அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள்

அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள், சத்யவதனா, சத்யா பதிப்பகம், பக். 1340, விலை 675ரூ. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உட்பட, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வாரியாகவும், ஆந்திரா, கர்நாடகா, அசாம், கேரள மாநிலங்களில் உள்ள, 187 ஹிந்து தலங்கள் பற்றிய சிறு முன்னோட்டத்தை, இந்நுால்கள் வழங்கியுள்ளன. நான்கு பாகங்களை, சத்யவதனா என்பவரும், ஐந்தாவது பாகத்தை, வீரரகுவும் எழுதியுள்ளனர். ஐந்தாவது பாகம், அதிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. உலகின் முதல் சிவன் கோவில், சிவராத்திரி சிறப்புகள், 1,008 லிங்கங்களின் பெயர்கள் என, சுவாரஸ்யமாகவும் […]

Read more

பெரியபட்டினம் காசுகள்

பெரியபட்டினம் காசுகள், ப.சண்முகம், முன்னாள் பேராசிரியர், தஞ்சாவூர் தொல்லியல் கழகம், பக். 130, விலை 125ரூ. பெரியபட்டினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்ந துறைமுகப் பட்டினமாக இருந்த ஊர். இன்றும் சிவகங்கை அருகே உள்ள கீழடி அகழ்வாய்வு, தமிழகத்தில் தென்பாண்டி நாடு கலாசார கேந்திரம் என்பதை உணர்த்துகிறது அல்லவா… பெரிய பட்டினத்தில் கிடைத்த பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் காசுகள் தவிர தமிழகத்தில், விஜயநகர அரசர்கள், ஆங்கில ஐரோப்பிய கம்பெனிகள் காசுகள் என்று பலவற்றை இந்த நுாலில் விளக்குகிறார் ஆசிரியர். சங்க கால பாண்டியர் காசுகளை […]

Read more

பெண்ணியம்

பெண்ணியம், முனைவர் இரா.பிரேமா, பாரி புத்தக நிலையம், பக். 216, விலை 90ரூ. பெண்ணியம்’ என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம், சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. உண்மையில், பெண்ணியத்தின் நோக்கம் அதுவன்று; காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைப்பட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். இந்த இலக்கை அடைய ஆண்கள் தடையாகும்போது மட்டுமே அவர்கள் எதிரிகளாகின்றனர். இன்று பெண்ணியம் பற்றி முழுவதுமாக […]

Read more

தமிழ்ச் சிறுகதை வரலாறு

தமிழ்ச் சிறுகதை வரலாறு, கி.துர்காதேவி, கி.ராஜம் வெளியீடு, விலை 225ரூ. தமிழகத்தில் பிரசண்ட விகடன் என்ற இதழ், 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இதழில் 1935 முதல் அந்த இதழ் நிறுத்தப்படும் வரை ஆசிரியராக இருந்த எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் காலத்தில் அந்த இதழில் பல்வேறு சிறுகதைகள், கவிதைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் 1951 முதல் 1952 வரை உள்ள ஓராண்டு காலத்தில் வெளியான சிறுகதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அந்த காலத்தில் வெளியான கதைகளின் சுருக்கம், அந்தக் கதைகளின் பாடுபொருள், […]

Read more

பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்

பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும், எஸ்.மோதிலால், சைவப் பிரகாச சபை, விலை 450ரூ. நீராரும் கடல் உடுத்த.. என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைத் தந்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஒரே மகனான பி.எஸ்.நடராஜபிள்ளை பற்றிய அரிய பல தகவல்களை இந்த நூல் கொண்டு இருக்கிறது. கேரள தலைவர்களில் ஒருவரான பட்டம் தாணுப்பிள்ளையுடன் இணைந்து திருவிதாங்கூர் அரசியலில் பி.எஸ்.நடராஜபிள்ளை எவ்வாறு பெரும் ஆளுமையாக விளங்கினார் என்பதும், அவரது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பணிகள் தொடர்பான தகவல்களும் சிறந்த முறையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. பி.எஸ்.நடராஜபிள்ளை […]

