ஆண்டாள் காவியம்

ஆண்டாள் காவியம், முனைவர் கோ. மா. கோதண்டம், மாணிக்கவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், கவிதை என பல தளங்களிலும் எழுதிவரும் நூலாசிரியர், தெலுங்கு இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றெனப் போற்றப்படும் கிருஷ்ண தேவராயர் எழுதிய ‘ஆமுக்தமால்யா‘ எனும் காவியத்தைத் தழுவி எழுதப் பட்டுள்ள கவிதை நூல் இது. தெலுங்கு காவியத்தில் வரும் துணைக் கதைகளையும் வர்ணனைகளையும் சற்றே குறைத்து, அனைவரும் படிக்கவேண்டுமென்கிற எண்ணத்தில் தமிழில் எளிய கவிதையாக்கித் தந்துள்ளார். நன்றி: தி இந்து, 7/7/2018.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்?

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் என்போர் யார்? திண்ணியத்தை முன்வைக்கிறது… ,பேராசிரியர் பி, எஸ், பன்னீர்செல்வம், மேன்மை வெளியீடு, விலை 400 ரூ. தமிழுக்கும் தலித்திய ஆளுமைகள் வழங்கிய பங்களிப்புகளையும் தலித்துகளின் கலாச்சார பண்பாட்டு வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து தொடர்ந்து உரையாற்றி வருபவர் பேராசிரியர் பி.எஸ். பன்னீர்செல்வம். இந்த ஆய்வு நூலும் அவரது பயணத்தின் ஓர் அங்கமே. இந்த சமூகம் எதிர்கொள்ளும் அநீதியை எடுத்துச் சொல்வதாகவும், அதற்கான தீர்வை முன்னிறுத்துவதாகவும் இந்நூல் இருக்கிறது. திண்ணியம் சம்பவத்தை முன்வைத்து புறநானூற்றின் அடிப்படையில் உரையாடியிருக்கிறார் பி. எஸ். பன்னீர் […]

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், முனைவர் இரா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  விலை 50 ரூ. இருளர் என்பது இருள் என்ற சொல்லுடன் தொடர்புடையது. காடுகளின் இருண்ட பகுதிகளில் வாழ்வதாலும், இந்த இனத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு நிறத்தில் இருப்பதாலும், இருளக்கிழங்குகளை உண்பதாலும் இந்தப் பெயரைப் பெற்றிருக்கிறார்கள் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மொத்த பழங்குடி மக்களில் இருளர்கள் 25% தொன்மையான இருளர்களின் சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய அறிவு, அறிவார்ந்த சிகிச்சைத் திறன், தாவரங்கள் பற்றிய புரிதல் என சி.மஞ்சுளா மேற்கொண்ட ஆய்வின் தழுவல் […]

Read more

கடித இலக்கியம்

கடித இலக்கியம், இரா.காமராசு, சாகித்திய அகாதெமி, பக்.320, விலை ரூ.200. செல்லிட பேசி அதிக அளவில் புழக்கத்தில் வந்த பிறகு உறவினர்களுக்கு, நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவது அடியோடு நின்றுபோய்விட்டது. கடிதம் எழுதுவதில் உள்ள சுகம், கடிதம் எப்போது வரும் என்ற காத்திருப்பு, கடிதம் வந்தபின் எழும் பல்வேறு உணர்வுகள் என இந்தத் தலைமுறையினரும், வருங்காலத் தலைமுறையினரும் இழந்த அனுபவங்கள், உணர்வுகள் அதிகம். அந்த அனுபவங்களை, உணர்வுகளை இந்நூல் தொட்டுக் காட்டுகிறது . பாரதியார் தன் மனைவிக்கு, பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு, தம்பி சி.விசுவநாதனுக்கு எழுதிய […]

Read more

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்,  தொகுதி -3, பொன்.செல்லமுத்து,  மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. ‘சினிமா எக்ஸ்பிரஸ்‘ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம். ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இந்த மூன்றாம் தொகுதியில் 1979 இல் இருந்து 2001 வரை பாடல்கள் எழுதத் தொடங்கிய கவிஞர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு திரையிசைக் கவிஞர் எத்தனை படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது ஆண்டு வரிசைப்படியும் அகரவரிசைப் படியும் கூறப்பட்டுள்ளது. கவிஞரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு, அவர் எழுதிய குறிப்பிடத்தக்க […]

