கண்ணன் கழல்கள் பணிமினோ

கண்ணன் கழல்கள் பணிமினோ, எஸ். சுதர்சனம், ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா டிரஸ்ட், விலை 100ரூ. கண்ணனின் பாலலீலைகளை, ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் பார்வையில், எழுதி பல தகவல்களை மனதில் பதியவைக்கும்விதம் சிறப்பானது. ஆயர்பாடியில் யசோதை கண்ணனை பாலகனாக கண்டு மகிழ்ந்த அனுபவம், காலம் காலமாக போற்றப்படும் உண்மை. நந்தன், யசோதை பெற்ற, அந்த பாக்கியத்தை கண்ணனின் தந்தையான வசுதேவரும், தாய் தேவகியும் அடையவில்லை. யசோதை பெற்ற இன்பத்தை பெற இயலவில்லையே என்று புலம்புகிறாள் தேவகி. நந்தன் பெற்றனன், நல்வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே […]

Read more

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள், ஜே.எஸ். ஏப்ரகாம், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 60ரூ. மனோபாவத்தை மாற்றிக்கொண்டால், பிரச்னைகள் குறையும் என்பதை, மன இயல் முறையில் விளக்கும் நூல் இது. துன்பங்களை எதிர்கொண்டால், அதை இயல்பாக வெல்லலாம் என்ற, பல கருத்துகளும் இதில் உள்ளன. நன்றி: தினமலர், 13/4/2014.

Read more

சுதந்திர வேங்கை

சுதந்திர வேங்கை, கவுதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 312, விலை 220ரூ. பூலித்தேவனின், வீர வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள சரித்திர நாவல். மதுரையை ஆண்ட கடைசி நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாத நாயக்கரால், பூலித்தேவனின் வீரம் மெச்சப்படுகிறது. காலமாற்றம், ஆற்காட்டு நவாபுகளால் ஏற்படும் அரசிய்ல மாற்றம், ஆங்கிலேயர் கை ஓங்குதல், பாளையக்காரர்களின் எதிர் யுத்தம் மற்றும் வீழ்ச்சி எல்லாம் விரிவாகப் பேசப்படுகிறது இப்புதினத்தில். நவாப் மற்றும் ஆங்கிலேயர் சார்பில், நெல்லைச் சீமையில் வரி வசூலிப்பு தர்பார் நடத்தும் மருதநாயகம், பூலித்தேவனை அடக்கவோ, […]

Read more

சிற்பியின் படைப்புலகம்

சிற்பியின் படைப்புலகம், முனைவர் இரா. மோகன், முனைவர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 198,விலை 100ரூ. பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முக படைப்புகளை படம் பிடித்துக் காட்டும் பத்து முத்தான கட்டுரைகளே இந்த புத்தகம். பாரதிதாசன் போற்றிய படைப்பாளியான சிற்பியின் படைப்புத்திறனை தங்கள் ஆய்வு திறத்தாலும் படைத்து அளிக்கும் திறமையாலும், சொல் ஆற்றலாலும், நமக்க விருந்து படைக்கின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் படிப்போருக்கு இது சுவாரஸ்யம் தரும். சிற்பியின் பல புத்தகங்களை படித்த உணர்வு, இந்த ஒரு புத்தகத்தை படிக்கும்போது கிடைக்கிறது. -ஜிவிஆர். நன்றி: […]

