எல்லோரும் நலம் வாழ

எல்லோரும் நலம் வாழ, தொகுப்பாசிரியர் பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 170ரூ. கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களது சிந்தனையில் விளைந்த கவிதை மலர்களில் இருந்து, தேன் துளிகள்போல் தேர்ந்தெடுத்துக் கோத்திட்ட கவிதைகளின் தொகுப்பு நூல். நகைச்சுவை இழையோடுவது, வாசிப்பை நேசிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026610.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும்

ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும், கி.நெடுஞ்செழியன், வளர்மதி பதிப்பகம், விலை 200ரூ. மயிலாடுதுறையில் வழக்குரைஞராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், ‘தமிழ்மாமணி’ விருதும், ‘கரைகண்டம்’ என்ற புனைப்பெயரும் பெற்றவர். இவர் தமிழில் கரை காண முயற்சித்திருப்பது இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் தமிழ்க் கடைச்சங்கம் தோன்றிய காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்கள் பல. அவற்றில் ஐம்பெருங்காப்பியங்களும் உண்டு. அதில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகியவை சமணக் காப்பியங்கள் என்றும், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பௌத்த காப்பியங்கள் என்றும் கூறப்படுவதுண்டு. இக்காப்பியங்கள் அச்சமயக் கொள்கைகளைப் போதிப்பதில்லை. […]

Read more

திறந்த புத்தகம்

  திறந்த புத்தகம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 211, விலை 170ரூ. திறந்த புத்தகம் என்னும் இந்நுால், முகநுாலில் எழுதிய, 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. ‘அப்பாவும் நானும்’ எனும் கட்டுரையில், அப்பா இருக்கும் அறையில் தான், நான் புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டிருப்பேன். ‘என் அறை என்று தான் பேர்; ஆனா, உன் புத்தகங்கள் தான் இருக்கு’ என்று கோபமாக முணுமுணுப்பார் என்று குறிப்பிட்டிருப்பது, இந்நுாலின் ஆசிரியர் பல நுால்களை படிக்கும் வழக்கத்தை கொண்டவர் என்பது தெரிகிறது. நன்றி:தினமலர், 25/3/2018

Read more

என்னை நான் சந்தித்தேன்

என்னை நான் சந்தித்தேன், ராஜேஷ்குமார், அமராவதி, விலை 390ரூ. 1500 நாவல்களுக்கும், 2000 சிறுகதைகளும் எழுதி சாதனை படைத்தவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். கிரைம் கதைகள் எழுதுவதில் மன்னர். அவர் தன் அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகம்தான் “என்னை நான் சந்தித்தேன்”, பெரும்பாலான வாழ்க்கை வரலாறு நூல்கள் சுவையாக அமைவது இல்லை. இந்தப் புத்தகம் அதற்கு விதிவிலக்கு. அவருடைய நாவல்கள் போல் இதுவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் சினிமாக்காரர்களிடம் மாட்டிக்கொண்டு இவர் பட்ட அவஸ்தையை நகைச்சுவையுடன் எழுதி, நம்மை சிரிக்க வைக்கிறார். எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய […]

Read more

கண்ணன் வருவான்

கண்ணன் வருவான், இந்திரா சவுந்தராஜன், திருமகள் நிலையம், விலை 250ரூ. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்தும் வேளையில் அவர்களுக்கு கிருஷ்ணரின் பெருமைகளை விளக்கிக் கூறும் வகையில், கிருஷ்ணரின் வரலாறும் அவரது அவதார மகிமைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. எழுதியவர் இந்திரா சவுந்தரராஜன் என்பதால் இந்த வரலாற்றை விறுவிறுப்பான நாவல் போல சுவைபடத் தந்துள்ளார். கிருஷ்ணரையும், துவாரகையையும் அழிக்க வந்த சால்வனின் சம்ஹாரம் வரை உள்ள வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ள இந்த நூலில், ஆன்மிகக் கருத்துக்களை ஆங்காங்கே அருமையான விளக்கங்களுடன் தந்து இருப்பது சிறப்பு. இந்தப் புத்தகத்தை […]

