தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம்

தமிழில் நாவல், சிறுகதைகள் உருவாக்கம், சமகால எதிர்வினைகள் (இதழ்கள்), மு.வையாபுரி, பல்லவி பதிப்பகம், பக்.229, விலை ரூ.170. ஐரோப்பியத் தாக்கத்தினால் நமது சமூக, அரசியல், பொருளாதார இயங்கு தளங்களில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தாம் தமிழில் புனைகதை என்றொரு இலக்கிய வகை உருவாகக் காரணமாக இருந்தது என்று கூறும் நூலாசிரியர், அப்படி உருவான புனைகதை வடிவமானது தமிழ்மொழியின் பாரம்பரியங்களுக்கு ஊடாகத்தான் இங்கே தோற்றம் பெற்றது என்கிறார். ஆட்சியாளர்களுக்குச் சாதகமான செய்திகளை வெளியிடுவதற்காகவே முதலில் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன என்றாலும், சமயம், கல்வி, அன்றாட நிகழ்வுகள், நாட்டு வரலாறுகளையும் […]

Read more

ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்,  சி.எஸ்.தேவநாதன், சுரா பதிப்பகம்,  பக்.120, விலை ரூ.60. ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல். வாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவது, வாடிக்கையாளரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி எந்த முன் முடிவுக்கும் வராதிருப்பது, பொறுமையாக இருப்பது, வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது என வாடிக்கையாளர்களைக் […]

Read more

பறவையியல்

பறவையியல்,  வ.கோகுலா, சி.காந்தி,  ஜாஸிம் பப்ளிகேஷன், பக்.200, விலை ரூ.300. நம் மனதைக் கவரும் பறவைகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான பல உண்மைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது இந்நூல். நூலின் முதற்பகுதியில் இந்த உலகம் தோன்றிய முறை, உயிரினங்கள் தோன்றியது, கண்டங்கள் இடம் பெயர்ந்தது, பறவையினங்களின் தோற்றம் ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளன. அரிஸ்டாட்டில் பறவைகளைப் பற்றிய குறிப்புகளை தனது விலங்குகளின் வரலாறு நூலில் சேர்த்ததை பறவையியல் ஆய்வின் தொடக்கமாக கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் நடந்த ஆய்வுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். பறவைகளின் இறகுகள் எம்மாதிரி அமைந்துள்ளன? […]

Read more

கு.சின்னப்ப பாரதியின் மனித இயந்திரம்

கு.சின்னப்ப பாரதியின் மனித இயந்திரம் (சிறுகதைகள்),.கு.சின்னப் பாரதி, கோரல் பப்ளிஷர்ஸ், பக்.120, விலை ரூ.100. கும்பிட வேண்டிய தெய்வம், காவல்நிலையம், பிச்சைக்காரர்கள், மனித யந்திரம்  உள்ளிட்ட 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். கும்பிட வேண்டிய தெய்வம் சிறுகதையில் கூலி வேலை செய்யும் வீரா இடுப்பு எலும்பு முறிந்து நடமாட முடியாமல் வீட்டில் இருக்கும் தன்தாயைச் சுத்தம் செய்வது உள்பட எல்லாவிதமான வேலைகளையும் செய்கிறான். அவனுடைய மனைவியும் முகச்சுளிப்பின்றி மாமியாரைப் பார்த்துக் கொள்கிறாள். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியரின் அம்மா மூப்பின் காரணமாக, எழுந்து நடமாட […]

