உனக்கும் ஓர் இடம் உண்டு

உனக்கும் ஓர் இடம் உண்டு. கவி.முருகபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும், மனித வளம் மிக முக்கியம் என்பதை எடுத்துரைத்துள்ள ஆசிரியர், அந்த வளத்தை சரியாக பயன்படுத்த உரிய பயிற்சிகள் தேவை என்கிறார். பயிற்சித் துறையில், பல ஆண்டு அனுபவம் உள்ள இந்நுாலின் ஆசிரியர், தனக்கே உரிய பாணியில், தன்னம்பிக்கை பற்றியும், வித்தியாசமான சிந்தனை பற்றியும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். வெறும் கட்டுரையாக இல்லாமல், பல உதாரணங்கள், மெய் […]

Read more

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரும், சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவருமான மனோன்மணியம் சுந்தரனாரை பற்றிய நூல் இது. அவரது இளமைக்காலம் மற்றும் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளுடன், சுந்தரனார் இயற்றிய மனோன்மணியம் கவிதை நாடகம் குறித்தும் சிறப்பாக விவரித்துள்ளார் ஆசிரியர். தனது அறிவுத்திறமையால் சுவாமி விவேகானந்தருடன் விவாதம் நடத்தி அவரை தனது நண்பராக்கிய சுந்தரனாரின் திறமையும், தமிழை அன்னையாக கருதிய அவரது மாண்பும் வியக்க வைக்கிறது. பாரதிதாசன், கவிமணி, […]

Read more

ஓடு பையா ஓடு

ஓடு பையா ஓடு, எஸ்.இளங்கோ, மேன்மை பதிப்பகம், விலை 100ரூ. இன்றைய குழந்தைகள்தான் நாளைய உலகின் தூண்கள். அந்த குழந்தைகள் இன்று அனுபவித்து வரும் போராட்டங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட, உலக சினிமாக்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. இந்த புத்தகம் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழந்தைகளின் போராட்டங்களை கண்முன் நிறுத்துகின்றார் ஆசிரியர். தொகுக்கப்பட்டுள்ள 20 சினிமாக்களும் நம்மிடம் எழுப்பும் கேள்விகள் பல. புத்தகத்தை படிக்கும்போதே, அந்தந்த சினிமாக்களை நேரல் பார்க்கும் உணர்வு ஏற்படுவது நிஜம். நன்றி: தினத்தந்தி, 24/10/2018. இந்தப் […]

Read more

பேரிடர்களை எதிர்கொள்வோம்

பேரிடர்களை எதிர்கொள்வோம், ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 250ரூ. அறிவியல் துணையுடன் மனிதன் உலகையே ஆண்டு வந்தாலும் இயற்கையை மட்டும் அவனால் வெல்ல முடியவில்லை. மானுட சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே அவ்வப்போது நேரிடும் இயற்கை பேரிடர்கள் இந்த உண்மையை உரக்கச்சொல்லிவிடுகின்றன. நிலநடுக்கம், புயல், சூறாவளி, சுனாமி, காட்டுத்தீ என மனிதனை சோதிக்கும் இடர்பாடுகள் ஏராளம். இத்தகைய பேரிடர்கள் நேரிடுவதை தடுக்க முடியாவிட்டாலும், அவற்றில் இருந்து சமயோஜிதமாக தப்பிக்க முடியும். அதற்கான வழிகாட்டிதான் இந்த நூல். மனிதனை அச்சுறுத்தும் ஒவ்வொரு பேரிடருக்குமான காரணம், அவற்றின் […]

Read more

இரக்கம் கொள்வோம் விட்டுக்கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக்கொடுப்போம், மா.ராமச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 130ரூ. வாழ்க்கையில் உச்சம் தொட நினைக்கும் இளைஞர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் படிக்கட்டுகளாக 48 அருமையான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டவை என்றாலும், அவை சுவையுடன் தரப்பட்டுள்ளதால் அலுப்புத் தட்டாமல் படிக்க முடிகிறது. எதிர்மறைச் சிந்தனைக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற அவரது கருத்து அனைத்து கட்டுரை தலைப்புகளிலும் அப்படியே இடம் பிடித்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 24/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி.பாலசர்மா, நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விளக்கமான பதில்கள் புராணங்களில் இருந்தும், வேதங்களில் இருந்தும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. கடவுள், கோவில், வழிபாட்டு முறைகள், சம்பிரதாயங்கள், விசேஷங்கள், பாவம், புண்ணியம், தானம், விதி, புணூல் போன்றவை குறித்து எதிர்மறையாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் கூட தெளிவாக புரிந்துகொள்ளும் விதமாக விளக்கங்கள் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆன்மிகம் பற்றி இந்துக்கள் அவசியம் அறிந்துகெள்ளவேண்டிய அறிவுப்பூர்வ தகவல்களும் நூலில் விளக்கப்பட்டு இருக்கிறது. பொருள் பொதிந்த பதில்கள் சிந்தனையையும் தூண்டுகின்றன. நூலைப் போலவே […]