Read more

கல்கியின் சிறுகதை

கல்கியின் சிறுகதை, பாகம்  2, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 640, விலை 345ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-226-7.html புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை என பன்முகத்திறமைகளைப் பெற்றிருந்ததோடு, வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும், விளங்கிய கல்கியின் 40 சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் பாங்கர் விநாயக ராவ் என்ற நாடகமும் இ8ணைக்கப்பட்டுள்ளது. தேவகியின் கணவன், பவானி பி.ஏ.பி.எல்., புன்னை வனத்துப் புலி, மாடத்தேவன் சனை போன்றவை நீண்ட சிறுகதைகளாகும். விடுதலைப் போரில் நேதாஜியின் வீரதீரங்களை நினைவுகூரும் அமர […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 120, விலை 70ரூ. அமெரிக்காவில் ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து கொலை வழக்கு விசாரணை முடியும் வரை, நடந்த விவகாரங்கள் என்ன என்பதை விவரமாக சொல்கிறது இந்தப் புத்தகம். உலகமே வியந்து போற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் இதில் நூலாசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கு […]

Read more

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்

இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம். பல நூற்றாண்டுகளாக கற்பதற்கு கடினமானதாக கருதப்பட்ட, இந்திய தத்துவ நூல்களை எளிமைப்படுத்தி, அவற்றைப் பற்றிய புரிதலை நமக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இந்த நூலிலுள்ள 28 தொடர் கட்டுரைகள், இந்திய மண்ணில் வேர்விட்டு வளர்ந்துள்ள தத்துவங்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், பண்டைய மத்திய கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிட்டு, தத்துவங்களின் உண்மையான மதிப்பையும், தேவையையும் நமக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த நூல் சென்னை தரமணியில் செயல்படும் உலகத் […]

Read more

என்றென்றும் சுஜாதா

என்றென்றும் சுஜாதா, அமுதவன், விகடன் பிரசுரம், பக். 184, விலை 90ரூ. சுஜாதா எழுதிய எழுத்துகளும் சரி, அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியதும் சரி. எல்லாமே தனி சுவாரஸ்யத்தோடு இருப்பவை. நூலாசிரியர் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியவர். அந்த நாட்களில் படிப்படியான அவரது வளர்ச்சியை மகிழ்ச்சியை சில நேரங்களில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை உடனிருந்து பகிர்ந்து கொண்டவர். சுஜாதா தொடர்பான பல வெளியே வராத மிகச் சுவையான தகவல்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். -கேசி. நன்றி: தினமலர், 27/4/2014. […]

Read more

நரேந்திர மோடி

நரேந்திர மோடி, எஸ்.பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த்சென்ஸ், பக். 200, விலை 125ரூ. இன்றைய அரசியலின், சர்ச்சைக்குரிய மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய முகமாக பார்க்கப்படுவது மோடிதான். அவரது பிறப்பில் இருந்து, தற்போதைய பிரதமர் வேட்பாளர்வரை, அனைத்து விஷயங்களையும் இந்த புத்தகம் விளக்குகிறது. கோத்ரா கலவரம் தொடர்பாக, டில்லியில் உள்ள சர்வதேச விவகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான சபை அமைத்த நீதிபதி திவத்தியா குழுவின் விசாரணை முடிவுகளில் முக்கியமானவற்றை ஆசிரியர் இதில் சேர்த்திருக்கிறார். மேலும் 1964 முதல் 2002 வரை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த […]

Read more

சங்ககாலத் தொழில்நுட்பம்

சங்ககாலத் தொழில்நுட்பம், பேராசிரியர் த. சாமிநாதன், அன்னம், பக். 195, விலை 190ரூ. தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில் நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப் பாடல்களில் இருந்து, பல்வேறு உதாரணங்களை காட்டி, இந்த நூலாசிரியர் ஆதாரங்களை நிறுவுகிறார். பயிர்த்தொழில், நெசவு, கட்டுமான இயல், மண்பாண்டம் செய்தல், இரும்புத் தொழில், பொன் தொழில், கடறப்யணம், தோல் பதனிடுதல், கண்ணாடி தயாரித்தல், மகளிர் ஒப்பனை, மதுவகைகள் தயாரிப்பு முறைகளும், தெரிந்திருந்ததையும், அன்றிருந்த தொழில்நுட்பங்களையும், ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். நிறைவு தலைப்பாக, […]

Read more
1 183 184 185 186 187 336