Read more

ஆதித்ய இருதயம் விரிவுரை

ஆதித்ய இருதயம் விரிவுரை, க.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், விலை 400ரூ. ராமாயண காவியத்தில், ராவணனுடன் ராமர் போருக்கு ஆயத்தமாக இருக்கும் காலத்தில், ராமருக்கு சூரிய வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கி அகத்திய முனிவர் அருளிய மந்திரங்களான ஆதித்ய இருதயத்தில் கூறப்பட்டுள்ள அற்புதமான விஷயங்களை இந்த நூல் விளக்கமாகவும் எளிய முறையிலும் தந்து இருக்கிறது. அனைத்து தெய்வங்களின் அம்சங்களையும் பெற்றுக்கொண்டு அவற்றை மக்களுக்கு வழங்கும் சூரிய பகவான் செய்லபாடுகளை உணர்வு பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஆசிரியர் இந்த நூலில் […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.ராஜகோபாலன், வானதி, விலை 200ரூ. எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தக்களை துணிந்து ஆணித்தரமாகக் கூறக்கூடிய எழுத்தாளர் என்ற நற்பெயரைப் பெற்ற பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதிய 33 கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய சமுதாயத்தில் நிலவும் அவல நிலை, சித்தர்கள் பெருமை, பத்திரிகைகள் நிலைமை, பாலியல் துன்புறுத்தல்கள், கவிஞர் கண்ணதாசனின் சிறப்பு, ஓட்டு அரசியல், சுற்றுச் சுழலை பாதுகாத்த டாக்டர் பிந்தேஸ்வர் பதக், மத சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம், தீண்டாமைக் கொடுமை, தேவதாசி முறை, மீ டூ இயக்கம் […]

Read more

கேம் சேஞ்சர்ஸ்

கேம் சேஞ்சர்ஸ், உலகை மாற்றயி ஸ்டார்ட் அப்களின் கதை, கார்க்கிபவா, விகடன் வெளியீடு, விலை 240ரூ. மின்னல் போன மனதில் சட்டென்று தோன்றும் வித்தியாசமான யோசனையை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தி, முன்னேற்றம் காணும் தொழில்நுட்பம் ஸ்டார்ட் அப் என்று கொண்டாடப்படுகிறது என்பதை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது. தற்காலத்தில் தவிர்க்க முடியாத சேவைகளாக விளங்குவதோடு, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மிக அதிக அளவு பொருளீட்டும் நிறுவனங்களான ஊபர், ஸ்விக்கி, பிளிப்கார்ட், அமேசான், பே டிஎம் மற்றும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரெட் […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, விலை 170ரூ. ஏழைக் குழந்தைகளுக்கு கல்விப் பணி, நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதி என்று ஏராளமான அன்புப் பணிகளைச் செய்த கிறிஸ்தவ அருளாளர்களை இந்த நூல் சிறப்பாக அடையாளம் காட்டி இருக்கிறது. தந்தை லெவே, புனிதர் அல்போன்ஸ், தேவசகாயம் பிள்ளை, அன்னை தெரசா, இறை ஊழியர் ஞானம்மா ஆகிய ஐவரின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் ஆற்றிய தொண்டுகள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், துயரங்கள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/10/19 இந்தப் புத்தகத்தை […]

Read more

இனிய இணையதள நூலகம்

இனிய இணையதள நூலகம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 110ரூ. நூலகம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழக அரசுதான் 1948 ம் ஆண்டு சென்னைப் பொது நூலக சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளைச் சீராக்க முயற்சி மேற்கொண்டது என்பது போன்ற பல செய்திகள் இந்த நூலில் இருக்கின்றன. நூலகப் பணிக்கு இணையதளம் எவ்வாறு பயன்படுகிறது? தமிழ் இணையம் எவ்வாறு செயல்படுகிறது? மின் நூல் எனப்படுவது என்ன? என்பது போன்ற பல விவரங்கள் நன்றாகத் தொகுத்துத் தரப்பட்டு […]

Read more
1 3 4 5 6 7 8