ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்

ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம், செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 142, விலை 90ரூ. சமகால வரலாற்று ஆவணம்! திருவையாறு எனும் ஊரில் பிறந்து, பள்ளி ஆசிரியராக நுழைந்து, கல்லூரி ஆசிரியராக உயர்ந்து, ஐந்து பேரை இணைத்துக்கொண்டு, 1878ல் ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகை துவங்கி, 1882ல் ‘சுதேச மித்திரன்’தமிழ் பத்திரிகை துவங்கி, விடுதலைப் போருக்கு உழைத்த தியாகி ஜி. சுப்பிரமணிய ஐயரின் வரலாற்று நூல் இது. இதில் சிறப்பு என்னவென்றால், அவர் வாழ்ந்த காலத்திலேயே, 1907ம் ஆண்டில், குருமலை சுந்தரம் பிள்ளை என்பவர், […]

Read more

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 244, விலை 170ரூ. எதிர்ப்பு நிலையும் இருப்பு நிலையும் ஆய்வேடுகள் வெகுமக்களால் படிக்கப்படும் நூலாக வெளிவருவது அரிது. எழுதியவரையும் விடை மதிப்பீட்டாளரையும் மிக இம்சிக்கும் ஆற்றலுடைய ஆய்வேடுகள், அப்படிக் காணாமற்போதல் காலவிதி. ஆனால், ஜோஸ்பின் மேரி வழங்கியிருக்கும் இந்த ஆய்வேடு படிக்க தூண்டுவதாகவும் பொருண்மை உடையதாகவும் இருக்கிறது. அயோத்தி தாச பண்டிதர் காலத்திலேயே அடியரம் இடப்பட்ட தலித் தொடர்ச்சியானது, 20ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வீறார்ந்து செயல்பட்டதை, நுண்மையாக அகலத்தோடும் […]

Read more

வேந்தன் சிறுகதைகள்

வேந்தன் சிறுகதைகள், வேந்தன், பண்மொழி பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில், இடதுசாரி சிந்தனையாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் சாதாரண தொழிலாளியாக இருந்து, தன் பார்வையை சிறுகதைகளாக செதுக்கியவர்களில் பி.டி.சிரிலும் ஒருவர். வேந்தன் என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மனிதநேயத்துடன் சாதாரண மனிதர்களை பற்றியும், தன்னை சுற்றிய நிகழ்வுகளையும் கதைக் கருவாக கொண்டு எழுதியுள்ளார். சாதாரண நிகழ்வும், அன்றாட வாழ்க்கையின் பாதிப்பும் அற்புதமான கதைகளாக நம்முன் உருவெடுத்து நிற்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வையும், உழைக்கும் வர்க்கம் […]

Read more

இந்திய நேரம் 2 A.M

இந்திய நேரம் 2 A.M., பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 168, விலை 125ரூ. பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இது. 1986ல், முத்தாரம் இதழில் தொடராக வந்தது. மகேந்திரன், ஒரு தொழிலதிபர். அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஸ்வர்ணா. மகேந்திரனின் பர்சனல் ஸ்டெனோ. ‘ஒரு துணைக்காக ஏங்கறேன் நான். என் மனைவி என்னை விட்டுவிட்டுப் போய் 12 ஆண்டுகள் ஆகின்றன. என் மேல் அக்கறை காட்ட, அன்பு செலுத்த யாருமில்லை. பசித்தாலும் கேட்க ஆளில்லை. என் தேவைகளை நானே […]

Read more

அஸ்தினாபுரம்

அஸ்தினாபுரம், ஜோ டி குருஸ், காக்கை பதிப்பகம், பக். 416, விலை 380ரூ. துறைமுக அவலத்தை தோலுரித்துக் காட்டும் நாவல்! ஜோ டி குரூஸின் கதை மாந்தர்கள் சாதாரண மனிதர்கள். ஆகையால் எளிதில் இனங்கண்டு கொள்ளப்படுபவர்கள். எங்கோ ஆமந்துரையில் பிறந்த அமுதனுக்கும், சென்னை செம்மாங்குப்பத்து ஆனந்திக்கும் வாழ்வில் இயற்கை சூட்சுமமான முடிச்சு போட்டிருந்தது என்பதுதான் அஸ்தினாபுரம் நாவலின் கதை. கதைக்கு அஸ்திவாரமே இந்த உறவுதான். அது உண்டான விதம், விரிந்து பரந்த் விஸ்தாரம் எல்லாம் அழகாகச் சொல்லப்படுகிறது. நாவல் சொல்லப்படும் விதத்தில், ஆசிரியரின் முழு […]

