விதைக்குள் ஒரு விருட்சம்

விதைக்குள் ஒரு விருட்சம், புலவர் அ. செல்வராசு, டாக்டர் வ.செ. நடராசன் ஆதிபராசக்தி கிளினிக், பக். 112, விலை 120ரூ. இந்தியாவில் மூப்பியல் மருத்துவ துறை, முதன் முதலில் சென்னை அரசு மருத்துவமனையில்தான், 1978ல் துவக்கப்பட்டது. இந்தியவிலேயே முதன்முறையாக, டாக்டர் வ.செ. நடராஜன் தான் முதன் முதலில் மூபபியல் மருத்துவ துறையில் மேற்படிப்பு முடித்தவர். லண்டனில் சௌத் தாம்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் நடராஜன். முதலில் வெளி நோயாளிகள் பிரிவாக துவங்கப்பட்டு, 1988ல் படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, 2014ல் மண்டல முதியோர் […]

Read more

இனியவளே

இனியவளே, என்.சி.மோகன்தாஸ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. ‘இனியவளே வா… கால் சிலம்புகள் கண்ணகியிடமே இருக்கட்டும். கானல் வரிகள் கனவிலும் வேண்டாம். நாம் மூவரும் இணைந்து, இங்கே சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுதுவோம்’ என்று சொல்லும் மோகன்தாஸ், ஒரு அருமையான முக்கோணக் காதல் கதையை தந்திருக்கிறார். கோபியின் காதலி யாமினி. இருவரும் வேளாங்கண்ணிக்கு, சுற்றுலா செல்கின்றனர். ஒரு மழைநாளில் அவர்கள் முதலிரவு. இடி எனும் மேளதாளத்தோடு, மின்னல் தெறிக்கும் மத்தாப்போடு, காற்று எனும் சாமரத்தோடு, மழை எனும் அட்சதையோடு அங்கே நடந்து முடிகிறது. […]

Read more

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா!

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா!, பொறியாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், போர்வாள் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றுடன், அவர் முதல்வராக நிறைவேற்றிய சாதனைகளையும் சுருக்கமாக சொல்வது இந்த நூல். ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ எனும் அந்நாளைய ஆங்கில வார இதழில், ஜெயலலிதாவின் கட்டுரை வெளியானது முதல், திரைப்படங்களில் நடித்தது, அவரின் மொழிப்புலமை, பேச்சாற்றல், அரசியலுக்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டது என, ஜெயலலிதாவின் வாழ்க்கை சுவடுகளை எளிமையான நடையில் தந்துள்ளார், நூலாசிரியர். ஆணுக்கு பெண் சமம் என பேசப்படும் இந்த காலத்திலும், ஆணாதிக்கமே மிஞ்சியுள்ள நிலையில், […]

Read more

யுகாந்தா

யுகாந்தா, மராத்தி மூலம் ஜராவதி கார்வே, தமிழில் அழகிய சிங்கர், ஓரியன் பதிப்பகம். இவர்களைப்போல் பெண்கள் வாழக்கூடாது! ஜராவதி கார்வே, மராத்தியில் எழுதி ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பாகி உள்ள, ‘யுகாந்தா’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த நூலை, தமிழில் நானும் மொழி பெயர்த்துள்ளேன். ஓரியன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. மகாபாரதம், ராமாயணம் இரண்டும் இந்தியர்களின் மாபெரும் காப்பியங்கள். இந்த இரண்டிலும் வரும், பெண் கதாபாத்திரங்களைப் பற்றியதுதான், ‘யுகாந்தா’. இரு காப்பியங்களில் வரும் பெண்களின் […]

Read more

நடிப்பு

நடிப்பு (கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம்), மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 161, விலை 145ரூ. தமிழ் நவீன நாடகத் துறையில் தவிர்க்க முடியாத பெயர், மு. இராமசுவாமி. தான் அவ்வப்போது, அங்கங்கே எழுதிய சற்றே நீண்ட குறிப்புகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். வெற்றுக் குறிப்புகள் அல்ல. அத்தனையும் சுவாரசியம்! ஈ.வெ.ரா., தனிநாயக அடிகள் போன்ற ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள், நாடகம் தொடர்பான வரலாறு- நடப்புப் போக்குகள், நாடக ஆக்கம் பற்றிய அனுபவங்கள், தொட்டுக்கொள்ள கொஞ்சம் சினிமா […]

