மன அழுத்தமும் ஒரு வரமே

மன அழுத்தமும் ஒரு வரமே, பி.வி.பட்டாபிராம், கொரல் வெளியீடு, விலை 150ரூ. மன அழுத்தம் என்பது ஒரு நோய் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், மன அழுத்தம் என்பது நம்மை ஊக்குவிக்கிறது. ஆகவே இது அனைவருக்கும் அவசியமான ஒன்றே. ஆனால் தகுந்த அளவில் இருக்கும் படி நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான கோணத்தில் சொல்லும்இந்த நூலில், மன அழுத்தம் தொடர்பான அத்தனை தகவல்களும் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் எந்த நிலையில் இருக்கின்றது, அவற்றை சரி செய்து எவ்வாறு என்பது உள்பட […]

Read more

மகாரதத்தில் குறளின் குரல்

மகாரதத்தில் குறளின் குரல், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. மகாபாரதமும், திருக்குறளும் பல நூற்றாண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை என்றாலும், இரண்டு நூல்களிலும் உள்ள பல கருத்துக்கள் ஒன்றாக இருக்கின்றன என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி இருக்கிறது. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, அதில் மகாபாரதம் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், சிறுகதைகள் ஆகியவற்றைக் கூறி, அதே கருத்தை சுருக்கமாக விளக்கும் திருக்குறளை அடையாளப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க முயற்சி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 30 கட்டுரைகளும், நீதி […]

Read more

மதுரையின் அரசியல் வரலாறு 1868

மதுரையின் அரசியல் வரலாறு 1868, ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், சந்தியா பதிப்பகம், பக்.352, விலை ரூ.360. தூங்கா நகரம் என்று புகழ்பெற்ற மதுரை கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நூலாசிரியர், இந்நூலில் ;மதுரா தலபுராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள 64 திருவிளையாடல்களை விவரிக்கிறார். அது மதுரையை ஆண்ட 73 பாண்டிய மன்னர்களைப் பற்றிய பட்டியலை வழங்குகிறது. கி.பி.1559 – இல் ஆட்சிக்கு வந்த விசுவநாதாவின் முக்கிய தளபதியாக இருந்த அரியநாயகா, மதுரை புதுமண்டபத்தில் குதிரை வீரன் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார். […]

Read more

திருவாசகம்

திருவாசகம் (பதிக விளக்கம்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200; சைவர்களின் தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்கிறது மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம். இறைவனின் திருவருளையே துணையாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டதுதான் திருவாசகம்.இந்நூலில், ஒவ்வொரு பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக விளக்கமளிக்காமல், பதிகம் நிறைவு பெறும்போது அந்தந்தப் பதிகத்தின் பொருளை குறைந்த சொற்களில் நிறைவான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பு. முதல் பதிகமான சிவபுராணத்துக்குத் தந்திருக்கும் விளக்கத்தில், சிந்தை மகிழ சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் […]

Read more

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள், ப.முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக்.526, விலை ரூ.430. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகிய மூவரும் மிகச் சிறந்த தமிழ்க் கவிஞர்கள் எனினும், மூவரின் காலமும், பின்னணியும் வேறுபாடுகள் உடையவை. பாரதியாரின் காலம் சுதந்திரப் போராட்ட காலம். அந்தப் பின்புலத்தில் பாரதியார் சிந்தித்தவை, எழுதியவை இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு, தமிழ் இனம், மொழி சார்ந்த அரசியல் பார்வையில் பாரதிதாசனின் கவிதைகள் தோன்றின. கண்ணதாசன் எழுதிய கவிதைகளில் பாரதிதாசனின் தொடர்ச்சி இருந்தாலும் கண்ணதாசனின் அரசியல் பார்வை […]

