தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ. தெரியாத விஷயம் எல்லாம் தமிழ் சினிமாவின் பழைய சங்கதிகள்தான். சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சுவாரசியமான சாற்றின் துளிகள்தான். ஆனால் மரணமசாலா எழுத்தைக் கடைப்பிடிப்பதில் நிபுணரான பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் கைவண்ணத்தில் எடுத்தால் வைக்கவே முடியாத விதத்தில் எழுதப்பட்டிருக்கும் நூல்தான் தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் ஆரம்ப கட்டம், தோல்வியிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், சறுக்கி விழுந்து காணாமல் போன நொடிகள் என எதெல்லாம் படிக்க ஆர்வமாக […]

Read more

ஜென் வெளிச்சம்

ஜென் வெளிச்சம், பூ சுன் ஜியாங், கண்ணதாசன் பதிப்பகம் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல ஜென் தத்துவங்களை, எளிமையாகப் புரியும்படி காமிக்ஸ் வடிவில், தெளிவான மொழிநடையில், சரியாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட புத்தகம் இது. தத்துவங்கள் என்றில்லாமல், கதையாகப் படித்தாலும், ஒரு அழகான சிறுகதைத் தொகுப்பாக இருக்கும். அனைத்துக் கதைகளுமே ஓரிரண்டு பக்கங்களில் இருப்பதால், வாசிக்க எளிமையாக இருக்கிறது. http://இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் – 044-49595818 http://இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 நன்றி: தி […]

Read more

இயந்திரத் தலை மனிதர்கள்

இயந்திரத் தலை மனிதர்கள், முல்லை தங்கராசன், முத்து காமிக்ஸ். தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகன் முல்லை தங்கராசனின் கை வண்ணத்தில், மத்த பத்திரிகையாளர் காமராஜின் மொழிபெயர்ப்பில், சௌந்தரபாண்டியன் உருவாக்கிய முத்து காமிக்ஸ் இதழின் மறுபதிப்பு இது. இரும்புக் கை மாயாவியின் சாகசங்கள் மறுபதிப்பு செய்யும்போது, கொஞ்சம் கிளாசிக் தன்மையை இழந்திருந்தாலும் பழைய வாசகர்களின் பாலைவனச் சொர்க்கம் அதுதான். http://இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் – 044-49595818 நன்றி: தி இந்து, 22/1/2018.

Read more

ஈரான்

ஈரான் (குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்), மர்ஜானே சத்ரபி, விடியல் பதிப்பகம், விலை 100ரூ. உலகப் புகழ்பெற்ற படைப்பாளியான மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல்களான இந்த இரண்டுமே திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மொழிபெயர்ப்பில் ஓரிரு இடர்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமான கலைப்படைப்பு என்ற பார்வையில், தமிழில் நீங்கா இடம்பிடிக்கும் புத்தகங்கள் இவை. http://இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் – 044-49595818 நன்றி: தி இந்து, 22/1/2018.

Read more

வேங்கடம் முதல் குமரி வரை

வேங்கடம் முதல் குமரி வரை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், சந்தியா பதிப்பகம், விலை 600ரூ. தமிழகக் கோயில்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்று, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் ‘வேங்கடம் முதல் குமரி வரை’. பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே,காவிரிக் கரையிலே, பொருநைத் துறையிலே என்ற தலைப்புகளில் ஐந்து பாகங்களாக இந்நூலில் வெளிவந்தது. வடநாட்டுக் கோயில்களைப் பற்றி, ‘வடவேங்கடத்துக்கு அப்பால்’ என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார் பாஸ்கரத் தொண்டைமான். வேங்கடம் முதல் குமரி வரையின் ஐந்து பாகங்களையும் ஒரே தொகுப்பாக சந்தியா பதிப்பகம் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார்

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார், சுவாமி கமலாத்மனாந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. இந்திய தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம், சமய சமரசம், பெண்களின் மேன்மை போன்றவற்றில் சுவாமி விவேகானந்தருக்கும் மகாகவி பாரதியாருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பல மேற்கோள்களுடன் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் பற்றி பாரதியார் எழுதிய பல கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய அவரது ஆங்கில கட்டுரைகளும் இதில், இடம் பெற்றுள்ளன. விவேகானந்தர் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் பாரதியார் வெளியிட்ட 75 மேற்கோள்கள், பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் […]

Read more

ஞானாமிர்தம்

ஞானாமிர்தம், ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலை 650ரூ. திருவொற்றியூரில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாகீச முனிவர், சைவ சித்தாந்த கொள்கைகளை விளக்கி எழுதிய நூல் ஞானாமிர்தம். இதில் உள்ள 75 பாடல்களில் காணப்படும் கடினமான அத்தனை வார்த்தைகளுக்கும் எளிய பதவுரை, மற்றும் விளக்கவுரை, தொகுப்பு உரை ஆகியவற்றுடன் அந்தப் பாடல்களில் உள்ள ஆழ்ந்த தத்துவங்களை விளக்கமாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான ஆன்மா, இறைவன், பாசம் ஆகியவற்றை பல்வேறு இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களை மேற்கோள் காட்டி விளக்கமாகத் தந்து இருப்பது […]

Read more

அன்புள்ள மாணவனே

அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 135ரூ. தனி மனிதரிடையே ஒளிந்திருக்கும் முழுத்திறன்களை வளர்த்தெடுப்பதும், அதைச் சமுதாயத்தின் நலனுக்கும் பயன்பெற வைப்பதுமே கல்வியின் இலக்குகளாகும். அந்த வகையில் கல்வியின் உன்னதம் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு மாணவர்களோடு அறிவார்ந்த அற்புதமான உரையாடலை நிகழ்த்தி இருக்கிறார். அவர் மாணவர்களுக்கு எழுதிய 30 மடல்களின் தொகுப்பே இந்நூல். ‘குழந்தைகளை வளர்ப்பது பெரிது அன்று. அவர்களது அறிவை வளர்ப்பதே அதை விடப் பெரிது ‘நீ மகத்தான ஆற்றலாக உருவாவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறாய். அற்ப […]

Read more

உச்சியிலிருந்து தொடங்கு

உச்சியிலிருந்து தொடங்கு, வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை175ரூ. தினந்தோறும் காலையில் எந்தச் செய்தித்தாளைப் படித்தாலும் அதில் ஏதாவது ஒரு தற்கொலைச் செய்தி இடம் பெற்றுவிடும். அண்மையில் ‘புளுவேல்’ விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் தற்கொலை செய்த செய்திகளைப் படித்தபோது நெஞ்சம் பதறியது. மனிதன் என்றால் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் இதைப் போராடி வெற்றிக்கொள்வதே வாழ்க்கை. தற்கொலை எண்ணத்தில் இருந்து மனித குலம் மீட்சியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான, பேச்சாளருமான வெ.இறையன்பு இந்த நூலை எல்லோருக்கும் புரியும் […]

Read more

பொய் வழக்கும் போராட்டமும்

பொய் வழக்கும் போராட்டமும், பெ. சிவசுப்பிரமணியன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 395ரூ. சந்தன கடத்தல் வீரப்பன் வழக்கு தொடர்பாக தமிழக கர்நாடக அதிரடிப்படையின் அடக்குமுறைகளை எதிர்கொண்ட நக்கீரன் செய்தியாளரும், நூலாசிரியருமான பெ.சிவசுப்பிரமணியன் தான் சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட சிறைக்குறிப்புகள் அடங்கிய நூல். வண்ணபுகைப்படங்களுடன் 51 தலைப்புகளில் பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026649.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: தினத்தந்தி, 21/2/2018.

Read more
1 6 7 8 9