Read more

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், விலை 275ரூ. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் ராமரின் வரலாறு பலராலும் பலவிதங்களில் பாராட்டப்பட்டுள்ளது. அவற்றில் வால்மீகி முனிவர் தந்த ராமாயணத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. அதில் உள்ள காவிய நயத்தைப் போற்றியபடி ராம காவியத்தைத் தந்து இருக்கிறார் பாலகுமாரன். படிப்பதற்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, துளசிதாசர், கம்பர், அருணாசலக்கவிராயர் ஆகியோர் வழங்கிய ராம காதைகளில் உள்ள சிறப்புக்களையும் இந்த நூலில் தொட்டுக்காட்டி இருப்பது சிறப்பு. அயோத்தியா காண்டம் வரை சொல்லப்பட்டுள்ள இந்த […]

Read more

ரூபாய் நோட்டுக்கள் தடை

ரூபாய் நோட்டுக்கள் தடை, எஸ்.குருமூர்த்தி, அல்லயன்ஸ், பக். 160, விலை 120ரூ. நோட்டுத் தடை ஓர் ஆய்வு, தெருச் சண்டையான நோட்டுத் தடை விவாதம், வளைக்கப்பட்ட, 3.35 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம், நோட்டுத் தடையால் ஏற்பட்டு இருக்கும் நல்ல மாற்றங்கள், பொருளாதாரத்தை மீட்கும் மிகப்பெரிய முயற்சி உள்ளிட்டவை, ‘நிதித் துறைக்கான பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு போல’ தேசத்தையே வியப்பில் ஆழ்த்தியது. நோட்டுத் தடை சரித்திரத்தில் இடம்பெறும் பெரிய பொருளாதார புரட்சி என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026658.html இந்தப் […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்கு பதிப்பகம், விலை 350ரூ. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் நன்மைகளை பாராட்டும் நூல்கள் பல இருக்கின்றன. ஆனால் காலனி ஆதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும், இந்தத் தேசத்தை எப்படி பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூல் நம்முடைய கடந்த காலம் குறித்த பிழையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கிய ஆவணமாகவே இருக்கிறது. ஜாலியன் […]

Read more

எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்

  எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம், மேன்மை வெளியீடு, விலை 150ரூ. தமிழ்த்திரை உலகின், நகைச்சுவை நடிப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொடிகட்டிப் பறந்தபோது, அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவர், காளி என்.ரத்தினம். என்.எஸ்.கிருஷ்ணன் நடிப்பில் நவீனம் கலந்திருக்கும். காளி என்.ரத்தினத்தின் நகைச்சுவையில் முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும். “கிராமிய கலையில் அண்ணன் (காளி என்.ரத்தினம்) பெரிய மாஸ்டர்” என்று கலைவாணர் பாராட்டியுள்ளார். நாடகத்திலும், சினிமாவிலும் நடிப்பதற்கு எம்.ஜி.ஆருக்கு பயிற்சி அளித்ததுடன், அத்துறைகளில் அவர் கால் பதிக்க வழிவகுத்தவர் காளி என்.ரத்தினம்தான். அவருடைய […]

Read more

அவரும் நானும்

அவரும் நானும், துர்கா ஸ்டாலின், உயிர்மை பதிப்பகம், விலை800ரூ. ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அதேபோன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு பின்னால் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் இருப்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது. மனைவி சிறப்பாக இருந்தால் வீடு சிறப்பு பெறும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்து வரும் நூலாசிரியரின் மறக்க முடியாத மனப்பதிவுகளை அபூர்வ புகைப்படங்களுடன் இந்த நூல் சித்தரிக்கிறது. ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக் கூடிய நெருக்கடிகள், சவால்கள், சோதனையான […]

Read more
1 3 4 5 6 7 9