Read more

மதுவிலக்கு அரசியலும் வரலாறும்

மதுவிலக்கு அரசியலும் வரலாறும், ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 150ரூ. பாயும் மது; பதுங்கும் அரசு சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல; மதுவை ஒரு முறை தொட்டுவிட்டால் சகல அதிகாரங்களையும் கொண்ட அரசாங்கமும் தள்ளாட ஆரம்பித்துவிடுகிறது. ராஜாஜி தொடங்கி ஓமந்தூரார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று ஆட்சியாளர்கள்தான் மாறினார்களே ஒழிய, மதுவின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே அதன் ஒரு பகுதியாக, மதுவுக்குடிடடிபடி09கஉ எதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளைக் கடக்கப்போகிறோம். இருந்தும் மதுவை […]

Read more

இது மடத்துக்குளத்து மீனு

இது மடத்துக்குளத்து மீனு, ஷாஜகான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 264, விலை 215ரூ. வாழ்க்கை நமக்குத் தரும் அனுபவங்கள் எல்லாமே பாடங்கள்தான். நம் வாழ்நாள் முபவதும் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வேலை நிமித்தம் ஓர் இடத்திலிருந்து புலம்பெயர்ந்து, அந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பொருத்திக் கொள்வதில், எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படிச் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, பல்வேறு நிலப்பகுதிகளில் பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, தான் அடைந்த அனுபவங்களையும், கண்டடைந்த வாழ்க்கைத் தரிசனங்களையும், […]

Read more

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம்

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம், செல்லபாப்பா கீரன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 424, விலை 325ரூ. பூர்விகம் பாலக்காடு என்ற போதிலும், மயிலாடுதுறையில் வளர்ந்து, தருமையாதீனத் தமிழ் கல்லூரியில் பயின்று, சிறு வயதிலேயே மேடைப் பேச்சிலும், இலக்கியத்திலும் புலமை பெற்று, 1956ம் ஆண்டில், நாகர்கோவிலிலிருந்து விழாவிற்கு தலைமை ஏற்க வந்த ஆறுமுகநாவலரால் (பக். 23) என்பவரால், ‘கீரன்’ என்று பெயர் சூட்டப்பட்ட, ‘வைத்தியநாத சுவாமி’ எனும் இயற்பெயர் கொண்ட புலவர் திலகம் கீரனின் வரலாற்றை, வாழ்விலும், இலக்கியத்திலும் துணை நின்ற அவரது மனைவி, […]

Read more

தெளிவு பெறுஓம்

தெளிவு பெறுஓம், பிரபுசங்கர், ந.பரணிகுமார், சூரியன் பதிப்பகம், பக். 231, விலை 160ரூ. இந்த நூலில், ஆன்மிக தேடல்கள் பலவற்றிற்கும் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘உடல் மனதைக் கட்டுப்படுத்துகிறதா அல்லது மனம் உடலைக் கட்டுப்படுத்துகிறதா’ என்ற வினாவிற்கு தரப்பட்டுள்ள, ‘ஒட்டக குரு’ விளக்கம் (பக். 16), இரவில் படுக்கும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (பக். 24), கார்த்திகை தீபம் கொண்டாடுவதன் தத்துவம் (பக். 35), பீமன், அர்ச்சுனன் இருவரும் செய்த பூஜையில் உள்ள வேறுபாடு (பக். 42), தத்தாத்ரேயர் மனதை ஒருமுகப்படுத்த கற்றுக்கொண்ட விவரம் […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. பழந்தமிழர் இலக்கிய வரலாற்றில், பலமுறை பதிவு செய்யப்பட்ட கருத்துகள் ஆயினும், புதுப்பொலிவோடும், இன்றைய நோக்கோடும், நயத்தோடும், இந்த நூலில் கிராமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழரின் உழவும், உணவு முறைகளும், விருந்தோம்பல் பண்பாடும், பசு நேசம், சித்தர் மருத்துவம், விவசாயத்தின் ஏர், கலப்பை, சால், மண்வெட்டி, குதிர், பத்தாயம், எலி பிடிக்கும் கிட்டி ஆகியவையும் விரிவாக்கம் பெறுகின்றன. தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகளும், அதன் வண்ணங்களும் விளக்கப்பட்டு உள்ளன. காந்தி மதுரை […]

Read more
1 4 5 6 7 8