சங்க கால வானிலை

சங்க கால வானிலை,  கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், பக்.272, விலை ரூ.300. நவீன வானிலையியல் காற்றைப் பற்றி, மேகத்தைப் பற்றி, மழையைப் பற்றி, காலநிலையைப் பற்றி, வானிலை பற்றி வைத்துள்ள அறிவியல் வரையறைகள் நூலில் விளக்கப்படுகின்றன. அந்த வரையறைகளுக்குப் பொருந்துவிதமாக சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தகவல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக காற்றைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.  வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்றை வாடை, வடந்தை, ஊதை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை ;கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை கோடை எனவும், தெற்கில் […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம் (முழுமையாக)

பிற்காலச் சோழர் சரித்திரம் (முழுமையாக), டி.வி.சதாசிவ பண்டாரத்தார். ஜீவா பதிப்பகம், பக்.592. விலை ரூ.570. கிபி 846 முதல் கி.பி.1279 வரை சோழ மண்டலத்தை ஆண்ட அரசர்களின் வரலாறு இந்நூல். மூன்று பகுதிகளாகத் தனித்தனியாக வெளியிடப்பட்டிருந்த பிற்காலச் சோழர் சரித்திரத்தைத் தொகுத்து முழுமையாக வெளியிட்டிருக்கிறார்கள். சோழப் பேரரசை நிறுவ அடிகோலிய விசயாலயன் (கி.பி.846 -881) காலம் முதல் பாண்டிய மன்னன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியனுடன் போரிட்டு சோழப் பேரரசை இழந்த மூன்றாம் இராசேந்திர சோழன் (கி.பி.1246 -1279) வரை ஆண்ட சோழ மன்னர்களின் வரலாறு இந்நூலில் […]

Read more

விளிம்புக்கு அப்பால்

விளிம்புக்கு அப்பால் (புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்),  தொகுப்பாசிரியர்: பொன்.வாசுதேவன்,  அகநாழிகை பதிப்பகம், பக்.160, விலை ரூ.140 பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளின் தொகுப்பு. 22 வயதிலிருந்து 35 வயகுக்குட்பட்டவர்கள் எழுதிய கதைகள் இவை என்பதை நம்ப முடியவில்லை. வங்கியில் வேலை செய்யும் அப்பா, பிறருக்கு புத்தகங்களை விற்பவராக இருந்திருப்பதன் ரகசியத்தை அவர் மறைவுக்குப் பிறகு தெரிந்து கொள்ளும் மகனின் பார்வையில் சொல்கிறது அப்பாவின் ரகசியம் சிறுகதை.  திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்காரனோடு வாழும் ஒருவர், வேலைக்காரனுக்கு திருமணம் செய்வதற்காக எல்லாச் சொத்துகளையும் வேலைக்காரனின் பெயரில் […]

Read more

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி,  பி.இரத்தினசபாபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.280, விலை ரூ.180. மொழியும் சமுதாயமும் வகுப்பறையில் மொழிப் பன்முகம் வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம் கல்வி ஏற்பாட்டில் மொழி மொழிசார்ந்த எதிர்கோள்கள் ஆகிய தலைப்புகளில் கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. […]

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன்,  டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம்,  பக்.304, விலை ரூ.200. மருத்துவம் சார்ந்த நூல்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நூலாக இது விளங்குகிறது.கண்ணுக்குப் புலப்படாத உள்ளுறுப்புகள் எப்படி உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத வலிமையுடன் விளங்குகின்றன என்பதை ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன சிகிச்சைகள் வரை அலசப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமன்றி, உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள், அதற்கான காரணங்கள், அதன் விளைவுகள் என அனைத்து விஷயங்களும் […]

