சொல்லித்தந்த வானம்

சொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. திரை உலகில் தடம் மாற்றி யோசித்து, தடுமாறமல் நடைபோட்டு, தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மகேந்திரன். அவரது சிந்தனையும் செயலும் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா உலகினரையே வியக்கச் செய்தவை. மாற்றி யோசித்து மகத்தான கலைச்சேவை செய்த அவரைப்பற்றி மறக்க முடியாத தங்கள் நினைவுகளை திரை உலகைச் சார்ந்த சாராத பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த நூலில். மகேந்திரனின் எண்ணங்களைப் போலவே இதுவும் வித்தியாசமாக மணக்கிறது.. நன்றி: குமுதம், 23/10/19 […]

Read more

பழி வாங்கும் பாவை

பழி வாங்கும் பாவை, மேக்ஸி லயன் காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. நிறவெறியின் உச்சத்தில இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் கர்னல் அர்லிங்டன், அப்பாவி செவ்விந்திய கிராம மக்களை யுத்த தர்மத்தை மீறிக் கொன்று தீர்க்கிறார். நியாயத்தின் பக்கமே எப்போதும் நிற்கும் டெக்ஸ் வில்லர், செவ்விந்தியர்களுக்குத் துணையாக இருந்து, அமெரிக்க ராணுவக் கோட்டையைத் தகர்க்க வழி சொல்கிறார். செவ்விந்தியத் தலைவன் ப்ளாக் புல்லின் மனைவியோ கர்னலைப் பழிவாங்கத் துடிக்கிறாள். திகல், திருப்பம், திட்டமிடல் என்று மிரட்டலாக வண்ணச் சித்திரங்களுடன் கண்முன் காட்சியாக நகர்கிறது கதை. […]

Read more

நமக்குள் சில கேள்விகள்

நமக்குள் சில கேள்விகள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. அறிவு உள்ள யாவரும் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எத்தகைய கேள்வி கேட்கிறோம் என்பதுதான் ஒவ்வொருவரையும் தனிப்படுத்திக் காட்டுகிறது. பயனுள்ள பதிலுக்கான கேள்வியைக் கேட்பவரது அறிவு முதிர்ச்சி அடைகிறது. அத்தகைய நூற்றுக்கணக்கான கேள்விகளை தமக்குத் தாமே கேட்டு, அதற்கான விடைகளையும் தாமே தேடியும் சிந்தித்தும் தொகுத்திருக்கிறார் இறையன்பு. வாசிக்க வாசிக்க நமக்குள் எழும் பல கேள்வி முடிச்சுகள் சிக்கல் பிரிந்து அவிழ்கிறது. அதன் விளைவாக அறிவில் மலர்ச்சி முகிழ்கிறது. பல […]

Read more

தொடர்கதைகளும் முற்றும்

தொடர்கதைகளும் முற்றும், வெ.ஆத்மநாதன், மணிமேகலை பிரசுரம், பக். 160, விலை 80ரூ. இந்நுாலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் அருமை. இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றை, நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளோம். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், புத்தகம் படித்த உணர்வு ஏற்படவில்லை. மாறாக, நமக்கு தெரிந்த நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதிலும், புத்தகத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கதையில் வரும் மீனாட்சி கதாபாத்திரம், நெஞ்சில் நிழலாடுவதாக அமைந்துள்ளது. அனைவராலும் விரும்பி படிக்கும் எளிய நுால் என்ற பாராட்டிற்குரியது. – ச.சுப்பு […]

Read more

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி, அல்லூர் வெங்கட்டராமய்யர், ஆனந்த நிலையம், பக். 165, விலை 200ரூ. சோதிடத்தில் தேர்ந்த ஆசிரியர் காஞ்சி மடத்தின் பெருமைகளை நுாலாக தொகுத்திருக்கிறார். காஞ்சி மகாபெரியவரின் ஆசி பெற்ற இவர் அம்மடத்தின் பரமபக்தன் என்பதில் பெருமை கொண்டவர். தொண்டைநாட்டின் புகழ்பெற்ற காஞ்சி, இந்திய திருநாட்டின் தெய்வீக நகரங்கள் ஏழினுள் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இங்கு ஆதிசங்கர மகான் வந்தார் என்பதும் வரலாறு. ஆனால் அவர், ‘சனாதன மதம் ’என்ற தத்துவத்தை தன் அத்வைத கோட்பாடுகளால் நிறைவேற்றிய தெய்வீக […]

