1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி,  நூற்றுக்கணக்கான ஜாதிகள் மற்றும் தீண்டாமையினால் – சி.கண்ணன்; நோஷன் பிரஸ், பக்.146, விலை ரூ.150. எந்த விஷயத்தையும் ஒரு புதிய கோணத்தில் பார்த்து, மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. உதாரணமாக ஜாதி குறித்த நூலாசிரியரின் பார்வையைக் கூறலாம். வர்ணமும் ஜாதிகளும் வட இந்தியாவில் ஏற்படாமல் இருந்திருந்தால், வட இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்புகள் தோல்வியில்தான் முடிந்திருக்கும். ஐரோப்பாவில் சுமார் 30 கோடி மக்களும், சைனாவில் சுமார் 140 கோடி மக்களும், அமெரிக்காவில் சுமார்30 கோடி மக்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஜாதி […]

Read more

நோய் அரங்கம்

நோய் அரங்கம், கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை: ரூ.275 மருத்துவம் மிகப் பெரும் வியாபாரமாக உருக்கொண்டிருப்பதற்கு மக்களின் விழிப்புணர்வின்மையும் மிகமுக்கிய மூலதனம். பல்வேறு ஊடகங்களிலும் தொடர்ந்து நோய்கள் குறித்தும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எளிமையாக எழுதிவருபவர் டாக்டர் கு.கணேசன். தலைவலி, மூட்டுவலி, சீதபேதி தொடங்கி எபோலா, டெங்கு என ஜிகா வைரஸ் வரை இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறார். பற்கள், நகங்களைப் பாதுகாக்கும் விஷயங்களும் இப்புத்தகத்தில் உள்ளன. வெறுமனே நோய் அறிகுறிகளையும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மட்டும் இவர் பேசுவதில்லை. […]

Read more

சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.160,  விலை ரூ.150. குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் வடிவில் ஆன்மிகம் குறித்த தெளிவான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. ஆன்மிகம் என்பது வழிபாடு என்கிற செயல்முறையோடு நின்றுவிடுவதில்லை.யார் அச்சத்திலிருந்து விடுபடத் தொடங்குகிறார்களோ அவர்களே ஆன்மிகத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் எதிர்காலம் குறித்துப் பயப்படமாட்டார்கள்.மகிழ்ச்சியால் ஆன்மிகமே தவிர, மகிழ்ச்சிக்காக ஆன்மிகம் இல்லை.ஆன்மிகம் என்பதே அன்பு. எதிரி என்று யாரும் இல்லாத நிலையே ஆன்மிகம். நம்மைப் பார்த்து யாரும் பொறாமைப்படாதவாறு வாழ்வதே சிறந்த […]

Read more

தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம்

தமிழ் இலக்கியங்களில் தேசிய இயக்கத்தின் தாக்கம், வை.சந்திரசேகர், அய்யா நிலையம்,  பக்.208, விலை ரூ.200. தேசிய இயக்கத்துக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் உள்ள உறவை மிக விரிவாக, தெளிவாக எடுத்துரைக்கும் நூல். தமிழ் நாடகங்களில், கவிதைகளில், புதினங்களில், சிறுகதைகளில் தேசிய இயக்கத்தின் தாக்கம் எவ்விதம் செயற்பட்டது என்பதை நிறைய எடுத்துக்காட்டுகளுடன் இந்நூல் விவரிக்கிறது. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை, தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்ட பல கவிஞர்களின் படைப்புகளில் காணப்படும் தேசிய சிந்தனைகளை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தேசத்தின் இருகண்களாகக் கொண்டு […]

Read more

மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்

மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள், மு.முருகேஷ், ஆதி வெளியீடு, விலை 40ரூ. நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குவது விடுகதை. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியரே, ‘பிசி’ என்ற சொல்லால் விடுகதையைச் சுட்டியுள்ளார். மூத்த தமிழறிஞர்களான, ச.வே.சுப்பிரமணியன், ஆறு.ராமநாதன் ஆகியோர் வரிசையில் முருகேஷும் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. ‘மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்’ என்னும் தலைப்பில், அறிவுக்கு விருந்தாகும், 180 விடுகதைகளைத் தொகுத்துள்ளது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