Read more

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, ஏ.வி.ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன்,  நலம், பக்.128, விலை ரூ.125. மனிதனுக்கு வெளியே நிகழ்கிற ஒவ்வொன்றும் மனிதனின் மூளையில் ஏற்படுத்துகின்ற மாற்றங்களையும் , மூளையில் ஏற்படுகின்ற மாற்றங்களால் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களையும் இந்நூல் அறிவியல் அடிப்படையில் விளக்குகிறது. யோகாசனம், தியானம், இசை கேட்பது, வழிபடுவது ஆகியவை மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் அவை நமது செயல்களில் மாற்றங்களை ஏற்படுத்த தூண்டுகோலாக இருப்பதையும் நூலாசிரியர்கள் விளக்கியிருக்கின்றனர். ஆண் மூளை, பெண் மூளை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள், தனித்தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. […]

Read more

சந்தித்ததும் சிந்தித்ததும்

சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.280, விலை ரூ.200. வாழ்வில் ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது என்கிறார் இறையன்பு. ‘ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் என்ற உண்மை நமக்குப் புரியும்‘ என்கிறார் நூலாசிரியர். தான் சந்தித்த அத்தகைய மனிதர்கள் குறித்த சிறு குறிப்புகளை இலகுவான வாசிப்புக்கு ஏற்ற நடையில், ஆங்கிலத்தில் இனிய மேற்கோள்களுடன் 50 கட்டுரைகளாக அவர் வடித்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே இந்நூல். […]

Read more

அன்பில் ஓங்கிய வையகம்

அன்பில் ஓங்கிய வையகம், தொகுப்பு ஸ்ரீரசா, வர்தினி, காலம் வெளியீடு, விலை 60 ரூ. ‘ஒருவரையொருவர் காதலியுங்கள். ஆனால் அது அடிமைத்தனம் ஆகிவிட வேண்டாம். உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாய் இருக்கட்டும் அது’ என்னும் கல்லில் ஜிப்ரானின் கவிதை வரிகளோடு தொடங்கும் இந்நூலில் அளவிலான நேயமும், வாழ்தலுக்கான இருப்பும் ஒன்றையொன்று பின்னிப் கொண்டிருப்பதன் அவசியத்தை சொல்லும் அழகான குறுங்கவிதைகள், சிறு கட்டுரைகள், சோவியத் நாட்டு சிறுகதை, கொஞ்சம் வரலாறு என கதம்ப மணம் வீசுகிறது. ‘உன் செயலே உன் நேசத்தின் அழகாய் […]

Read more

வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை

வாய்மொழி அல்ல வாழ்க்கை முறை, ஜெயபாஸ்கரன், வழுதி வெளியீட்டகம், விலை 250 ரூ. தமிழிலக்கிய வெளியில் கவிஞராக அறியப்பட்டவரின் 25 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நிகழ்காலத் தமிழ் சமூகம் அடைந்து வருகின்ற அவலங்களே என் கட்டுரைகளாக விரிந்துள்ளன என நூலாசிரியர் சொல்லுவது முற்றிலும் சரி என்பதை நூலின் அனைத்துக் கட்டுரைகளும் உணர்த்துகின்றன. வென்றால் தான் மக்கள் சேவையா?, வெற்றி முழக்கமா வெற்று முழக்கமா?, அறிவியலா அழிவியலா?, வேளாண்குடிகளின் மீது வணிகக் கொடிகள், மருத்துவத் துறைக்குச் சிகிச்சை தேவை உள்ளிட்ட கட்டுரைகளின் குரல்கள் சமூகத்தின் மனசாட்சியை […]

Read more

கீழடி மதுரை

கீழடி மதுரை, க த காந்திராஜன், கருத்து பட்டறை, விலை 50 ரூ. மதுரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு குறித்த தகவல்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பேராவலின் விளைவே குறு நூல். தமிழகத் தொல்லியல் அகழாய்வுகள் ஒரு முக்கிய ஆதாரமாக அமைந்த கீழடி அகழாய்வில் கிடைத்த செங்கல் கட்டுமானங்கள், விலை உயர்ந்த அணிகலன்கள், உலோகம் ஆகியவை சுமார் 2000 முதல் 2, 500 ஆண்டுகள் முந்தைய தமிழர் நாகரிகத்தின் சாட்சியங்களாக […]

Read more
1 5 6 7 8 9