ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ.ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் கிறிஸ்துவ இலக்கியங்கள் பற்றிய […]

Read more

ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி போதனைகள், தமிழில் எஸ்.ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை புதிய முறையில் எவ்வாறு அணுகி அவற்றுக்குத் தீர்வு காண்பது என்பது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் ஆலோசனைகள் வழங்குவதில் புகழ்பெற்ற தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமர்த்தியின் கருத்துகள் ஏராளம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஒரு சில இடங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், சொற்பொழிவுகள், பேட்டிகள், கேள்வி பதில்கள் என்று பல இடங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட சிந்தனைத் துளிகள் தொகுக்கப்பட்டு, அனைவரும் படிக்கும் வகையில் எளிய முறையில் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more

உயர்ந்தவர்கள்

உயர்ந்தவர்கள், ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள், கோபாலஸ்வாமி, ப்ளு ஓசன் புக்ஸ் பிரிசம் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், விலை 180ரூ. பாரபட்சமான உலகில், ஆராதிக்கப்படாமலும், அங்கீகாரம் கிடைக்காமலும் தங்களுக்குள் இருக்கும் தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் சாதனையாளர்களின் சாகசங்களை விவரிக்கிறது இந்நுால். இச்சாகசங்களுக்குப் பின்னால் மறைந்துள்ள துன்பங்களை எல்லாம் பார்க்கும்போது, நாம் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் துளியிலும் மிகச் சிறிது என்பதை உணர முடிகிறது. ‘பல்மனரி பைப்ரோசிஸ்’ நோயால் அவதிப்பட்டுக் கொண்டே, பிராண வாயு மூகமூடியை அணிந்து, ‘நிகழ் காலத்தில் வாழ்வதும், மகிழ்ச்சியாக […]

Read more

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள், சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், விலை 175ரூ. நீண்டதாகப் பலரும் கருதும் இந்த வாழ்க்கை உண்மையில் மிகவும் சிறியது. கண் மூடி இமைப்பதற்குள் காலம் பறந்து விடுகிறது. இதை உணர்ந்தோர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். பலர் இலக்குகள் இன்றி, கிடைத்த வாழ்க்கையில் சமரசமாகி நீர்த்து விடுகின்றனர். வாழ்க்கையின் இடையில் வரும் ஒவ்வொரு சவாலான கட்டத்திலும் வெல்வதற்கு முயல்வதே ஊக்கமுள்ளோரின் இலக்கு. எங்கும் எதிலும் எப்போதுமே நேர்மையோடு முதன்மையாக நிற்க விரும்புவதே, சிறந்த […]

Read more

நீரிழிவு நோய் இருந்தாலும் இயல்பான வாழ்க்கை வாழலாம்

நீரிழிவு நோய் இருந்தாலும் இயல்பான வாழ்க்கை வாழலாம், எம்.சீனிவாசன், விலை 120ரூ. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அச்சமின்றி நீண்டகாலம் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கான எளிய வழிமுறைகளை இந்த நூல் தருகிறது. நீரிழிவு நோய் பற்றிய அனைத்து தகவல்களும் சிறு, சிறு கட்டுரை வடிவத்தில் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் தொடர்பாக அனைவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதோடு, கட்டுரைகளின் ஊடே, நீரிழிவு நோயை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நகைச்சுவை துணுக்குகளும் கொடுத்து இருப்பது படிக்க சுவாரசியமாக உள்ளது. நன்றி: தினத்தந்தி […]

Read more

ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம்செல் ஓர் உயிர் மீட்புச் செல், இரா.சர்மிளா, காவ்யா, விலை 120ரூ. நமது உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் செல்களால் ஆனவை என்பதையும், அந்த செல்களில், ‘குருத்தணு’ எனப்படும் ஸ்டெம் செல்களின் சிறப்புகளையும் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் தந்து இருப்பதைப் பாராட்டலாம். ஸ்டெம் செல்கள் என்றால் என்ன? அவை நமது உடலில் ஆற்றும் பணிகள், ஸ்டெம் செல்களை சேமித்து வைத்து அதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது எவ்வாறு? ஸ்டெம் செல் வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது போன்ற பல வினாக்களுக்கு பயனுள்ள […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம்

பிற்காலச் சோழர் சரித்திரம், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ஜீவா பதிப்பகம், விலை 570ரூ. தமிழகத்தில் கி.பி. 9-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இருந்து 13-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி வரை சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து சோழ மன்னர்கள் ஆட்சி செய்த முழுமையான வரலாறு, இந்த நூல் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சோழ மன்னர்கள் ஒவ்வொருவரும் எந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தனர், அவர்கள் ஆட்சி முறை, குடவோலை மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்ட விதம், நிலங்களை அளக்க எடுக்க நடவடிக்கைகள், நீர்ப்பாசன திட்டங்கள், அப்போது நடைபெற்ற போர்கள் மற்றும் […]

Read more

தி டிவைன் சைவ நாயன்மார்ஸ்

தி டிவைன் சைவ நாயன்மார்ஸ், துர்காதாஸ் என்.கே.சுவாமி, பிரேமா பிரசுரம், விலை 300ரூ. தமிழில் அறுபத்து மூவர் கதைகள் என்னும் பெயரில் எழுதப்பட்டு, 1967ல் வெளிவந்துள்ளது. ஐம்பத்தொரு ஆண்டுகளுக்குப் பின் இந்த நுால் எளிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இந்த அறுபத்து மூவர் வரலாற்றை எழுதுவதற்கு முன், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைப் படைத்த சேக்கிழார் வரலாற்றை இந்த நுால் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த நாயன்மார் வரலாற்றை விளக்கும் வகையில் பக்கத்துக்குப் பக்கம் அழகிய கறுப்பு […]

Read more

தேவரடியார்

தேவரடியார், கலையே வாழ்வாக, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 250ரூ. 1947-ம் ஆண்டு வரை தமிழகக் கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பற்றிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர் அ.வெண்ணிலா, முனைவர் பட்டத்திற்காக தமிழக வரலாற்றை தீவிரமாக ஆய்வு செய்து, தேவதாசிகள் எனப்படும் தேவரடியார்கள் பற்றிய மிக விஸ்தாரமாக எழுதியுள்ள இந்த நூலில் வியப்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கோவில்களில் ஏராளமாகக் காணப்படும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால இலக்கியங்கள் என்று அனைத்து விதமான தரவுகளில் […]

Read more

அள்ள அள்ள புதையல்

அள்ள அள்ள புதையல், ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை110ரூ. ஏராளமான பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பது நூற்றுக்கணக்கான துணுக்குச் செய்திகளாக இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்பதும், செல்வம் பெருக, வழக்குகளில் வெற்றிபெற, கொடுத்த கடனை திரும்பப் பெற என்ன செய்யவேண்டும் என்பதும், பிரபஞ்சத்துடன் தொடர்புகொள்வது எப்படி என்பது குறித்தும் இந்த நூலில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி 3/7/19, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 203 204 205 206 207 505