மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சத்யா பதிப்பகம், பக். 200,விலை 150ரூ. மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார். மனை மாட்சி பேசும் மங்கல நுால்! நன்றி:தினமலர்,15/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   […]

Read more

முகத்தில் முகம் பார்க்கலாம்

முகத்தில் முகம் பார்க்கலாம், கவிஞர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. இலக்கியச் செல்வர் ஏர்வாடி நீண்ட நெடுங்காலமாக எழுதி வருபவர். ‘கவிதை உறவு’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வருகிறார். அதன் மூலமாக எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமகன். இந்தத் தொகுதியில் அர்த்தமும், ஆழமும் மிகுந்த பல கவிதைகளை காணலாம். ஆளை வைத்து ஆளை அடித்து முடிக்கலாம் – பின் தாளை வைத்து வழக்கை மூடி மறைக்கலாம் என மனம் நொந்து பேசுவது உட்பட பல நிதர்சனங்களைக் […]

Read more

திருக்குறள் குறளின் எளிய குரல்

திருக்குறள் குறளின் எளிய குரல், டாக்டர் நா.வெங்கட், தி ராமன்ஸ் புக்ஸ், பக். 280, விலை 40ரூ. திருக்குறளுக்கு 19 ஆம் நூற்றாண்டு முடிய பதின்மர் உரைகளே இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான உரைகள் உருவாகி, உலகமெங்கும் சென்றுவிட்டன. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், உலகின் மூத்த மொழியாகிய தமிழில் இதை இயற்றினாலும், இதை ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும், குறிப்பிட்ட நாட்டினருக்குமாக இன்றி, உலகின் அனைத்து மக்களுக்குமான ஒழுக்கம் நிறைந்த வாழ்வியலைக் கற்பிக்கும் உலகப் பொதுமறையாக ஈர்த்துள்ளார். […]

Read more

கந்தன் கதை

கந்தன் கதை, இரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலை 450ரூ கந்தபுராணம் என்ற பெயரைக் கேட்டவுடன், புராணம் எல்லாம் நமக்கு எதற்கு என்று தள்ளிவிடும் இளைய தலைமுறையினரும், கந்தனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இந்தப் புத்தகம், நாவல் வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. கந்தபுராணத்தில் விடுபட்டுப் போன பக்கங்களைக் கற்பனை கலந்து, அவற்றை கந்தபுராணத்துடன் இணைத்து இந்த நாவலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார். இந்த நாவலில் ஆனமீகக் கருத்துகளை சொல்வதோடு, அவற்றை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, சம்பவங்களைச் சொல்லி இருப்பதால் படிக்க ருசிகரமாக […]

Read more

இலக்கியத்தில் தேவதாசிகள்

இலக்கியத்தில் தேவதாசிகள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை 165ரூ. சிவன் தனது தலை முடியில் உள்ள ஆதிசேடனை நடனமாடச் சொன்ன போது ஆதிசேடன் தலையில் இருந்து வந்த 5 பேரில் முதலில் வந்தவர்கள் ‘தாசிகள்’ என்ற தகவலைத் தரும் இந்த நூல், தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இருந்த கணிகையர், நிதிநூல் காலத்து விரைவின் மகளிர், நாயக்கர் காலத்து ஆடல் மகளிர் ஆகியோரின் ஒன்றுபட்ட இனம்தான் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றனர் என்ற வரலாற்றுச் செய்தியையும் பதிவு செய்த இருக்கிறது. பக்தி இலக்கியங்களிலும், திரைத் தமிழிலும் […]

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வகைத் தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்து கொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்த நூல் காணப்படுகிறது. மூவகைத் தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூலில் இடம் பெற்று இருக்கிறது. தமிழின் பலவகையான நாடகங்கள், கூத்துகள், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஆடற்கலை, சங்ககாலம் முதல் தற்காலம் வரையிலான […]

Read more

ரஜினிகாந்த் எனும் காந்தம்

ரஜினிகாந்த் எனும் காந்தம், ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. சாதாரண நடிகராகத் திரைப்படத் துறையில் நுழைந்து, குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக, அதே சமயம் எதுவும் விட்டுப்போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரை அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும், ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிரினம் தோன்றியது எவ்வாறு என்பதை ஆய்வு நோக்கிலும், அதே சமயம் அறிவியல் துறையைச் சாராத சாமானியர்களும் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த நூல் தயாராகி இருக்கிறது. உயிரினம் தோன்றியது குறித்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய கருத்துக்கள் முதல் தற்காலத்தில் செயற்கையாக உயிரை மனிதன் படைத்தது வரையிலான தகவல்கள் எளிய நடையில் தரப்பட்டு இருக்கின்றன. மனித செல்கள் பற்றிய டி.என்.ஏ. என்பது […]

Read more

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள்

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள், குடவாயில் பாலசுப்ரமணியன், சூரியன் பதிப்பகம்   தமிழகத்தில் பல முக்கியமான கல்வெட்டுகள் இருக்கும் இடங்கள் கோயில்கள். பண்டைத் தமிழ் மன்னர்கள் கோயில்களைக் கட்டியதுடன் தங்களைச் சார்ந்த பல செய்திகளை கல்வெட்டுகளிலேயே பதித்துவைத்தார்கள். கோயில் கல்வெட்டுகள் பகரும் செய்திகள் தொடர்பாக ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தொல்தமிழ் எழுத்துகள் ஓர் அறிமுகம்

தொல்தமிழ் எழுத்துகள் ஓர் அறிமுகம், செந்தீ நடராசன், என்.சி.பி.எச்.   இந்தியாவிலேயே அதிகக் கல்வெட்டுகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆவணப் படுத்துதலில் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தொன்மையானது. கீழடிச் சான்றுகளும் அதையே நமக்கு உணர்த்துகின்றன. இந்தப் பின்னணியில் தொல்தமிழ் எழுத்துகள், அவை கூற நினைக்கும் செய்திகளை இந்த நூலின் வழியாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மூத்த சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் செந்தீ நடராசன்.   நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more
1 159 160 161 162 163 505