Read more

மனித வாழ்வில் ஆவணங்கள்

மனித வாழ்வில் ஆவணங்கள்,  வழக்கறிஞர் தரும் விளக்கங்கள்,  ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நந்தவன படைப்பகம், பக்.176, விலை ரூ.200. சொத்துகளை விற்பது, வாங்குவது, சொத்துகளைப் பிறருக்கு எழுதி வைப்பது, சொத்துகளைப் பாகப்பிரிவினை செய்து கொள்வது, சொத்தை விற்பதற்கு பிறருக்கு உரிமை கொடுப்பது, சொத்தை அடமானம் வைப்பது, வாடகைக்கு விடுவது, குத்தகைக்கு விடுவது, கடன் வாங்குவது என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் நிகழத்தான் செய்கிறது. அந்த நிகழ்வுகளின்போது நாம் ஏமாறாமல் இருக்க, அது பற்றிய சட்டரீதியான தெளிவு நமக்கு மிகவும் அவசியம். உதாரணமாக, சொத்தை […]

Read more

ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக்குறிப்புகள்

ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக்குறிப்புகள், பதிப்பாசிரியர் சிற்பி, சாகித்திய அகாதெமி வெளியீடு, விலை 260ரூ. கலைக்களஞ்சியனின் கதை இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் கிடைத்த […]

Read more

இராமகிருஷ்ண பரமஹம்சர்

இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி லோகேஸ்வரானந்தா, தமிழில்: இலா.வின்சென்ட், சாகித்திய அகாதெமி, பக்.128, விலைரூ.50. முறையான தொடக்க கல்வி கூட கற்காத கடாதர் என்ற சிறுவன் எவ்வாறு உலகமறிந்த ஞானியாக இராமகிருஷ்ண பரமஹம்சராகப் பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். ராமனின் அவதாரமாக ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றியிருப்பதாக அவர் குழந்தையாக இருக்கும்போதே பலர் கருதியிருக்கின்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பல சமயங்களில் கடவுளைக் காணும் பரவசநிலைக்கு உள்ளாகியிருக்கிறார். இந்நூல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்துமதம் மூலம் மட்டுமே கடவுளை உணரும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருந்த ராமகிருஷ்ண […]

Read more

மதிப்பிற்குரிய மழலைகள்

மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூஸ் மீடியா,  பக்.144, விலை ரூ.100. குழந்தை வளர்ப்பு இப்போது சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளை இயல்பாக வளரவிடாமல் தடுக்கும் கல்விமுறை, செல்பேசி, தொலைக்காட்சி முதலான சமூக ஊடகங்களின் தாக்கம், வேலையின் காரணமாக குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க இயலாத பெற்றோர்கள் எனபல்வேறு சூழல்கள் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. இந்நிலையில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பிறந்தது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளின் மன, அறிவு வளர்ச்சி […]

Read more

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.260. தமிழகம் நன்கறிந்த படைப்பாளியான பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். பணம் சம்பாதித்து சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல், தனக்குப் பிடித்த பணிகளைச் செய்து  வாழ்ந்து முத்திரை பதித்து மறைந்தவர் பெரியசாமித்தூரன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பித்தன் என்ற இதழை நடத்தியிருக்கிறார். பாரதியாரின் படைப்புகளை அவை வெளிவந்த ஆண்டு, மாதம், நாள் குறிப்புகளோடு 1953 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், உளவியல் நூல்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், […]

Read more

புறநானூறு

புறநானூறு (புதிய வரிசை வகை),  சாலமன் பாப்பையா,  கவிதா பப்ளிகேஷன், பக். 928, விலை ரூ.800. புறநானூறு அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, அரசாட்சி, அறச்செயல்கள், உலகத்து நிகழ்ச்சிகள் எனப் பலவற்றையும் உள்ளது உள்ளவாறு எடுத்துரைக்கும் ஓர் வரலாற்று ஆவணமாகும். புதிய வரிசை வகை என்பதற்கேற்ப, மன்னர்களின் கால வரிசைப்படியோ, திணை அடிப்படையிலோ, பாடிய புலவர்களின் வரிசைப்படியோ  பாடல்கள் தொகுக்கப்படவில்லை என்பதும், மன்னர் ஒருவரைப் பற்றிய பாடல்களும் கூடத் தொடர்ச்சியாக அமையாமல் அங்கொன்றும் […]

Read more
1 40 41 42 43 44 180