மாடும் வண்டியும்

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு), த.ஜான்சி பால்ராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.126, விலை ரூ.130. டிராக்டர்கள் வந்த பின் நிலத்தை உழ மாடுகள் தேவையில்லாமற் போய்விட்டன. அதுமட்டுமல்ல, விளைவித்த பொருள்களைக் கொண்டு செல்ல பயன்பட்ட மாட்டுவண்டிக்கான தேவையும் இல்லாமல் போய்விட்டது. மனிதர்கள் பயணம் செய்ய மாட்டு வண்டிகள் கூண்டு வண்டிகளாக மாறின. ஆடம்பரமான வில் வண்டிகளும் வந்தன. நவீன வாகனங்கள் அவற்றை இல்லாமற் செய்துவிட்டன. இந்நூல் மாட்டு வண்டிகளின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? மாட்டுவண்டிகளின் பாகங்கள் […]

Read more

தலைவலியே உன் முகவரிதான் என்ன?

தலைவலியே உன் முகவரிதான் என்ன?, அ.வேணி, சிவாவேணி பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.220. மூளை நரம்பியல் நிபுணரான நூலாசிரியர், தலைவலி எதனால் வருகிறது? அதன் வகைகள் யாவை? தலைவலி வந்தால் எதைக் கவனிக்க வேண்டும்? தலைவலி பரம்பரை நோயா? தலைவலிக்கு என்னென்ன சிகிச்சைமுறைகள் உள்ளன? தலைவலி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? தலைவலியால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரிடம் என்ன சொல்ல வேண்டும்? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூல் மூலம் விடையளிக்கிறார். உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை வலியின் மூலமாகத்தான் உடல் நமக்குத் தெரியப்படுத்துகிறது. எந்த எந்த […]

Read more

பெண்ணியம்

பெண்ணியம்,  இரா.பிரேமா, பாரி புத்தக பண்ணை, பக்.216, விலை ரூ.90. பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானது அல்ல; காலம் காலமாக அடிமைப்பட்ட பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, கல்வியின் மூலமாக அவர்களை வளர்த்தெடுத்து உயர்த்துவதே பெண்ணியத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். பெண்ணியம் எவ்வாறு தோன்றியது? அது தோன்றுவதற்கான பின்னணி, உலக அளவில் பேசப்படும் பெண்ணிய வகைகள், பலவிதமான பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் கருத்துகள் என விரிவாக இந்நூல் பேசுகிறது. வேத காலத்தில் யாக்ஞவல்கியருடன் வாதிட்ட கார்கி போன்ற பெண்மணிகளும் இருந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு நிகராக கல்வி கற்பது, […]

Read more

ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம்

ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம், தமிழில்: எஸ்.எம்.கார்மேகம், முல்லை பதிப்பகம், பக்.96, விலை ரூ.30 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 37 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் ஹாரி மில்லர். அவர் புகைப்படக் கலை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய தொடர், தமிழில் தினமணி கதிர் இதழில் 26.3.1995 முதல் 1.6.1995 வரை வெளிவந்தது. அதனுடைய நூல் வடிவம்தான் இந்நூல். விலை உயர்ந்த காமிராவை வைத்து ஒருவர் நல்ல புகைப்படங்களை எடுத்துவிட முடியாது. நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படம் எடுப்பவர் காமிராவை எப்படிக் கையாள வேண்டும் என்று […]

Read more

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு, சு.சசிகலா,  காவ்யா, பக்.272, விலை ரூ.280 சித்தர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்திருக்கும் நூலாசிரியர், சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாட்டை ஆய்வு செய்திருக்கிறார். அகத்தியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் உள்ளிட்ட 18 சித்தர்களின் வரலாற்றையும், அவர்களுடைய படைப்புகளில் காணப்படும் இறைக்கோட்பாட்டையும் இந்நூல் ஆய்வு செய்திருக்கிறது. யோகம், மருத்துவம், ஞானம், இரசவாதம் ஆகியவற்றை சித்தர்கள் நுட்பமாக விளக்கியுள்ளதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. மனிதனுக்கு வெளியே உள்ள அண்டத்துள் உள்ளது மனிதனின் பிண்டத்துள் உள்ளது என்று சித்தர்கள் கூறியிருப்பதை, மனிதன் இயற்கையின் ஒரு பகுதி, […]