Read more

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும், க. விஜயகுமார், விஜயா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. லஞ்சம் எனும் அரக்கன் இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னையாக பயமுறுத்துவது லஞ்சமும், ஊழலும்தான். உண்மையில் லஞ்சம் என்பது தீர்க்க முடியாத பிரச்னையா, இதற்குக் காரணம் அரசும், அரசு சார்ந்த நிர்வாக அமைப்புகள் மட்டும்தானா? மக்களுக்க இதில் எந்தவிதமான பங்கும் இல்லையா எனப் பல கேள்விகள் எழுகின்றன. இப்படிப் பல கேள்விகளுக்கான விளக்கப் புத்தகமாக வெளிவந்துள்ளது க. விஜயகுமார் எழுதியிருக்கும் ‘லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்’ என்ற இந்தப் புத்தகம். லஞ்சம் […]

Read more

திருப்பல்லாண்டு வ்யாக்யானம்

பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ‘திருப்பல்லாண்டு வ்யாக்யானம்‘, தொகுப்பாசிரியர் அ. கிருஷ்ணமாச்சார்யர், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 155. நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு பெரியவாச் சான்பிள்ளை வியாக்யானம் அருளிச் செய்துள்ளார். அதில் உள்ள திருப்பல்லாண்டுக்கான வ்யாக்யானம் மட்டும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ என்று, முதல்பாட்டு தொடங்குகிறது. இப்பாடலுக்கு பதவுரை, அவதாரிகை, வ்யாக்யானம் என ஒவ்வொன்றும் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை. உச்சரிக்கும் சொல்லுக்குள்ள அர்த்தபேதங்களையும் (பொருள் வேறுபாடு) தனியாக எடுத்துரைக்கின்றார். இப்படியாக பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்… […]

Read more

வங்கமொழிச் சிறுகதைகள்,

வங்கமொழிச் சிறுகதைகள், தொகுப்பு 3, தொகுப்பாசிரியர் அஷ்ருகுமார் சிக்தார், தமிழில் பெ. பானுமதி, சாகித்திய அகாதெமி, பக். 576, விலை 400ரூ. மொத்தம் 28 சிறுகதைகள். மேற்கு வங்கத்தின் ரத்தமும் சதையுமாக! இந்தக் கதைகள் வங்காளிகளின் வாழ்க்கையை விரிவாகவும் ஆழமுமாகக் காட்டுகிறது. மேற்கு வங்க மாநிலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாகவே இருந்துள்ளது. இங்கே மாவோயிஸ்டுகளும் இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இங்கும் நகரம் இருக்கிறது. படிப்பறிவில்லாத கிராம மக்களும் இருக்கிறார்கள். இந்தத் தொகுப்பின் சில கதைகள் பொதுத்தன்மை கொண்டிருந்தாலும் […]

Read more

சப்தமில்லா சப்தம்

சப்தமில்லா சப்தம் (ஜென் கதைகள் குறித்த உரைகள்), ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. ஐந்து அற்புதமான ஜென் கதைகளின் மூலம் வெளிப்படும் ஓஷோவின் வாக்குகளே சப்தமில்லாமல் நம் இதயத்தை ஊடுருவிச் சென்று பலவித சப்தங்களை நம்முள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. ‘மனித அனுபவத்தில் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையிலான பாசம் கருணைக்கு நெருக்கமானது. மக்கள் அதை அன்பு என்கிறார்கள். அதை அப்படி அழைக்கலாகாது. அன்பைவிடவும் அது கருணைக்கு நெருக்கமானதாகக் காணப்படுகிறது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் தாயாகவே […]

Read more

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கா. அப்பாத்துரையார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 352, விலை 200ரூ. தமிழினத்தின் இணையில்லாப் பெருமையை, பண்பாட்டை, வரலாற்றை, இலக்கியப் பங்களிப்பை எடுத்துரைக்கிறது இந்நூல். தமிழகத்தின் நிலஇயல் பிரவுகள், வெளிநாட்டு வாணிகம், தமிழ்க்கிளை இனங்களும் கிளைகளும்,தமிழ்க் கவிஞர்களும் கவிதைகளும் என 16 தலைப்புகளிலான கட்டுரைகள் உள்ளன. கி.பி. 50க்கும் – கி.பி.150க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்ட மூவேந்தர்களையும், அவர்களில் கரிகாற்பெருவளவன், கிள்ளிவளவன், நெடுஞ்செழியன், பெருஞ்சேரல் இரும்பொறை உள்ளிட்டோரையும் குறித்துப் பேசுகின்றன, சேரர், பாண்டியர், சோழர் என்ற தலைப்பிலான மூன்று கட்டுரைகள். […]

Read more
1 5 6 7 8