Read more

இரண்டு தந்தையர்கள்

இரண்டு தந்தையர்கள், சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம், பரிசல் வெளியீடு, விலை: ரூ.200. மறதியால் எதெல்லாம் விழுங்கப்படாமல் இருக்கிறதோ அதுதான் நினைவு. நிறைவேற்றாமல் விட்ட பொறுப்புகளும் சரிசெய்யாமல் விட்ட தவறுகளும் சேர்ந்தவன்தான் மனிதன். இதை நியாயமாகச் சொல்லி சாதாரணர்கள், வரலாறு என்னும் மாபெரும் புதைசேற்றில் புதைந்து முகமே தெரியாத இருட்டின் குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து தப்பித்துவிடலாம். ஆனால் சிந்தனையாளர்கள், தேசப் பிதாக்கள், மேதைகள், கலைஞர்கள் ஆகியோரை அவர்கள் இறந்த பிறகும் நரிகள் துரத்துகின்றன; விசாரணை செய்கின்றன. அந்த விடுபட்ட நரிகளின் விசாரணையைத்தான் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை மூன்று […]

Read more

சட்டத்தின் ஆன்மா

சட்டத்தின் ஆன்மா, எம்.குமார், வானதி பதிப்பகம், பக்.384, விலை ரூ.280, அரசு என்றால் என்ன, உலகளாவிய பல்வேறு ஆட்சிமுறைகள், அவற்றின் தன்மைகள், அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு, அமெரிக்க அரசியலமைப்பின் தோற்றம், சுவிட்சர்லாந்து அரசியல் அமைப்பு உள்ளிட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி பேசியுள்ளது. குறிப்பாக நல்ல எண்ணம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் நாட்டில் மட்டுமே நல்லதொரு ஆட்சியும் நிர்வாகமும் நடப்பது சாத்தியம் என்பதை உணர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து […]

Read more

பசும்பொன் களஞ்சியம்

பசும்பொன் களஞ்சியம், தேவரின் சொற்பொழிவுகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா, பக்.656, விலை ரூ.650. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பல கூட்டங்களிலும், தமிழக சட்டமன்றத்திலும் ஆற்றிய 40 உரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த முத்துராமலிங்கத் தேவர், நேதாஜியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததும், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்ததும் இந்நூலில் உள்ள பல சொற்பொழிவுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. பிரிட்டிஷாரிடம் இருந்து உண்மையில் நாம் சுதந்திரம் அடையவில்லை என்ற கருத்து […]

Read more

பெருவலி

பெருவலி, சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: 225 சுகுமாரனின் ‘பெருவலி’ நாவலில் வலி என்பது வலிமை, நோய்மை என்பதாக இருவேறு பொருள்களைத் தருகிறது. அதிகாரத்தின் வலியையும் அகவலியையும் கடந்த காலத்தினூடே நிகழ்கால அரசியல் அடக்குமுறைகளோடு பொருத்திப் பார்க்கும்படியான நிகழ்வுகளோடு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வலிமை எங்கிருந்தாலும் அது அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறைக்கு உட்படுத்தி அடிமையாக்கலாம் என்பதை நாம் வரலாறு நெடுகக் காண்கிறோம். ஷாஜகானின் மகள் இளவரசி ஜஹானாராவைப் பற்றி மிகுபுனைவு இல்லாமல் அவளின் அந்தரங்க நாட்குறிப்புகளை வைத்துக் கவித்துவ மொழியில் இந்நாவலை எழுதியுள்ளார் சுகுமாரன்.   அரச குலத்துப் பெண்களின் […]

Read more

நெஞ்சிருக்கும் வரை

நெஞ்சிருக்கும் வரை…. (நான் சந்தித்த ஆளுமைகள்), ஆர்.எஸ்.மணி, ஆரம் வெளியீடு, விலை: ரூ.180 ஆளுமைகள் முப்பது திண்டுக்கல்லைச் சேர்ந்த இலக்கியச் செயல்பாட்டாளர் ஆர்.எஸ்.மணி தான் வியந்த சமகால ஆளுமைகளைப் பற்றி பேஸ்புக்கில் அவ்வப்போது எழுதிவந்த சிறுகட்டுரைகளின் தொகுப்பு. மூன்று பேர் உட்காரும் அளவுக்குச் சிறிய வீட்டில் வசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் மதுரை நன்மாறன், அவருக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்ஏபி, நாற்பதாண்டுகளாய் எழுத்தும் வாசிப்புமாய்த் தீவிரமாக இயங்கிவரும் பேராசிரியர் அருணன் என்று பொதுவுடைமை இயக்கம் சார்ந்த இலக்கிய ஆளுமைகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் […]

Read more
1 4 5 6 7 8