Read more

திருக்குறள் உரைக்கதைகள்

திருக்குறள் உரைக்கதைகள்,  பானு மாதவன், மணிமேகலைப் பிரசுரம், பக்.256, விலை ரூ.175. திருக்குறளின் அறத்துப்பாலில் நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்களில் உள்ள 20 குறள் பாக்களுக்கு விளக்கம்அளிக்கும்விதமாக எழுதப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், ஒரு குறிப்பிட்ட குறளின் கருத்தை விளக்க வேண்டும் என்ற அடிப்படையில், சிறந்த கற்பனைத்திறனுடன் சுவையாக எழுதப்பட்டுள்ளன. திருடர்கள் அரண்மனையில் திருடியவற்றை சிவனடியாருக்குத் தெரியாமல் அவர் வசிப்பிடத்தில் வைத்துச் செல்ல, சிவனடியார் திருடனாகக் கருதப்படுகிறார். எனினும் கதையின் இறுதியில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய […]

Read more

திரு.வி.க.தமிழ் இதழியல் முன்னோடி

திரு.வி.க.தமிழ் இதழியல் முன்னோடி,  அ.பிச்சை, காந்தி நினைவு அருங்காட்சியகம்,  பக்.104, விலை ரூ.100 தமிழறிஞராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் அறியப்பட்ட திரு.வி.க.,ஒரு பத்திரிகையாளரும் கூட. 1917 முதல் இரண்டரை ஆண்டுகள் தேசபக்தன் இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு 1920 முதல் 1941 வரை நவசக்தி இதழாசிரியராகப் பணியாற்றினார். 23 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல்துறையில் பணியாற்றிய திரு.வி.க. இதழியல்துறையில் செய்த மாற்றங்கள் எவை? இதழ்களின் மூலம் மக்களுக்கு அவர் பரப்பிய கருத்துகள் எவை? என்பதை விரிவாகவும், தெளிவாகவும் இந்நூல் எடுத்து உரைக்கிறது. இவ்விரண்டு இதழ்களில் அரசியலைப் […]

Read more

கோவை ஞானியின் திறனாய்வு நெறி

கோவை ஞானியின் திறனாய்வு நெறி (வாசிப்பும் மதிப்பீடும்),  தொகுப்பாசிரியர்கள்: க.ஜவகர், கு.முத்துக்குமார், சோ.பிலிப்சுதாகர், புதுப்புனல், பக். 160, விலை ரூ.200 கலை, இலக்கியம், தத்துவம் சார்ந்த தனது தனித்தன்மையான பார்வைகளை முன் வைக்கும் கோவை ஞானியின் நாவல், கவிதை, மெய்யியல் தொடர்பான கருத்துகளை விரிவாக எடுத்துக் கூறி அவற்றைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவிதமாக எழுதப்பட்ட 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. இலக்கியம், கோட்பாட்டு விவாதங்கள் மனித விடுதலையை நோக்கியதாக அமைய வேண்டும் என்பதே ஞானியின் இலக்கியத் திறனாய்வு நெறியாகும். அவரிடம் மார்க்சியம் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக, […]

Read more

தலைவலியும் மருத்துவமும்

தலைவலியும் மருத்துவமும்,  சு.நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.102, விலை ரூ.90 தலைவலி ஒரு நோயல்ல; நோயின் அறிகுறி. உடலில் பல்வேறு உறுப்புகளில், உடலின் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளே தலைவலிக்குக் காரணம் என்கிறார். ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் காரணமாகத் தோன்றும் தலைவலி, காது வலியினால் ஏற்படும் தலைவலி, மூளையில் ஏற்படும் நோய்களினால் ஏற்படும் தலைவலி, கண்களில் ஏற்படும் பாதிப்புகளினால் உருவாகும் தலைவலி, இன்சுலின், தைராய்டு போன்ற சுரப்புநீர்கள் சரியாகச் சுரக்காவிட்டால் ஏற்படும் தலைவலி, மன அழுத்தத்தினால் ஏற்படும் […]

Read more

சுகப்பிரசவம் இனி ஈஸி

சுகப்பிரசவம் இனி ஈஸி,  டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.150 சுகப்பிரசவம் இனி ஈஸி என்று நூலின் தலைப்பு சொன்னாலும், சுகப்பிரசவம் எளிதாக அமைய எவ்வளவு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்கிறதைப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. ஒரு பெண் கருவுறுதலுக்கு முன்பிருந்து எவ்வாறு தனது உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி, குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுப்பது வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நூல் விளக்குகிறது. தொற்றுநோய்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்; பயணங்களைத் […]

Read more
1 38 39 40 41 42 180