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, அழகின் நரம்பியல், உளவியல் விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.106, விலை ரூ.50. மனித வாழ்க்கையின் அடிப்படையாகத் தன்னைப் பேணுவதும், தன்னைப் போல் இன்னொன்றைப் பிறப்பிப்பதும் இருக்கின்றன.  இந்த இரண்டும் எல்லா மிருகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், மனிதனிடம் விளையாட்டும், கலை உணர்வும் இருப்பதுதான் மிருகங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் காட்டுகிறது. கலையின் மேற்பூச்சுக்குப் பின் காமம் மறைந்திருக்கிறது. பரதநாட்டியம், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்றவற்றில் மெலிதாகக் காமம் இழையோடுவதைப் பார்க்க முடியும். அவை காம இச்சையின் வடிகால்கள்தானே என்கிறார் நூலாசிரியர். கலையோடு […]

Read more

ரசூலின் மனைவியாகிய நான்

ரசூலின் மனைவியாகிய நான்,  புதியமாதவி, காவ்யா, பக்.139, விலை ரூ.140 ஏழு கதைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கதையான "ரசூலின் மனைவியாகிய நான் ஒரு குறுநாவல். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த ரசூல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான். அவனுடைய மனைவி கவுரி, மருத்துவமனைக்கு வந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள். அதே குண்டுவெடிப்பில் கவுரியின் வீட்டருகே உள்ள பணக்காரரான மங்கத்ராமின் மகன் கபில் இறந்துவிடுகிறான். ரசூல் இருக்கும் மருத்துவமனையில் அவனைப் போலவே குண்டுவெடிப்பில் காயமடைந்த ஹேமா இருக்கிறாள். ரசூலுடன் குண்டுவெடித்த ரயிலில் பயணம் […]

Read more

தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம்  சமகால எதிர்வினைகள் (இதழ்கள்)

தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம்  சமகால எதிர்வினைகள் (இதழ்கள்), மு.வையாபுரி, பல்லவி பதிப்பகம்,பக்.229, விலை ரூ.170. ஐரோப்பியத் தாக்கத்தினால் நமது சமூக, அரசியல், பொருளாதார இயங்கு தளங்களில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தாம் தமிழில் புனைகதை என்றொரு இலக்கிய வகை உருவாகக் காரணமாக இருந்தது என்று கூறும் நூலாசிரியர், அப்படி உருவான புனைகதை வடிவமானது தமிழ்மொழியின் பாரம்பரியங்களுக்கு ஊடாகத்தான் இங்கே தோற்றம் பெற்றது என்கிறார். ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகளை வெளியிடுவதற்காகவே முதலில் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன என்றாலும், சமயம், கல்வி, அன்றாட நிகழ்வுகள், நாட்டு வரலாறுகளையும் அக்காலப் […]

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது?

அழகு ஏன் அழகாயிருக்கிறது?, அழகின் நரம்பியல், உளவியல் விளக்கம் – க.மணி;  அபயம் பப்ளிஷர்ஸ்,பக்.106, விலை ரூ.50 மனித வாழ்க்கையின் அடிப்படையாகத் தன்னைப் பேணுவதும், தன்னைப் போல் இன்னொன்றைப் பிறப்பிப்பதும் இருக்கின்றன.  இந்த இரண்டும் எல்லா மிருகங்களுக்கும் பொதுவானவை என்றாலும், மனிதனிடம் விளையாட்டும், கலை உணர்வும் இருப்பதுதான் மிருகங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் காட்டுகிறது. கலையின் மேற்பூச்சுக்குப் பின் காமம் மறைந்திருக்கிறது.பரதநாட்டியம், நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்றவற்றில் மெலிதாகக் காமம் இழையோடுவதைப் பார்க்க முடியும். அவை காம இச்சையின் வடிகால்கள்தானே என்கிறார் நூலாசிரியர். கலையோடு தொடர்புபடுத்தி […]

Read more

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி, பி.இரத்தினசபாபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.280, விலை ரூ.180 மொழியும் சமுதாயமும் வகுப்பறையில் மொழிப் பன்முகம் வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம் கல்வி ஏற்பாட்டில் மொழி மொழிசார்ந்த எதிர்கோள்கள் ஆகிய தலைப்புகளில் கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. […]

Read more
1 39 40 41 42 43 180