பறவையியல்

பறவையியல், வ.கோகுலா & சி.காந்தி, ஜாஸிம் பதிப்பகம், விலை 300ரூ. தமிழ்ச் சூழலில் அறிவியல் சார்ந்த படைப்புகள் கணிசமாக இருந்தாலும் பறவையியல் குறித்த படைப்புகள் பெருவாரியாக இல்லை என்பதே உண்மை. சமீபகாலமாகத்தான் பறவைகள் தொடர்பான புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் புத்தகமும் சேர்ந்துள்ளது. பறவைகளின் உடற்கூறு பற்றி சற்று விரிவாகப் பேசுகிறது இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பனை மரமே பனை மரமே

பனை மரமே பனை மரமே, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை 425ரூ. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள் வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

அனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள்

அனைத்து நோய் தீர்க்கும் 50 யோசனைகள், பி.கிருஷ்ணன் பாலாஜி, ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி, விலை 300ரூ. ஆரோக்கியமா வாழ யோகாசனங்கள் உதவுகின்றன. அனைத்து வகையான நோய்களைத் தீர்க்க உதவும் 50 யோகாசனங்கள் பற்றி படங்களுடன் இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

புத்தரின் போதனைகள் தீக நிகாயம்

புத்தரின் போதனைகள் தீக நிகாயம், பிக்கு போதிபால மகாதேரோ மற்றும் திரிபீடகத் தமிழாக்கக் குழுவினர், திரிபிடகக் குழுவினர், விலை 500ரூ. புத்தர் பெருமாள் 84ஆயிரம் போதனைகளைத் தமது தாய் மொழியான பாலி மொழியில் சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதித்துள்ளார். இது காலப்போக்கில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. தொடர்ந்து 21-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் மொழியிலும் வெளிவரத் தொடங்கி உள்ளது. அதனுடைய முதல்நூல்தான் இது. இதில் ஒழுக்கவியல் மற்றும் பெரும் இயல் கீழ் 34 பிரிவுகளில் புத்தரின் போதனைகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் […]

Read more

தமிழ்ச்சிப்பி

தமிழ்ச்சிப்பி, முனைவர் இரா.சம்பத், ஜெ.கலைவாணி, ஆர்.அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம், விலை 500ரூ. “ஆர்” அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம் நடத்திய 13வது பன்னாட்டுக் கருத்தரங்கில் பல தமிழறிஞர்கள் பங்கு கொண்டு, இலக்கியத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிறந்த இலக்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

மூட்டு வலிக்கான சிகிச்சை முறைகள்

மூட்டு வலிக்கான சிகிச்சை முறைகள், பாலா வெங்கட், அருண் நிலையம், விலை 30ரூ. மூட்டு வலிக்கான சிகிச்சை முறைகள் குறித்து நூல் ஆசிரியர் அறிந்ததையும், மருத்துவர்களிடம் கேட்டு அறிந்ததையும் நூலாக வடித்துள்ளார். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இவற்றில் தங்களுக்கு ஏற்ற முறையினை பயன்பற்றி பயன் பெறலாம். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்,  ஓ.பாலகிருஷ்ணன், அய்யா நிலையம்,  பக். 136, விலை ரூ.130. சாதாரண மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்க, வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பவை நாட்டுப்புற இலக்கியங்கள். மன்னரின் மகளாக, மன்னரின் மனைவியாக இருந்த நல்லதங்காளின் வாழ்க்கைக் கதை என்றாலும், சாதாரண மக்களின் வாழ்க்கையையே நல்லதங்காள் கதைப்பாடல் சொல்கிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் மழை பெய்யாததால், பஞ்சம் ஏற்பட்டு, இருக்கும் பொருட்களை எல்லாம் விற்றுத் தின்று, இனி கூலி வேலை செய்தாவது பிழைப்போம் என்றநிலை மன்னர் குடும்பத்துக்கு வர வாய்ப்பில்லை. தனது […]

Read more

சொல்லி முடியாதவை

சொல்லி முடியாதவை,  ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம்,  பக். 160, விலை ரூ.180. நூலாசிரியர் தன் நண்பர்கள், வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த 27 கட்டுரைகளின் தொகுப்பு. ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகளைக் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? கற்பு என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? காதலர் தினக் கொண்டாட்டம் தேவையா? தீபாவளி யாருடையது? உள்ளிட்ட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன. நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி கொண்டு தன் வாழ்க்கையைத் தானே […]

Read more

குமரி நாட்டில் சமணம் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி

குமரி நாட்டில் சமணம் – தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி, சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.615, விலைரூ.650. தமிழகத்தின் பழங்கால சமயங்களில் சமணமும் ஒன்று. சமண சமயத்தைச் சேர்ந்த அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிர், அருவாளர்களோடு தென்னகத்திற்கு வந்து, காடுகளை அழித்து நாடுகளாக்கி மக்களைக் குடியேற்றினார் என்பதும், வடக்கிலிருந்து பத்திரபாகு என்ற சமண முனிவர் மைசூர் நாட்டில் உள்ள சிரவணபௌகெள குகையில் தங்கி, அவருடைய சீடரான விசாக முனிவரை சமண மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதும் சமண மதம் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்தது என்பதையே சொல்கின்றன. […]

Read more

பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி

பத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி, கெ.இரவி, நிலாசூரியன் பதிப்பகம், பக்.280, விலை ரூ.200. ஏதேனும் ஓர் இலக்கை எடுத்துரைப்பது இலக்கியம் எனப்படும். மனித உள்ளத்தின் தன்மைகளை எடுத்துரைப்பது உளவியல் எனப்படும். ஆளுமை என்பதை, ஆங்கிலத்தில் பர்சனாலிட்டி என்று கூறுவர். இது, தனி மனிதனது உடல் தோற்றம், பேசுவது, உடுப்பது, பழகுவது, அறிவாற்றல், குணங்கள், பண்புகள் முதலியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இம்மூன்றையும் விரிவாக விளக்குகிறது இந்நூல். சங்க இலக்கியங்களை உளவியல் இலக்கியம் என்கிறார் தமிழண்ணல். அந்த வகையில் இலக்கியமும் உளவியலும் நெருங்கிய தொடர்புடையவை. இலக்கியத்தில் உள்ள ஆளுமை […]

Read more
1 2 3 4 8