Read more

தமிழா தமிழ் படி

தமிழா தமிழ் படி, கோகிலா தங்கசாமி, ஆக்டீவ் தமிழ் காம், பக். 80, விலை 120ரூ. தமிழைக் கற்பித்தலில் புதிய அணுகுமுறை தேவை. அதைக் குழந்தைப் பருவ கல்வியில் இருந்து துவங்க வலியுறுத்தும் முதல் நுால் இது. வாசிப்பை சொற்களில் சொல்லித் தர வலியுறுத்தும் ஆசிரியர், இருவர் இருவராக கைதட்டியபடி சொற்களை உரக்கக் கூறி வாசிக்கத் துாண்டும் வகையில் வண்ணப்படங்களுடன் வெளியிட்ட முறை புதிய உத்தியாகும். மூன்று வயது முதல், 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உதவும் இப்புத்தகம் ஆரம்பப் பள்ளிகளுக்கு நிச்சயம் […]

Read more

எட்டுத்தொகை அகநூல்களில் தூது மரபு

எட்டுத்தொகை அகநூல்களில் தூது மரபு, இரா.செங்கோட்டுவேல், காவ்யா, பக். 112, விலை120ரூ. தன் கருத்தை மற்றொருவருக்கு நேரிடையாக கூறாமல், வேறொருவர் மூலமாக கூறச் செய்தலே துாது என்று அழைக்கப் பெறும். காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சியுற்று குழு வாழ்க்கைக்கு வந்த பின் நாடு, நகர் என பண்பாட்டில் சிறப்புற்ற காலத்தில் துாது என்பது முறைமைப் படுத்தப்பட்டு சிறப்பான நிர்வாக முறையை தமிழக மக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கு, இலக்கியங்களில் காணக்கிடக்கும் துாது பொருண்மைகளும், துாது இலக்கியங்களும் சான்றாக விளங்குகின்றன. கோப்பெரும் சோழனிடம் பிசிராந்தையர் […]

Read more

கற்றது விசில் அளவு

கற்றது விசில் அளவு, டாக்டர் ஆர். பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 128, விலை 100ரூ. இந்நுால், பாண்டியராஜன் நடிகராகவும், இயக்குனராகவும் மலர்ந்ததை சொல்லும் சுயசரிதை. ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தன் குடும்பத்தினர் வறுமையில் வாடியதை உருக்கமாகச் குறிப்பிடுகிறார் பாண்டியராஜன். சைதாப்பேட்டையில், ஒரு எளிய குடும்பத்தில், பேருந்து ஓட்டுனரின் மகனாக பிறந்தவர், பாண்டியராஜன். சைதாப்பேட்டை, மாதிரி உயர்நிலைப் பள்ளியில் படித்த போது, அவர் என்.சி.சி.,யில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஒரு ஆண்டு, என்.சி.சி., கேம்ப், சைதையில் அவர்கள் பள்ளிக்கூட வளாகத்திலேயே நடைபெற்றது. கேம்ப் கலை […]

Read more

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம், முனைவர் மா.ராமச்சந்திரன், மணிமேகலை பிரசுரம், பக். 118, விலை 130ரூ. ‘சீர் சுமக்கும் சிறகுகள்’ என்ற தலைப்பில், மாத இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது புத்தகம். மனம் பண்படுவதற்கு வழிவகை செய்யும் முறையில், 48 உள்தலைப்புகளில் அடுக்கப்பட்டிருக்கிறது கட்டுரைகள். ‘வாழ்க்கை நெறிக் கல்வி’ என்ற தலைப்பில், வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி, தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான உயர் எண்ணங்களைப் பேசுவதற்காக சேகரித்த சிறு சிறு குறிப்புகளை சற்று விரிவாக்கி, கட்டுரையாக்கிய […]

Read more

குழந்தைப் பருவத்து நினைவுகள்

குழந்தைப் பருவத்து நினைவுகள், தெ.வி.விஜயகுமார், சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை, பக். 113. மனிதனின் வாழ்நாளில் குழந்தைப் பருவம் பலருக்கு வரமாகவும், பலருக்கு சாபமாகவும் அமைந்து விடுகிறது. இந்த வேறுபாட்டிற்கு பெரும்பாலும் முதன்மையான காரணம் பொருளாதார பலமும், பலவீனமுமே. பொருளில்லார்க்கு இவ்வுலகு முற்றிலுமாக இல்லை என்பதை உணர்ந்து உழைத்து மீண்டெழுந்தவர் பலர்; எழாது வீழ்ந்தோரும் பலர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மீண்டெழும் ஒரு சாமானியரின் அல்லல் மிக்க இளமைக் காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நுால். போதுமான வருவாய் இல்லாத நோயாளித் […]

Read more
1 2 3 4 8