எல்லா உணவும் உணவல்ல

எல்லா உணவும் உணவல்ல, பாலு சத்யா, விகடன் பிரசுரம், பக். 144, விலை 125ரூ. மனித வாழ்விற்கு உண்ண உணவு முதல் தேவையாகும். உணவு தயாரிப்பதில், உண்பதில் எவ்வளவு கவனம் தேவை என்பதை இந்நுால் மிக அருமையாக விளக்குகிறது. பல உணவுப் பொருட்களையும் வீட்டிலேயே தயாரித்து உண்ண வேண்டும் என்றும், உணவே மருந்தாக நினைத்தால் வியாதிகள் வராது என்றும், உடல் ஆரோக்கியம் பெறத் தேவையான உணவுகளைக் கூறுவதும் இந்நுாலின் சிறப்பாகும். பழைய சோறின் அருமைபெருமைகளை விளக்குவதும், சமோசா வேண்டாம் என்பதற்கான காரணங்களை விளக்குவதும் (பக்., […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு,புலவர் செ.இராசு, வேலா வெளியீட்டகம், பக். 126, விலை 100ரூ. தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், வேறொரு நாட்டுடன் கடுமையாக போரிட்டு கைப்பற்றுவது தான் பண்டைய காலந்தொட்டு நடந்து வருகிறது. ஆனால், இந்திய நாட்டின் பூர்வீக நிலப்பகுதியான ஒரு தீவோ, மிக எளிதாக இன்னொரு தீவு நாட்டிற்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு இன்றும் மண்ணின் மைந்தர்களை உறுத்திக் கொண்டிருப்பதன் விளைவே இந்நுால். வளர்ச்சிப்பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த இந்தியா, இராமநாதபுர மாவட்டத்துக்குச் சொந்தமான, மீன்வளமும் கனிம வளமும் நிறைந்த கச்சத்தீவை, […]

Read more

வைகைக் கதைகள்

வைகைக் கதைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 600ரூ. வைகை நதியின் சிறப்புப் போல வைகை நதிக் கரையோரம் பிறந்த எழுத்தாளர்களும் வளமை மிக்கவர்கள். அத்தகைய எழுத்தாளர்களில் கவிஞர் வைரமுத்து, வேல ராமமூர்த்தி, இந்திரா சவுந்தரராஜன், நா. பார்த்தசாரதி, தி.சு. செல்லப்பா உள்பட 56 ஜாம்பவான்கள் எழுதிய அற்புதமான கதைகள் பஞ்சாமிர்தம் போல சுவையுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அனைத்துக் கதைகளிலும் மதுரை வட்டார மணம் வீசுவதை அனுபவிக்க முடிகிறது. இந்தக் கதைகளுடன் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் முகவரி உள்பட சிறு குறிப்பையும் தந்து இருப்பது பாராட்டத்தக்கது. […]

Read more

சிவாஜி ஆளுமை பாகம் 3

சிவாஜி ஆளுமை, பாகம் 3, மு.ஞா.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. நடிப்புக்காகவே பிறந்த சிவாஜியின் நாடகம், திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல, அரசியல் பணிகள், தலைவர்களுடன் நட்பு என பல பரிணாமங்களையும் 348 பக்கங்களில் ஆழமாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல். சிவாஜி பற்றி நாம் அறியாத பல தகவல்களை தேடிக்கண்டுபிடித்து அருமையாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். எம்.ஜி.ஆர். படத்துக்காக தி.மு.க.அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை அடைத்து போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி என்பது அனைவருக்கும் தெரியும். […]

Read more

தாமிரபரணி புராணம்

தாமிரபரணி புராணம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.216, விலை 200ரூ. மகா புஷ்கரம் விழா கண்ட தாமிரபரணி நதிக்குப் பல பெருமைகள் உள்ளன. கரைப் பகுதிகளில் பாடல் பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் அமைந்த சிறப்புக்குரியது. இந்த நதிக் கரையில், உலகப் பொதுமறை நுாலுக்கு பிழை திருத்தம் செய்யப்பட்டது மட்டுமன்றி, அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்துள்ளனர் என்பது வரலாறு. பாபவிசை தீர்த்த மகிமை, ஐந்து வகை நிலங்களும் தாமிரபரணியும், தாமிரசபை சிற்பங்கள், தாமிரபரணி நதி உற்பத்தி புராணம், நதியோரம் கிடைத்த நாணயங்கள், தாமிரபரணி […]

