அழுவதற்கா பிறந்தோம்?

அழுவதற்கா பிறந்தோம்?, புலவர் மு. சொக்கப்பன், உமா பதிப்பகம், பக். 104, விலை 100ரூ. புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மிகுந்த இக்கால கட்டத்தில் மரபுக் கவிதைகள் வாயிலாக கோலோச்சியிருக்கிறார் இக்கவிஞர். மரபுக் கவிதைகள் என்றாலும் பெண் சிசுக்கொலை, பெண்மை, புதுச்சட்டம் போன்ற புத்துலக கருத்துக்கள்தான் அதிகம். அதுவும் சொல்ல வந்ததை எழுச்சியுடன் வெண்பா வடிவிலும் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்த வடிவிலும் படிக்கப் படிக்க உற்சாகம் தரும் வகையில் உள்ளது. ‘துன்பத்தில் துவளாதிரு, உச்சத்தில் மமதை தவிர், மக்களில் பலருக்கு வாழ்வில்லை என்பது விதியெனில் அதை […]

Read more

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை

தமிழக ஜோக்ஸ் எழுத்தாளர்கள் ஒரு பார்வை, தொகுப்பு திருமயம் பெ. பாண்டியன், அட்டமா, பக். 72, விலை 40ரூ. கவலைகளை மறந்து சிரிக்கும் மனிதனுக்குத்தான் பல்வேறு வெற்றிகள் சாத்தியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த நோயற்ற வாழ்வுக்கு அடிகோலுவது மனமகிழ்ச்சிதான். இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் ஜோக்ஸ் இடம் பெறுகின்றன. அதைப் படிப்போர் மன நிம்மதியும் உற்சாகமும் அடைவது உறுதி. அப்படி மக்களை மகிழ்விக்கும் ஜோக்குகளை எழுதி அனுப்புவோர் எப்படி இருப்பார்கள், அவர்களின் பணி என்ன, அவர்கள் செய்து வரும் செயல்கள் எவை […]

Read more

சார்த்தா

சார்த்தா, கன்னடம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், பக். 408, விலை 300ரூ. “சார்த்தா‘’ – இந்த நாவல் ஒரு கற்பனைதான் என்றாலும் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வியாபாரம் செய்வதற்காக பொருள்களை ஏற்றிக்கொண்டு தொலைதூர நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்வதை சார்த்தா என்று சொல்வார்கள். நீண்ட நெடிய சரித்திரத்தின் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த அபூர்வமான சம்பவங்கள் உயிரோட்டமுள்ள நாவலாக மலர்ந்திருக்கிறது. கொள்ளை, வழிப்பறிகளுக்கு அஞ்சி அதற்கு தக்க காவல் மறவர்களின் துணையோடு வியாபாரம் […]

Read more

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள், பின்னலூர் மு.விவேகானந்தன், நர்மதா பதிப்பகம், பக். 304, விலை 150ரூ. வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றிய சிலர், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் ஏற்றம் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், இலக்கிய தமிழ், இலக்கணத்தமிழ், சங்கத்தமிழ், சமயத்தமிழ், அறிவியல் தமிழ், சட்டத்தமிழ், வரலாற்றுத் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பதிப்புத் தமிழ், ஆய்வுத் தமிழ் மொழியியல் ஆட்சித் தமிழ் முதலிய பல்வேறு தளங்களில் தமிழ் வளர அரும்பாடுபட்டவர்கள். அவர்களுள் 34 பேரைப் பற்றியும், அவர்கள் செய்த தமிழ்த்தொண்டுகளைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. சிறுகதையின் […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா. கணேசன், விகடன் பிரசுரம், பக். 216, விலை 160ரூ. இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் […]

Read more

லீ குவான்யூ, பெருந்தலைவன்

லீ குவான்யூ, பெருந்தலைவன். பி.எல். ராஜகோபாலன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 200ரூ. எதுவுமே இல்லை என்ற நிலையிலிருந்து எல்லாமே சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டியவர் லீ குவான்யூ. அவருடைய வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவுக்கு எளிமையும், சுவையும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது இந்நூல். 1959-இல் அவர் பிரதமராகப் பதவியேற்றபோது எதிர்கொண்ட சவால்கள், சூதாட்ட விடுதிகளை தொடங்க அனுமதி மறுத்தது, பொது இடங்களில் எச்சில் […]

Read more

பாரில் அதிசயம் பாரதி

பாரில் அதிசயம் பாரதி. சீனி.விசுவநாதன், பக்.288.  விலை ரூ.200. தமிழில் ஒரு கவிஞரைப் பற்றி அதிக நூல்கள் வெளிவந்திருக்கிறது என்றால், அது பாரதியாரைப் பற்றித்தான் இருக்கும். ஆயினும், ஒவ்வொரு நூலிலும் அவரைப் பற்றி அறியப்படாத செய்திகள் ஒரு சிலவாவது இடம் பெற்றுக் கொண்டே இருப்பது வியப்பானதுதான். இந்த நூலில் “அறிதொறும் அறியாமை’ சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்நூலை எழுதியிருப்பவர் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து பாரதி ஆய்வில் ஈடுபட்டுவரும் சீனி.விசுவநாதன் என்பதுதான் (பாரதியின் எழுத்துகள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து 16 தொகுதிகளாக […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், பக்.216, விலை .ரூ.160; இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியது, […]

Read more

தினமணியின் தமிழ்ப்பணி

தினமணியின் தமிழ்ப்பணி, பதிப்பாசிரியர்: கு.வெங்கடேசன், டுடே பப்ளிகேஷன்ஸ், பக்.122, விலை ரூ.100. தினமணியின் தமிழ்ப் பணி என்பது நூலின் தலைப்பாக இருந்தாலும், தினமணி நாளிதழ் மற்றும் இணைப்புகளில் வெளிவரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. பதிப்பாசிரியர் கு.வெங்கடேசன் உட்பட எழுவர் எழுதிய 13 கட்டுரைகளின் தொகுப்பு இது. தற்கால தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு தினமணி எவ்வாறு உதவுகிறது? தமிழ்மணியின் சொல்தேடலும், சொல்புதிதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியவிதம், தமிழ்மணியில் இடம் பெற்ற பழந்தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளின் சிறப்பு என தினமணியின் தமிழ்ப்பணியை விரிவாக இந்நூல் […]

Read more

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த ஆய்வு […]

Read more
1 3 4 5 6 7