ஆன்மிகம் அறிவோமா

ஆன்மிகம் அறிவோமா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 60, விலை 60ரூ. மனிதர்களுக்கும், மகான்களுக்கும் என்ன வித்தியாசம்? தமக்கு மேலே இருக்கிறவர்களையே எப்போதும் மனிதர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்… ‘அவர்களைப் போல் ஆவது எப்போது?’ என்கிற ஆசையில்! தமக்கு கீழே இருக்கிறவர்களையே எப்போதும் மகான்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்… ‘அவர்களும் நம்மைப் போல் ஆவது எப்போது?’ என்கிற அக்கறையில்! அந்த வகையில், நல்வாழ்விற்கு மகான்கள் காட்டிய பாதை இரண்டு. ஒன்று ஆன்மிகம்; இன்னொன்று நற்பண்பு. இவை இரண்டும் ஒரே புள்ளியில் இணையும் இரு கோடுகள். […]

Read more

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல், இரெ.குமரன், காவ்யா, பக்.316, விலை ரூ.300. இன்று அறிவியல் வெகுவாக முன்னேறிவிட்டது. நாள்தோறும் புதுபுதுக் கண்டுபிடிப்புகளால் உலகம் நிரம்பி வழிகிறது. நமது பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் பல கருத்துகள் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளோடு வியக்கத்தக்க வகையில் ஒத்துப் போவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. சூரியக் குடும்பத்தைப் பற்றி இன்றைய அறிவயில் கூறும் கருத்துகளை உறையூர் முதுகண்ணன் சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல், "வாணிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு' என்ற சிறுபாணாற்றுப் படை பாடல்கள் கூறியிருப்பது வியப்பூட்டுகிறது. தாய்ப்பால் தருவதின் […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், தொகுதி 1, பக்.416, தொகுதி 2, பக்.448, தொகுதி 3, பக்.288, தொகுதி 4, பக்.496, மொத்த பக். 1,648, நான்கு தொகுதிகளும் சேர்த்து ரூ.1,200. அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே என்கிறார் மாமேகம் சரணம் (வ்ரஜ – பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி முதலிய சிற்றிலக்கிய […]

Read more

நானும் சினிமாவும்

நானும் சினிமாவும், ஏவி.எம். சரவணன், தினத்தந்தி பதிப்பகம், பக்.416, விலை ரூ.250. திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனின் 60 ஆண்டு கால திரையுலக அனுபவங்களுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு மகா விருட்சம் அதன் ஆணிவேரிலிருந்து தொடங்குவதைப் போல், தன் தந்தையார் ஏவி.மெய்யப்பனின் குழந்தைப் பருவத்திலிருந்து இந்த நூலைத் தொடங்கியிருப்பது சிறப்பு. திரையுலகில் சகாப்தம் படைத்த ஏவி.எம். நிறுவனம் உதயமானது முதல், அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒவ்வொரு படத்திலும் கிடைத்த விதவிதமான அனுபவங்களின் தொகுப்பு, விறுவிறுப்பானதொரு நாவலைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் […]

Read more

எம்டன் செல்வரத்தினம்

எம்டன் செல்வரத்தினம், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை 140ரூ. சென்னையர் கதைகள் சென்னை தினத்தை முன்னிட்டு, 2017ம் ஆண்டு நடத்திய, ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு தான், ‘எம்டன் செல்வரத்தினம்!’ முதல் பரிசுக் கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் இருக்கிறது. கடந்த, 1914ம் ஆண்டு ஜெர்மானியக் கப்பல் எம்டன் மதராஸ் மீது குண்டு வீசிய தருணத்தை கற்பனை கலந்து கொஞ்சமும் உறுத்தாமல் வரலாற்றுக் கோணத்தில் விவரித்துப் பார்க்கும் கதை. 68, லாயிட்ஸ் ரோடு வாசலில் விரியும் ராயப்பேட்டை வீடு. காமத்தை […]

