கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்

கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம், சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், விலை 200ரூ. அக்காலம் மட்டுமல்ல; எக்காலத்திலும் சிறுவர்களுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய இளமைப்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான். இளமைப் பருவத்தில் கதை கேட்பதும், அக்கதையினுாடே பேசும் விலங்குகள், பறவைகள், தேவலோகம், தேவதைகள், அசுரர்கள் எனக் கற்பனை உலகில் மிதப்பதும் இனிமையான கனாக்காலம். உலக இயலைத் தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து மீள்வதற்கும், வாழ்க்கைச் சூழலில் […]

Read more

நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள்

நகரத்தார் மரபு காக்கும் மங்கையர்கள், எம்.வள்ளிக்கண்ணு, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு – நகரத்தார் கோவில் – ஆண்களின் பெருமை – பெண்களின் சிறப்பு – நகரத்தார் வீட்டின் அமைப்பு – நகரத்தார் உறவு முறைகள் – நகரத்தார் திருமண முறைகள் – மருந்து அல்லது தீர்த்தம் குடித்தல் – நகரத்தார் பெயர் சூட்டும் முறைகள் – நகரத்தார் உணவு முறைகள் போன்ற தலைப்புகளில் நகரத்தார் பெண்களின் சிறப்பைப் பேசுகிறார் ஆசிரியை. நகரத்தார் மரபைச் சேர்ந்த பெண்கள், சம்பிரதாய முறைகளை […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், டி.கே.எஸ்.கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழகத்தில் அவ்வையார் என்றால் டி.கே.ஷண்முகம். டி.கே.ஷண்முகம் என்றால் அவ்வையார் என்று மிக ரத்தினச் சுருக்கமாக, ராஜாஜியால் பாராட்டப்பட்டவர், தமிழ் நாடக மேடையில், அந்த காலத்தில் ஆண்கள், பெண் வேடம் தரித்து நடிப்பது வழக்கமானது தான். ஆனால், வயதில் மிக இளைஞரான, டி.கே.எஸ்., வயது முதிர்ந்த அவ்வை பாட்டியாக வேடம் தரித்து, அதே குரலில் பேசி நடித்த பாங்கு, அவருக்கு அளவில்லாத புகழை ஈட்டித் தந்திருக்கிறது. டி.கே.எஸ்.,சின் நாடக வாழ்க்கை, ஆறு வயதிலேயே […]

Read more

திக்… திக்… பயணம்

திக்… திக்… பயணம், சி.வீராகு, கைத்தடி பதிப்பகம், விலை 110ரூ. உலகம் ஒரு நதியின் கிளைகள் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவை கற்றுத் தரும் பாடத்தை மதங்கள் பற்றிக் கொண்டால், மனித நேயம் மனங்களோடு பேசி அன்பை போதிக்கும். வர்ணனை ஜாலங்களை துாக்கிக் கொண்டு போலி சுருதி சேர்க்காமல், கிராமத்து மெட்டு போல எதார்த்த மொழியில் வீரரகு புனைந்திருக்கும் இந்நுால், ஆன்மிகத்தின் வாயிலாக அழகிய காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து, பிற மதத்தினரை ரசிக்க வைத்துள்ளது. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் […]

Read more

ஏறு தழுவுதல்

ஏறு தழுவுதல், கவிஞர் அ.முத்துவேலன், வசந்தா பதிப்பகம், விலை 90ரூ. இந்நுாலில், இறந்தபட்ட காளைக்கும், வீர விளையாட்டு நிகழ்வுகளில் பல்வேறு திறன் கொண்ட காளைகளை அடக்கிய மானுடக் காளையின் மரணம் குறித்தும், ‘தாலிக்கயிறு உமக்கு… தாம்புக்கயிறு எமக்கென்று…’ என்ற கவிதை வரி, தன்னை வளர்த்த பெண்ணிடம், முல்லை நிலக் காளை கூறுவதாக அமைந்துள்ளது. ‘கரந்தை வீரர் நடுகல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, அடலேறே மடலேறு’ உள்ளிட்ட கவிதைகள் ஆற்றுநீராய் பெருக்கெடுத்து, இந்நுாலுக்கு வளம் சேர்க்கின்றன. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு, டாக்டர் சு.திருத்தணிகாசலம், ரத்னா பப்ளிகேஷன், விலை 599ரூ. சிந்துவெளி நாகரிகம் ஆரியர்கள் உருவாக்கியதா? சிந்துவில் தமிழர்களின் உன்னத வாழ்க்கை, உலகின் முதல் நகர நாகரிகம், ஜல்லிக்கட்டு, இன்றும் தமிழ் ஊர் பெயர்கள், கீழடியில் தொன்மை நாகரிகம், ஆதிச்சநல்லுாரில் அற்புதம் நிகழ்த்திய தமிழர்கள். கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் முன்னோடி, கொற்கை துறைமுகம், ஆயிரக்கணக்கான போர்க்கப்பல்கள் உள்ளிட்ட காணக் கிடைக்காத அரிய செய்திகள் இந்நுாலில் பொதிந்து கிடக்கின்றன. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027083.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

