம் புத்தகாலயம், பக்.200; ரூ.175; விருந்தினரை வரவேற்க புன்னகையே பூங்கொத்து; முகப்பொலிவே பொன்னாடை; கண் மலர்ச்சியே கற்கண்டு; வரவேற்கும் விதம் வழிப்பந்தல் என விருந்தோம்பல் குறித்து தமிழிலக்கியங்களில் உள்ள பல முக்கியத் தகவல்களை இந்த நூல் பதிவு செய்கிறது. “விருந்தோம்பல் இலக்கணம்”, “அகநானூற்றில் விருந்தோம்பல்”, “நீதி நூல்களில் விருந்தோம்பல்”, “விருந்தோம்பல் அன்றும் இன்றும்” என இருபது அத்தியாயங்களில் விருந்தோம்பல் குறித்து குறிப்பிடப்படும் பல சுவையான செய்திகள் வாசகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. குழந்தை பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்தல், திருமண […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்,  அசோகமித்திரன், சா.கந்தசாமி; சாகித்திய அகாதெமி, பக்.127; ரூ.50;  சாகித்திய அகாதெமியின் “இந்திய இலக்கியச் சிற்பிகள்” வரிசையில் தமிழின் நவீன எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றிய இந்த நூல், அவருடைய வாழ்க்கை, எழுத்து குறித்த ஒரு சிறந்த அறிமுகம். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அசோகமித்திரனின் அருகிலிருந்து அவரது எழுத்தையும் வாழ்க்கையையும் எழுத்தாளராகவும் நண்பராகவும் கண்டுள்ள சா.கந்தசாமி, இந்நூலை எழுதியிருப்பது மிகப் பொருத்தம். அசோகமித்திரன் எழுத்துலகம் தனித்துவமானது. சிறுகதை, நாவல் என புனைகதை வடிவ எழுத்தில் அவர் பெரும் வெற்றி பெற்றவர் என்பதில் […]

Read more

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும்

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும் (கட்டுரைகள் தொகுப்பு) , குடவாயில் பாலசுப்ரமணியன்; அன்னம், பக்.240, விலை ரூ.210;  அண்மைக்காலமாக திருக்கோயில்கள் பற்றிய வரலாறுகள், புனையப்பட்ட கற்பனைச் செய்திகளின் அடிப்படையில் கட்டுரைகளாக்கப்படுகின்றன. ஆனால் இதற்கு மாறாக, கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் உள்ளன. அவற்றின் தொகுப்பு இந்நூல். ஏராளமான படங்களுடன் கூடிய இந்தத் தொகுப்பின் மூலம் அறிய முடிகிற சில தகவல்கள்:ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி திருக்கோவிலூர் மலையமானின் மகள் என்பது; இந்தத் தகவல் திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலிலுள்ள எண்பது […]

Read more

பாகவதப் பாரதம்

பாகவதப் பாரதம்,  சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.592, விலை ரூ.600; வியாசரால் எழுதப்பட்ட வடமொழிப் புராணமான ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுவின் அவதாரக் கதைகளைக் கூறுவது. அதே வியாசர் எழுதிய இதிகாசமான மகாபாரதம், பாண்டவ- கெளரவர்களிடையிலான குருவம்ச பங்காளிச் சண்டையை மையமாகக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும் “பாகவதப் பாரதம்” என்ற காப்பியம் தமிழில் 1800-ஆம் ஆண்டுகளில் தமிழில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருப்பது வியப்புக்குரிய செய்தி. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபல்பநாப நாடார் இந்நூலை எழுதி இருக்கிறார். அம்மானைப் பாடல் வடிவில் பாகவதப் பாரதம் எழுதப்பட்டுள்ளது. அந்த ஓலைச்சுவடியில், […]

Read more

முகநூல் பதிவுகள்

முகநூல் பதிவுகள்,  பெ.சுபாசுசந்திரபோசு,  சிந்தியன் பதிப்பகம், பக்.192; விலை ரூ.200. முகநூல் பதிவுகளாக இருந்தாலும் நூலாசிரியர் கூறியுள்ளபடி இந்நூல் தமிழ் மொழி முதல் பசிபிக் கடற்கரை வரை நம்மை அழைத்துச் செல்கிறது. அமெரிக்கப் பயண அனுபவங்கள், தமிழ் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள், தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகங்கள், சிங்கப்பூர் பற்றிய செய்திகள், ஜப்பான் நாட்டின் பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்கள் என நூலின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. நாமறியாத பல தகவல்கள் நூல் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.தமிழ்நாட்டில் புனித மரமாகவும், வழிபாட்டு மரமாகவும் இருப்பது அரச […]

Read more

பாம்பு மனிதன்  ரோமுலஸ் விட்டேகர்

பாம்பு மனிதன்  ரோமுலஸ் விட்டேகர்,  வாழ்க்கைப் பயணம், ஸய் விட்டேகர்; தமிழில்: கமலாலயன்; வானதி பதிப்பகம், பக்.448; விலை ரூ. 500;  பாம்பு மனிதன் ரோமுலஸ் விட்டேகர் வாழ்க்கைப் பயணம் – ஒரு வாழ்க்கை வரலாறுதான். என்றபோதிலும் ஒரு நாவலுக்குரிய சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் ரசித்துப் படிக்கும்படியாகச் செல்கிறது. சென்னையின் பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள முதலைப் பண்ணை ஆகியவற்றின் பின்னால் எத்தகைய உழைப்பு இருந்திருக்கிறது, எத்தகைய மனிதர்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் விவரிக்கிறது இந்த நூல். ஆங்கிலத்தில்\”ஸ்நேக் மேன் என்ற பெயரில் வெளிவந்த – […]

Read more

தொடுவானம் தேடி

தொடுவானம் தேடி,  அ.தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ,  வானவில் புத்தகாலயம், பக்.264,  விலை ரூ.299.  தொழில், வணிகம் உலகமயமாகிவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகெங்கும் தமது வேர்களை ஆழமாக ஊன்றி வருகின்றன. இந்நிலையில் அவற்றிற்கிசைவாக, அவற்றின் ஒரு பகுதியாக இங்குள்ள சிறு, குறு தொழில்கள் இருக்க வேண்டிய தேவை உள்ளது. சிறு, குறு தொழில் நடத்துபவர்கள் நவீன தொழில், வணிக மேலாண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆனால், நமது நாட்டில் சிறு, குறு தொழில், வணிகச் செயல்முறைகள் அனுபவம் சார்ந்தே உள்ளன. அறிவியல்பூர்வமான […]

Read more
1 22 23 24 25 26 180