Read more

கழகத் தமிழ் இலக்கணம்

கழகத் தமிழ் இலக்கணம், கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., பக்.352. விலை ரூ.265. மொழியின் தன்மையை வரையறுத்துக் கூறுவது இலக்கணம் ஆகும். ஒரு மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் இலக்கணம் பயில்வது அவசியமாகும். அந்த வகையில் இந்நூல் தமிழ் மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் உதவும்விதத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து பயிலும் மாணவர்கள் கூட இலக்கணம் என்றாலே சிறிது தயக்கம் கொள்வர். இந்நூலில் எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி ஆகிய ஐந்து இலக்கணங்களும் இன்றைய தலைமுறை மாணவர்கள் புரிந்துகொள்ளும் […]

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.172, விலை ரூ.160.  ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. மனித வாழ்வின் சாராம்சத்தை உயிர்ப்பு மிக்க அனுபவங்களினூடே பிழிந்து தருபவை. அந்த வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள ‘நான் இருக்கிறேன்’ சிறுகதையையும் சொல்லலாம். தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர், வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறார். கால்களில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும்போது அவரைத் தடுத்து மீட்கிற பிச்சைக்காரர், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மாற்றுத்திறனாளிக்கு உருவாக்குகிறார். ஆனால் […]

Read more

சாஅய்

  சாஅய், சாமானியன், சந்தியா பதிப்பகம், விலை 95ரூ. கவனம்கோரும் கவிதை கோ.சாமானியன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பு சாஅய். பட்டினியில் இருக்கும் மனிதனுக்கு கடவுள் மேல் எழும் தார்மீகக் கோபம், கணேஷ் பீடியும் கடன் தொல்லையுமாய் தெருக்கூத்தில் ராஜா வேஷம் கட்டும் கலைஞனின் வறுமை, தமிழர்களை சக அடிமைகள் என விளிக்கும் அறச்சீற்றம் என ஆரம்பநிலைக் கவிஞர்களின் முதல் தொகுப்பில் இருக்கும் சமூகக் கோபமும் அதே அளவிலான சமூக அக்கறையும் நிறைந்த தொகுப்புதான் இது. முதல் தொகுப்பிலேயே கவனம் ஈர்க்கும் கவிஞராக இருப்பதால் […]

Read more

காச்சர் கோச்சர்

காச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. நகர வாழ்நிலை பட்டம்விடும் நூல் உருண்டைகள் சிக்கிக் கொண்டதை சிறுவன், ‘கோச்சர் காச்சர் ஆயிருச்சு’ என்கிறான். நகரவாழ்வின் இத்தகு சிக்கல்களைப் பேசும் கன்னட நாவலே ‘காச்சர் கோச்சர்’ இதை எழுதிய பொறியியலாளர் விவேக் ஷான்பாக். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன். புதுமையையும் எளிமையையும் குழைத்து எழுதியிருக்கிறார். பெங்களூரின் பழைய காப்பி ஹௌஸ் கம்பாரில் கதை துவங்குகிறது. சோம்பேறியான பணக்கார இளைஞனே கதை சொல்லி. முதல் காட்சியிலேயே ஓர் இளம்பெண் கோபத்தில் தண்ணீர் கிளாஸையெடுத்துத் தன் நண்பன் […]

Read more

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, சு.தியோடர் பாஸ்கரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ. மனிதனின் தோழர்கள் இந்தியாவின் நாய் வகைகள் பற்றிய நல்ல அறிமுகம் தரும் நூல் இது. ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி என்கிற தமிழ்நாட்டு வேட்டை நாய்கள் பற்றியும் முதோல், கேரவான், இமாலய மாஸ்டிஃப், இமாலய மேய்ப்பு நாய், கூச்சி, புல்லிகுட்டா, சிந்தி, பக்கர்வால், பட்டி போன்ற பயன்பாட்டு நாய்கள், லாசா ஆப்சோ, திபெத்திய ஸ்பேனியேல், திபெத்திய டெர்ரியர் ஆகிய துணைநாய்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் நாய்கள் வளர்ப்பு பற்றிய […]

Read more
1 5 6 7 8 9