உலோகம் உரைக்கும் கதைகள்

உலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ. உலோகம் உரைக்கும் கதைகள் என்ற இந்நுால், பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதல்வர் மொழிபெயர்த்த நுாலாகும். ‘TILES ABOUT METAL’ என்ற நுாலின் தமிழ் வடிவம். படிப்பதற்கு ஏற்றதாய் தெளிவான எளிய நடையில் இந்நுால் உருவாகியிருக்கிறது. உலோகங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியுள்ள சிறப்பு பாராட்டக் கூடியது. என்றாலும் அதை புரிந்து கொள்வதற்கு சற்றே சிரமப்பட வேண்டியிருக்கிறது. சான்றாக, இலிதியம், மகனிச்சயம், ஏலமினியம், கோபாலது, துங்கஸ்டன், பீலாதினம் என்பன. 16 உலோகங்களைப் பற்றிய தகவல் […]

Read more

மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,

மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,  மறை.தி.தாயுமானவன், மறைமலையடிகள் பதிப்பகம், பக்.272, விலை ரூ.350. நூலாசிரியர் மறைமலையடிகளின் பெயரன். மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் சுருக்கமாகவும் தெளிவாகும் நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன. அதற்கு அடுத்து, மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரை எழுதிய நாட்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நலமாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மறைமலையடிகள் வலியுறுத்தினார் என்பது அடுத்ததாக விளக்கப்பட்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சி, தமிழைக் காக்க மறைமலையடிகள் நிகழ்த்திய போராட்டங்கள் என நூல் விரிகிறது. 29.2.1912 இல் மறைமலையடிகள் எழுதிய நாட்குறிப்பில், ‘மூட்டைப்பூச்சி, கொசுத் […]

Read more

ஒரே கல்லில் 13 மாங்காய்,

ஒரே கல்லில் 13 மாங்காய், க.விஜயகார்த்தி கேயன் ஐ.ஏ.எஸ்., விஜயா பதிப் பகம், பக்.144, விலை ரூ. 120. தலைப்பை வித்தியாசமாக வைத்திருப்பதன் காரணம் இந்த எண் ராசியில்லை என பலராலும் கூறப்படுவதைத் தடுக்கவே என ஆரம்பித்து, 14 அத்தியாயங்களாகப் பிரித்து சுவையான நடையில் இந்நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர். தனது அடிப்படைத் தொழிலான மருத்துவத்துறையையும் மறக்காமல் அவ்வப்போது இடையிடையே பல தகவல்களைப் பேச்சு வழக்கில் நகைச்சுவையுடன் அளித்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. கணக்கு-வழக்கு பார்த்து வாழ்க்கை நடத்துவது தேவை என ஆரம்பித்து இன்றைய வாழ்க்கை கணினிமயமாகிவிட்டது வரை […]

Read more

பாகுபலி

பாகுபலி, சொ.முத்துக்குமார், வனிதா பதிப்பகம், விலை 110ரூ. சரித்திரம், சாதனை, கோயில் என்று பலதரப்பட்ட விஷயங்களின் விவரங்கள், நிஜ பாகுபலியார் என்பதில் தொடங்கி, ஔவை வழி நடந்து, சில கோயில்கள் கடந்து, வழியில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் கதை சொல்லி வரலாற்று நிகழ்வுகளை உரையாடல் பாணியில் நகர்த்திச் சென்றிருக்கும் விதம் அற்புதம். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 4 5 6 7 8 9