முச்சந்தி இலக்கியம்

முச்சந்தி இலக்கியம், ஆ.இரா. வெங்கடாசலபதி, காலச்சுவடு, விலை 140ரூ.   புலவர்களும் இலக்கிய ஆளுமைகளும் படைப்பவை மட்டுமே இலக்கியம் என்றொரு மூடநம்பிக்கை இருக்கிறது. சாதாரண மக்களும் அதிகம் அறியப்படாத படைப்பாளர்களும் உலகின் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை அவர்களும் எளிய முறையில், மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் படைப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட எளியோர் இலக்கியம் குறித்த நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000000581.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணம், ராமச்சந்திர வைத்தியநாத்,பாரதி புத்தகாலயம்   ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழகத்தின் வடகிழக்கு முனையில் உள்ள கடலோர நகரமான சென்னை, முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதன் தொடக்க காலம் தொட்டு சென்னையை வளர்த்தெடுத்தவர்கள், உழைக்கும் ஏழை, எளிய மக்கள். இந்தப் பின்னணியில் சென்னை நகரின் வளர்ச்சியை பின்தொடர்கிறது இந்த நூல்.   நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

சினிமா ரசனை

சினிமா ரசனை, அம்ஷன்குமார், சொல் ஏர் பதிப்பகம், விலை 275ரூ. தமிழ்நாட்டில் சினிமா ரசனை பெரிதாக வளர்ந்திராத காலத்தில், அயல் சினிமாவையும் நம் சினிமாவையும் புரிந்துகொள்வது எப்படி, அவற்றின் கலைநுட்பங்கள், தன்மை குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவந்தவர் இயக்குநர் அம்ஷன்குமார். மகாகவி பாரதி, சர் சி.வி.ராமன் குறித்த அவருடைய ஆவணப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000022755.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

பச்சை நிழல்

பச்சை நிழல், உதயசங்கர், என்.சி.பி.எச்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ. தண்ணீரே இல்லாத ஒரு திடலில் ஒரு புல் முளைக்கிறது. அந்தப் புல்லை இரண்டு சிறுமிகள் கவனமாகப் பார்த்துக்கொள்வதே இந்த நூலின் தலைப்புக்கதை. இதேபோல் சமூகத்தில் நிலவும் பல்வேறு விஷயங்களைப் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/product.php?productid=32735&page=1 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு

கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு, மிகையீல் நைமி, தமிழில்: சிற்பி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை: ரூ.150. தீர்க்கதரிசியின் முறிந்த சிறகுகள்… இளம் வயதிலிருந்து தொடரும் வறுமையும் குடும்பத்தவரின் அகால மரணங்களும், நோய்மையும், விரும்பி ஏற்றுக்கொண்ட தனிமையும், இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், கலை உன்னதங்களின் தோற்றங்களுக்காகவே என்று எண்ண வைக்கிறது கலீல் ஜிப்ரானின் வாழ்க்கை. உயிர் பிரியும் நேரத்திலும் அவருடன் இருந்த உயிர்நண்பர் மிகையீல் நைமி; ஜிப்ரானுடன் இணைந்து எழுதுகோல் இயக்கத்தைத் தொடங்கி அரபி இலக்கியத்தைப் புத்தெழுச்சி பெற வைத்தவர், […]

Read more

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும், வேணு சீனிவாசன், மங்கை பதிப்பகம், பக்.368. விலை ரூ.250. ராமாநுஜருக்குப் பிறகு தோன்றிய மிகப் பிரசித்தமான விசிஷ்டாத்வைத ஆச்சார்யர் வேதாந்த தேசிகர். சம்ஸ்கிருதம் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான நூல்களை இயற்றியவர். ஸ்தோத்திரங்கள், உரைகள், வேதாந்த விளக்கம், கவிதை, நாடகம் என்று பலவாறாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிஇருக்கிறார். அதுமட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வு நடைமுறைகளில் நாம் ஒழுக்கத்துடன் இருந்தாலே, ஆத்மிக விஷயங்களிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க இயலும் என்பதன் பொருட்டு, அவற்றைப் பற்றியும் இரு […]

Read more

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்

சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகள்,  அப்துல்காதர், நேஷனல் பப்ளிஷர்ஸ்,நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.192, விலை ரூ. 180. அன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, கலைகள் போன்றவற்றைச் சொல்லும் சிலப்பதிகாரத்தில், இல்லறம், துறவறம், சமுதாய அறம், அரசியல் அறம் ஆகியவை எவ்வாறெல்லாம் இயல்பாகவே விரவிக் கிடக்கின்றன என்பதை புதிய நோக்குடன், பலவித கோணங்களில், விரிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது இந்த ஆய்வு நூல். அடையாளமற்ற அடையாளம், அறக்கோட்பாட்டு அமுதசுரபி, அகப்புற அற ஆவணம் உள்பட எட்டு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திருக்குறள், புறநானூறு உள்ளிட்டதமிழ் இலக்கியங்கள், பிற நாட்டு […]

Read more

திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும்

திருக்குறள் மூலமும் சரவணப் பெருமாளையருரையும், நாயனார், பதிப்பாசிரியர்: ஜெ.மோகன், பக்.912, விலை ரூ.1,100. பண்டைக் காலத்து இலக்கியங்களுக்கு பழைய ஏட்டுப் பிரதிகளில் உள்ள அரிய உரை நூல்களைப் பதிப்பாசிரியர் பதிப்பித்து வருகிறார். அவற்றுள் திருக்குறள் பதிப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த வரிசையில் சரவணப் பெருமாளையர் உரையான இந்நூலும் சேர்கிறது. இவ்வுரை நூல் 1847, 1862, 1878, 1909,1928-ஆகிய ஆண்டுகளில் வெளிவந்திருக்கின்றன. இத்திருக்குறள் தெளிபொருள் விளக்கம், பரிமேலழகர் உரையைத் தழுவி, திருவள்ளுவ மாலையுரையுடன் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் “பேராண்மை‘ எனக் குறிப்பிடுவதற்கான காரணத்தைக் கூறுமிடத்தில், “புறப்பகைகளை அடக்கும் […]

Read more

காந்தியும் பகத் சிங்கும்

காந்தியும் பகத் சிங்கும், வி.என்.தத்தா, தமிழில்: அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், பக்.160, விலை ரூ.160. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைமன் கமிஷன் வருகையை எதிர்த்துப் போராடிய லாலா லஜபதி ராய் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பழி வாங்கும்விதத்தில் பகத் சிங்கும் நண்பர்களும் சாண்டர்ûஸச் சுட்டுக் கொன்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக 1929 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 -ஆம் தேதி தில்லி மத்திய சட்டசபையில் பகத் சிங், தத் ஆகியோர் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். அதனையொட்டி […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள் , முத்தாலங்குறிச்சி காமராசு; காவ்யா,  பக்.1042, விலை ரூ.1000. தமிழகத்தின் தென்னாடு என குறிப்பிட்டாலும் நெல்லைச் சீமையை மையமாக வைத்து 18 ஜமீன்களின் வரலாற்றையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார். மறவர், நாயக்கர் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஜமீன்களின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் நூலில் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. ஊர்க்காடு ஜமீனில் சிலம்பத்தில் சுப்புத்தேவர், அய்யங்கார் வரிசை குறித்து படிக்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது. கழுதையை வாயால் கடித்து தூக்கி எறிந்த சுந்தரத்தேவர், குத்தாலிங்கத் தேவர், கொள்ளையர்களாக இருந்து தற்போது தெய்வமாக வணங்கப்படும் […]

Read more
1 160 161 162 163 164 505