Read more

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம், எழில்மதி, மணிமேகலை பிரசுரம், பக்.140, விலை 55ரூ. குறள் பாக்கள் மூலம் குடியின் தீமைகளை விளக்குகிறார் நுாலாசிரியர். முதன் முதலில் இந்நுால் வெளிவந்த போது, ‘மது விலக்கில் முழு மூச்சுடன் இறங்கியுள்ள நம் மாநில அரசு இந்நுாலை வெளியிடுவது, நாட்டு மக்களுக்கு நலம் பயப்பதாக அமையும்’ என, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொன்னார். மது பிரச்னைக்குரிய எல்லா அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளமை பாராட்டிற்கும், சிறப்பிற்கும் உரியது. குடிகாரர்களை இந்த நுால் திருத்தும்; நல்வழி காட்டும் என்பதில் […]

Read more

அபாகஸ்

அபாகஸ் சுலபமாக கணிதம் கற்கும் இரகசியம், வசந்தி ரங்கராஜன், நர்மதா வெளியீடு, விலை 170ரூ. ‘ஜெல்ஸ்’ அபாகஸ் பயிற்சி நிலையத்தின் இயக்குநரான இந்நூலாசிரியர், அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து, இந்தியாவில் கல்வித் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய சிறந்த கல்வியாளர். தவிர, பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றியவர். இவர் இந்தியாவில் 1997-ஆம் ஆண்டு முதன் முதலாக அபாகஸ் கல்வியை அறிமுகப்படுத்தியவர். இன்று அபாகஸ் பயிற்சி நிறுவனங்கள் பல இடங்களில் பரவி, இக்கல்வி முறையைப் பற்றிப் பலரும் அறிந்துள்ளனர். அபாகஸ் என்பது நான்கு சட்டங்கள் பொருத்தப்பட்ட […]

Read more

மூங்கில் கனவுகள்

மூங்கில் கனவுகள், கி.பத்மநாபன், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. ந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன. ‘அடகு’ என்ற கவிதையில் நடுத்தர குடும்பங்களின் இயலாமைகளை அருமையாகச் சொல்லி, உள்ளத்தை நெகிழ வைக்கிறார். மலைப்பாம்பால் வளைக்கப்பட்ட உயிரினமாய், நடுத்தர குடும்பங்கள் சிக்கி திணறும் அவலத்தை அப்பட்டமாய் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இரைப்பை – கருப்பை – இடைவெளி என்கிற சிந்தனை, இதுவரை நாம் படித்த உலக பெருங்கவிஞர்களின் கவிதைகளில் கூட படித்திராத ஒன்று. நன்றி: தினமலர், 28/10/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

பேட்டை

பேட்டை, தமிழ்ப்பிரியா, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், பக். 352, விலை 390ரூ. கடந்த, 1735ம் ஆண்டு வாக்கில் மதராஸ் ராஜதானியின், 14வது கவர்னர், ‘மாடர்ன் பிட்’ என்பவரது முயற்சியால் பல நெசவாளர் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, சென்னை யில் இப்போது சிந்தாதிரிப்பேட்டை என அழைக்கப்படும் பகுதியில் குடியமர்த்தப்பட்டன. இந்த நெசவாளர்கள், ‘காலிகோ பிராண்ட்’ வகை துணிகளை கலை நேர்த்தியுடன் நெசவு செய்து தயாரிப்பதில் நிபுணர்கள். இந்தத் துணிக்கு அப்போது லண்டன் மாநகரில் ஏக டிமாண்டு. இந்த நெசவாளர்கள் முதலில் சின்ன சின்ன தறிகளை […]

Read more
1 4 5 6 7 8