தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்

தமிழில் ஒற்றுப்பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், முனைவர் மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, பக். 96, விலை 50ரூ. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரின் திருமகள் மணிமேகலையார் படைத்தளித்துள்ள நூல் இது. தமிழ்மொழியின் சிறப்பில் துவங்கி, தமிழ் இலக்கணம் குறித்தும், ஒற்றுப்பிழைகள், வலி மிகுதல், வலி மிகாமை குறித்தும், தவறும் சரியும் ஆகும் சொற்கள் பற்றியும் எழுதி, தமிழின் தலையாய நூல்களையும் குறிப்பிட்டு நூல் நிறைவு பெறுகிறது. அறிஞர் பலர் தமிழில் பிழையின்றி எழுத வழிகாட்டியுள்ளனர். அந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த, […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html பண்டைத் தமிழ் மன்னர்கள் என்றாலே சில பிரபலமான பெயர்கள்தான் நம் ஞாபகத்துக்கு வரும். அவர்களைத் தவிர, வீரதீரம் காட்டிய எண்ணற்ற வீரர்கள் இருந்திருக்கின்றனர். அவ்வாறு தமிழ் மரபில் தோன்றி, தங்கள் வீரத்தால் பெருமை பெற்ற அதியன், குதிரைமலைப் பிட்டன், கோடைப் பொருநன், திருக்கண்ணன், திருக்கிள்ளி போன்றோரைப் பற்றி வரலாற்று விவரங்களுடன் விவரிக்கிறார் நூலாசிரியரான புலவர் கா. கோவிந்தன். […]

Read more

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  சென்னை, விலை 145ரூ. மூட நம்பிக்கை மற்றும் மத கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாக கொண்டு மக்களிடையே பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உருது இலக்கியவாதி சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் உதயசங்கர். சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், இவை மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதையே மறந்து விடுகிறோம். நன்றி: தினத்தந்தி.   —- சீனப்பொருள்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், சென்னை, விலை 75ரூ. இப்போது கடைகளுக்குச் […]

Read more

முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. இன்றைய காலகட்டத்தில் சில விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதில் பட்டதாரிகளே தள்ளாட்டத்தை சந்தித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் சரிவர படிக்காதவர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசு துறைகளில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை சரிவர நிரப்பாததால், அவை நிராகரிக்கப்பட்டு கிடைக்க வேண்டிய பணியை இழந்தவர்கள்கூட இருக்கிறார்கள் என்ற தகவலே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக இருக்கிறது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து விடுவிக்கும் பொக்கிஷமாக இந்நூல் வெளியாகி உள்ளது. அரசுத் […]

Read more

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி

குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி?, ஜான் முருகசெல்வம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. குழந்தை வளர்ப்பில் இன்றைய இளம் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். அந்தக் காலம்போல, இவ்விஷயத்தில் வழிகாட்டுவதற்கு இன்று தாத்தா பாட்டிகள் இல்லை. இந்நிலையில் குழந்தை வளர்ப்பில் சந்திக்க வேண்டியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளை வகைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை தெளிவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி.   —- நினைத்ததை நிறைவேற்றும் காரிய சித்தி மந்திரங்கள், ஸ்ரீராம் ஸ்வாமிகள் எடையூர் சிவமதி, அழகு பதிப்பகம், சென்னை, விலை 45ரூ. இறைவனை […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more

வீர சாவாக்கர்

வீர சாவாக்கர், மொழிபெயர்த்தவர் பி.ஆர். ராஜாராம், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. அகிம்சை வழி நல்லதுதான். ஆனால் கொடூரமான எதிரிகளிடம் அகிம்சை முறை சரிப்பட்டுவராது என்ற கொள்கையுடைய சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்போல, இந்தியாவின் சுதந்திரத்திற்காக, சாவாக்கர் நடத்திய ஆயுதப்போராட்டம் மற்றும் ஆங்கிலேய அதிகாரிகளின் கொடுமையான தண்டனைகள், தியாகிகள் அனுபவித்த சித்ரவதைகள், பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —-   திருமணப் பொருத்தம், துபாய் டி. ராமகிருஷ்ணன், […]

Read more

ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி. பாலசர்மா, நர்மதா பதிப்பகம், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-640-6.html திருநீற்றின் மகிமை என்ன? ஜபத்தினால் என்ன பயன்? வழிபாட்டு தத்துவம் என்ன? இவை போன்ற ஆன்மிக சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் புத்தகம். மொத்தம் 350 கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.   —- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுரா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. எழுத்தாளர் செ. சசிகலாதேவி, 25 தலைப்புகளில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை […]

Read more

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும்

காவியத் தலைவரும் காவியக் கவிஞரும், வாலி எழுதிய எம்.ஜி.ஆர். படப்பாடல்கள், வாலி பதிப்பகம், சென்னை. தமிழ்த் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து தன் மறைவுக்குப் பின்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். அவரது திரைப்புகழ் அரசியல் வெற்றியாக மாற்றம் அடைந்ததற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள். எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பாத்திரங்களை அல்லாமல் எம்.ஜி.ஆர். எனப்படும் மாமனிதரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்கள் அவை. எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் என்ற பாடல் அவரது […]

Read more

தோட்டக்காட்டீ

தோட்டக்காட்டீ, இலங்கையின் இன்னொருமுகம், இரா. வினோத், அறம் பதிப்பகம், பெங்களூர். தோட்டத்துக் கவிதைகள் தோட்டக்காட்டீ இலங்கையின் இன்னொரு முகம் என்கிற இரா. வினோத் எழுதியிருக்கும் கவிதைத் தொகுப்பு நூல். இலங்கையின் மலையகத்தில் வசிக்கும் மக்களின் கதையை, அவர்களின் கண்ணீரை, அவல வாழ்வைச் சொல்கிறது. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற ஏழைமக்கள், அடிதட்டு மக்கள் உலகின் பலநாடுகளில் தேயிலை, கரும்புத்தோட்டங்களில் அடிமைகளாக சிக்குண்டு பல தலைமுறைகள் கழிந்துவிட்டன. இலங்கையில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை இலங்கையராகவும் எண்ணாமல் இந்தியராகவும் எண்ணாமல் நாடற்றவர்களாகக் கருதும் காலமும் இருந்தது. அரசியல் […]

Read more
1 185 186 187 188 189 336