Read more

களவும் கற்று மற

களவும் கற்று மற, எஸ்.விஜயன், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 75ரூ. சிறுவர் – சிறுமியரின் ரசனைக்கு இயன்றதொரு விருந்தை படைக்கிறது இந்நுால். திசை மாறிய இளைஞனின் தறிகெட்ட சிந்தனையுடனான சாத்வீக பயணத்தை மேற்கொள்கிறது. கதை நெடுக இளைஞனை ஆக்கிரமித்து வரும் கவிதைகளின் பின்னணி பற்றி, இந்நுாலின் இறுதியில் சிறிய குறிப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். அந்த குறிப்பும், இந்நுாலின் தலைப்புமே, அழகிய வண்ணப்படங்களோடு சிறார்கள் ஐக்கியமாகிட உதவும் திறவுகோல்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

விவசாயம்

விவசாயம், டாக்டர் வி.ஜி.சந்தோசம், கைத்தடி பதிப்பகம், பக்.148, விலை 140ரூ. விவசாயம் இல்லையென்றால் வாழ்வு இல்லை. விவசாயி என்ற வீரத் திருமகன், விந்தைகள் பல புரிந்து, வியர்வை சிந்தி, உணவிற்கான தானியங்களை உற்பத்தி செய்து, உலக உயிர்களுக்கு உன்னதம் செய்கிறான் என்ற சிறப்பைச் சொல்கிறார் இந்நுாலாசிரியர். உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், மனித வாழ்வில் தினை வகைகளின் பங்கு, உலக அரங்கில் விவசாயத்தின் நிலைப்பாடு, தோட்டக்கலைத் துறையால் விவசாயிகளின் முன்னேற்றம், உழவனின் பெருமை, இயற்கை உரம் தயாரிக்கும் முறை, பனை மர விவசாயம், சொட்டு […]

Read more

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 100ரூ. சிங்கப்பூர் என்றதுமே நம்மில் பலருக்கும் ஒரு அதிநவீன நகரம் தான் நினைவுக்கு வரும். சிங்கப்பூர் சென்று வந்தவர்களிடம் கேட்டால், அங்கு நிலவும் துாய்மை, நவீன வசதிகள் பற்றி வாய் கிழிய கூறுவர். ஆனால், சிங்கப்பூரின் உண்மையான வரலாறு., அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தக் குறையை போக்கும் வகையில், சிங்கப்பூரைப் பற்றி அனைவரும் தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில், ஆசிரியர் மாலன் எழுதியுள்ள புத்தகம் சிறப்பாக […]

Read more

தனிமையில் ஒரு கோயில்

தனிமையில் ஒரு கோயில், என்.நாகராஜன், ஸ்வேதகலா புக்ஸ், பக். 208, விலை 160ரூ. எளிய நடையில் தெளிவான நேரடித்தன்மை கொண்ட, 16 சிறுகதைகளும் இந்நுாலாசிரியரின் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கைப் பாதையில் காண்பனவும், உணர்வனவும் கதைக்குக் கருப்பொருளாகி இருப்பதை இந்நுால் வெளிப்படுத்தியுள்ளது. ‘தனிமையில் ஒரு கோவில்’ எனும் கதை, கோவிலுக்கு நேர்ந்து கொண்ட ஓர் அனுபவத்தினுாடே மனிதர்களின் மனோபாவங்களைப் படம் பிடிக்கிறது. பேருந்தில் செல்லும் போது நடத்துனர் பாக்கி சில்லரை தராததோடு, அவன் எப்படிப்பட்டவன் என்பதை விளக்கும் கதை, ‘இருளனைத்தும் புலரும்’ என்ற […]

Read more

காலத்தின் வாசனை

காலத்தின் வாசனை, தஞ்சாவூர் கவிராயர், கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட், பக். 144, விலை 160ரூ. நிற்பதுவே… நடப்பதுவே, திண்ணைகளின் பொற்காலம்! ரயில் என்ன சாப்பிடும்? கொசுவலை கோலாகலம், கைமாற்று வெண்பா, விசிறி வீடு, ஜவ்வாது பூனையும் ரஹீம்பாய் அத்தர் கடையும், வெயில் மனிதர்கள், வளையல்காரர் வராத தெரு, சக்கரவர்த்தியின் ஆவி, காலை பேப்பரும் காபி டம்ளரும், வள்ளலாரைத் தேடிய சி.ஐ.டி., கூஜாவின் கோபம், வீட்டுக்கு வரும் டாக்டர், சந்துகளுக்கும் சரித்திரம் உண்டு’ உள்ளிட்ட சிறுகதைகள், படிக்கும் வாசகரின் மனதில் முத்திரை பதிக்கும் என்பது திண்ணம். நன்றி: […]

Read more
1 262 263 264 265 266 505