நீலத்தங்கம்

நீலத்தங்கம்: தனியார்மயமும், நீர் வணிகமும், இரா.முருகவேள், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.70 மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான தண்ணீர் எப்படி உலகம் முழுக்கச் சந்தைப் பொருளானது என்பதை இரா.முருகவேளின் ‘நீலத்தங்கம்: தனியார்மயமும் நீர் வணிகமும்’ நுட்பமாக விவரிக்கிறது. டெல்லியில் தனியார்மயத்திடமிருந்து குடிநீரைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியின் அரசியலை மெச்சும் அதேவேளையில், அதற்குப் பின்னிருக்கும் சித்தாந்தச் சிக்கல்களையும் விவரிக்கிறது. நகரங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் பொருளாதாரரீதியில் பின்தங்கிய மக்களின் நிலையையும் விவரிக்கிறார். குடிநகர்த்துதலுக்குப் பின் இருக்கும் பல்வேறு காரணங்களில் நீர் எத்தகைய இடங்களை வகிக்கிறது என்று பேசப்படும் பகுதிகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. […]

Read more

இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை, இளவேனில்,  கொற்றவை வெளியீடு, பக்.288; ரூ.250. புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான மாக்ஸிம் கார்க்கியின் குழந்தைப் பருவ வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல். மாக்ஸிம் கார்க்கி எழுதிய எனது குழந்தைப் பருவம் 1957-இல் தமிழில் வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் மாக்ஸிம் கார்க்கியின் அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, அதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டவிதத்தில், மிக புதியமுறையில் படைக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியரின் கவித்துவம் மிக்க உரைநடையில் ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் மக்கள் பட்ட துன்பங்கள் மிகத்துல்லியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இளமையிலேயே தந்தையை இழந்த சிறுவன் […]

Read more

உலக உத்தமர் கலாம்

உலக உத்தமர் கலாம்,  தொகுப்பாசிரியர்: கவிதாசன், குமரன் பதிப்பகம், பக்.224, விலை ரூ.150. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் பழகியவர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், காவல்துறை கூடுதல் இயக்குநர் செ.சைலேந்திரபாபு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், நெல்லை சு.முத்து உள்பட 18 ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளிலிருந்து அப்துல்கலாம் என்ற மனிதரின் உயர்ந்த பண்பு, பழகும் விதம், பிறரின் துன்ப, துயரங்களில் பங்கெடுக்கும் தன்மை, வித்தியாசமான அவருடைய சிந்தனைகள் என […]

Read more

அல்லல் போக்கும் மகாபைரவர்

அல்லல் போக்கும் மகாபைரவர், சிவம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 25ரூ., ஸ்ரீ பிரம்ம வைவர்த்த புராணம், விலை 40ரூ., ஸ்ரீ வாமன புராணம், விலை 50ரூ, பவிஷ்ய புராணம், விலை 40ரூ. புராணங்கள், தெய்வீகம் தொடர்பான இந்த நூல்கள் பல விஷயங்களை உள்ளடக்கியன. பவிஷ்ய புராணத்தில் சூரியன் தோன்றியது உட்பட பல கருத்துக்கள் உள்ளன. ஸ்ரீ பிரம்ம வைவர்த்த புராணத்தில் நாரதர் கதையைக் காணலாம். மகா பைரவர் வழிபாட்டு முறைகளில், சொர்ண பைரவர் பற்றி பல தகவல்கள் சிறப்பாக உள்ளன. ஆன்மிகத்தில் தோய்ந்தவர்களுக்கு உரிய […]

Read more

எய்ட்ஸ் நோயாளிகளின் மவுன மொழிகள்

எய்ட்ஸ் நோயாளிகளின் மவுன மொழிகள், ஸ்டீபன் மாத்தூர், மணிமேகலை பிரசுரம், விலை 200ரூ. சொல்லத் தயங்குகிற ஒரு சொல்லாக எய்ட்ஸ் நோய் ஆகிவிட்டது. அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியில் சொல்லாமல் வெட்கப்பட்டு வேதனைத் தீயில் அவதிப்படுபவர்களாகவே உள்ளனர். ஆறுதல் கூற அவர்களுக்கு யாருளர் என்று சொல்லக்கூடிய நிலை தான் உள்ளது. அத்தகைய நோயாளிகள் வாழ்விலிருந்து விலகியே நிற்பது கண்டுணர்ந்து, அவர்களின் அவலத்தை வசன கவிதையாக வடித்துள்ளார் நுாலாசிரியர் ஸ்டீபன். நோய் வாய்ப்பட்டவரின் குடும்ப நிலையும், அந்நோய்க்கு ஆளாகி வருந்தும் வருத்தமும், கண் கெட்ட பிறகு […]

Read more
1 2 3 4 5 6 8